32°C

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு

நெல் பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பு

நெல் பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சாகுபடி முறைகள் (Cultural methods) 1.மண்ணை ஆழ உழும்போது மண்ணுக்கடியில் வாழும் பூச்சிகளும், நோய்க்காரணிகளும், களைகளும் புதைக்கப்படுகின்றன அல்லது மண்ணுக்கு மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. 2.தழைச்சத்து அதிகம் இடுவதால் பூச்சி, நோய்கள் அதிகரிக்கும். எனவே சிபாரிசு செய்யப்பட்ட தழைச்சத்து உரத்தினை பிரித்து இட்டு பூச்சி நோய் தாக்குதலைக் குறைக்கலாம். 3.விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைத்து பூச்சி நோய் தாக்குதலை தவிர்க்கலாம். 4.நெல் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி விட்டு நடவு செய்வதால் நெல் […]

August 31, 2017 editor news
பருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பு

பருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

  சாகுபடி முறைகள்(cultural methods): 1.கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணுக்கு அடியில் வாழும் பூச்சிகள், புழுக்கள், நோய்க்கிருமிகள் வெளியே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. 2.அறுவடைக்குப்பின் எஞ்சிய பயிர் பாகங்களை சேகரித்து அழித்து மறைந்து வாழும் தண்டுக்கூன் வண்டு, மாவுப்பூச்சி, அசுவினி ஆகியவற்றைத் தவிர்க்கலாம். 3.தொடர்ந்து பருத்தியைப் பயிரிடாமல் மாற்றுப் பயிரிட்டு பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம். உம். பருத்திக்குப் பின் நிலக்கடலை. 4.பருவத்தே பயிரிடுவதன் மூலம் அதாவது ஒரு பகுதியில் 15 நாள் காலவரையரைக்குள் விதைத்து பூச்சி நோய் […]

August 31, 2017 editor news
பயிர் இனப்பெருக்கத்தின் நோக்கம்(Objectives of plant breeding): பயிர் பாதுகாப்பு

பயிர் இனப்பெருக்கத்தின் நோக்கம்(Objectives of plant breeding):

  1.நடைமுறையில் உள்ள பயிர் இரகங்களைக் காட்டிலும் உயர்ந்த பயிர் இரகங்களைப் பெருக்கம் செய்தல். 2.பயிர் விளைச்சலை அதிகரித்தல். 3.விளைபொருட்களின் தரம் உயர்த்துதல். 4., பூச்சிநோய் காரணிக்கு எதிர்ப்பு சக்தி ஊட்டுதல். 5.வறட்சி, உவர் தன்மை, அதிக வெப்பம், குளிர், பனி ஆகியவற்றை தாங்கி வளரும் தன்மையை அதிகரித்தல். 6.குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் பெறுதல். 7.ஒளி மற்றும் வெப்ப மாறுபாட்டால் பாதிப்புக்குள்ளாத இரகங்களைத் தோற்றுவித்தல். 8.ஒரே சமயத்தில் பயிர் முதிர்ச்சி அடைதல். 9.பயிருக்குத் தேவையான புறப்பண்புகளைத் தோற்றுவித்தல். […]

August 30, 2017 editor news
பூச்சி மேலாண்மை பயிர் பாதுகாப்பு

பூச்சி மேலாண்மை

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க பல வகையான பொறிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி காண்போம்….. 1) விளக்குப்பொறி வயலில் 3அடி உயரத்தில் 60W மின்சார விளக்கை வைக்க வேண்டும். அதற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி இரண்டு சொட்டு மண்ணெண்ணெய் அல்லது Dichlorovos மருந்தினை விட்டுவிடவேண்டும் . இந்த விளக்கு வெளிச்சத்திற்கு வருகின்ற பூச்சிகள் விளக்கைச்சுற்றி வட்டமடிச்சு பார்த்துவிட்டு கீழே இருக்கின்ற பாத்திரத்தில் விழுந்து இறந்துவிடும். வளக்குப்பொறியை மாலை 6 மணி […]

August 12, 2017 senthamil
மயில் தொல்லைக்கு தீர்வு! பயிர் பாதுகாப்பு

மயில் தொல்லைக்கு தீர்வு!

“இயற்கையாகவே திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்கள் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக விராலிமலைப் பகுதியில் மயில்கள் எண்ணிக்கை அதிகம்தான். மயில்கள் மட்டுமல்ல பல இடங்களில் குரங்குகளும் வயல்வெளிகளில் நடமாடி, விவசாயிகளின் பயிர்களுக்குச் சேதத்தை உண்டு பண்ணுகின்றன. இந்தப் பறவைகள் மற்றும் விலங்குகளுக்குத் தேவையான உணவு, காடுகளிலேயே கிடைத்தால், அவையெல்லாம் வயல்வெளிகளுக்கு வரவில்லை. காடுகளில் வன விலங்குகளுக்கு உணவு இல்லாமல் போனதால் அவை உணவுக்காக விவசாய நிலங்களுக்கு வருகின்றன. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்களை விரட்ட ஒலி எழுப்புவது, […]

July 15, 2017 Editor
தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை! பயிர் பாதுகாப்பு

தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை!

  ‘பருவத்தே பயிர் செய்’ என்று நம் முன்னோர் சொல்லி வைத்துள்ளனர். ஆனால், காவிரியை நம்பிக் காத்திருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளுக்குப் பருவத்தில் பயிர் செய்வது என்பது சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. சம்பா பருவ நெல் சாகுபடிக்கு… செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விதை விட்டு, நாற்று உற்பத்தி செய்ய வேண்டும். அக்டோபர் 10-ம் தேதிக்குள் நாற்று நடவுப்பணிகளை முடிக்க வேண்டும். அப்படியில்லாமல் தாமதமானால், ஐப்பசி மாத அடைமழையில் பயிர்கள் சிக்கி பெரும் பாதிப்படையும். தவிர, ஜனவரி 28-ம் தேதி […]

July 9, 2017 Editor
பூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு பயிர் பாதுகாப்பு

பூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக மரப்பயிர்களுக்கு ஊடுபயிராக வேம்பை வளர்த்து பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்லாமல் வேப்பங்கொட்டை மூலம் பூச்சிவிரட்டிகளையும் கிருமிநாசினிகளையும் தயாரிக்கலாம். வேம்பு நேரடியாக பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சிவிரட்டியாக செயல்படுகிறது. வேம்பின் இலை,பூ,விதை,இலை,பட்டை, ஆகிய ஒவ்வொன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அந்துப்பூச்சி, கூன்வண்டு,காண்டாமிருக வண்டு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிவகைகளை வேம்பு கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம் பூச்சி தாக்குதலால் பயிர்களுக்கு பரவும் நோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும். வேம்பில் உள்ள அசாடிராக்டின் என்ற அமிலப்பொருளே பூச்சிக்கொல்லி தன்மைக்கும் வேம்பின் […]

July 7, 2017 Editor
பஞ்சகவ்யா – பல்கலைக்கழகத்தின் பரிசோதனை முடிவு! பயிர் பாதுகாப்பு

பஞ்சகவ்யா – பல்கலைக்கழகத்தின் பரிசோதனை முடிவு!

ஆரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பாமர மக்களிடம் புழக்கத்தில் இருந்த பஞ்சகவ்யாவை பல்கலைக்கழகம் வரை கொண்டு சேர்த்தவர்களில் ஒருவரான கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறையின், தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். சோமசுத்தரத்தின் அனுபவங்களை கடந்த இதழில் பார்த்தோம். மேலும் பஞ்சகவ்யா குறித்து சோமசுத்தரம் சொன்ன தகவல்கள் இங்கே… “ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் 5 வருஷம் வேளாண் அலுவலரா வேலை பார்த்தேன் .அப்போ, […]

July 1, 2017 Editor
பழ ஈக்களுக்கு சிக்கன கவர்ச்சிப் ”பொறி”! பயிர் பாதுகாப்பு

பழ ஈக்களுக்கு சிக்கன கவர்ச்சிப் ”பொறி”!

தோட்டக்கலைப் பயிர்களான பழமரங்கள், காய்கறிகள் போன்றவைகட்கு கெடுக்கக்கூடியது ‘பழ ஈ’க்கள்  சின்ன ஈக்கள் தானே என்று இருந்து விட்டால் மகசூலில் பெரிய பாதிப்பையையும், விற்பனையின் போது தரக்குறைவையும் ஏற்படுத்திவிடும்.  ‘பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டே’ எனும் பழ ஈக்கள் வெள்ளை நிற இறக்கைகளையும், பழுப்பு மற்றும் சாம்பல் புள்ளிகளையும் உடையது. அளவில் சிறியதாக இருக்கும். ‘சிலியேட்டஸ்’ செம்பழுப்பு நிற உடல் அமைப்பைக் கொண்டது. ‘ஜீனேட்டோ’ மஞ்சள் நிறமாகவும் இடுப்பில் மஞ்சள் பட்டைகளை உடையது. தக்காளி, பூசணி வகை, புடலை, திராட்சை, மாதுளை, […]

July 1, 2017 Editor
பூச்சி விரட்டி – வசம்பு இயற்கை உரம்

பூச்சி விரட்டி – வசம்பு

திருஷ்டி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளில் கன்னத்தில் வட்டமாக கருப்பு நிறத்தில் ஒரு பொட்டு வைப்பார்கள். ஆனால் அது திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல,புதிதாக பிறந்த குழந்தைகளின் ரத்தத்னை உறிஞ்ச வரும் கொசு போன்ற ரத்த உறிஞ்சிகள் கன்னதில் கடிக்கும்போது வரும் கசப்பு கொசுக்களை குழந்தைகள் பக்கம் வராதபடி செய்யும் என்பதற்காக வைப்பார்கள். உண்மையில் வசம்பு ஒரு கிருமி நாசினி என்பதுடன் சிறந்த பூச்சிவிரட்டி. உங்க வீட்டில் கொசு அதிகம் இருக்கும் இடத்தில் வசம்பு மற்றும் வேப்பப்புண்ணாக்கினை சேர்த்து […]

May 24, 2017 Editor