32°C

Editor

வீட்டுத்தோட்டத்திற்கான உரங்கள்..! இயற்கை உரம்

வீட்டுத்தோட்டத்திற்கான உரங்கள்..!

புறக்கடைத் தோட்டத்தில் செடிகள் நடுவதற்கு முன்பாக, மண்கலவையை உருவாக்க வேண்டும். நல்ல வளமான மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து, செடி வளரப்போகும் பிளாஸ்டிக் பையில் முக்கால் பங்கு நிரப்பி வைக்க வேண்டும். பைகளில் விதை அல்லது நாற்றுகள் என எது நடுவதாக இருந்தாலும், பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, விதைநேர்த்தி செய்த பிறகுதான் நடவேண்டும். வேர் சம்பந்தமான நோய்களைத் தடுத்து, தண்டு ஊக்கமாக வளர இது அவசியம். கொடி வகை மற்றும் […]

June 25, 2016 Editor
வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் ! இயற்கை உரம்

வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் !

கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி […]

June 24, 2016 Editor
மணத்தக்காளி சாகுபடி இயற்கை விவசாயம்

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம். மணத்தக்காளி, களர்நிலம் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் வளரும். செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரும். சாகுபடிக்கு தனியாக பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நிலத்தை புழுதியாக உழவு செய்து, 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் […]

June 23, 2016 Editor
மரச்சாம்பலும் விவசாயமும் செய்திகள்

மரச்சாம்பலும் விவசாயமும்

மரச்சாம்பல் என்பது மரத்தை எரிப்பதனாலோ அல்லது மரத்துகள்களை எரிப்பதாலோ கிடைக்கும். இந்த மரச்சாம்பலில் பொட்டாசியம், பொட்டாசியம் கார்பனேட் உள்ளதால் விளைநிலங்களில் உள்ள மண்ணிற்கும், பயிர்களுக்கும் மிகவும் ஏற்றது. மண்ணில் உள்ள தேவையில்லாத அசிடிட்டிக்களை போக்கவல்லது மரச்சாம்பல். மேலும் மரச்சாம்பலில் உள்ள 13 வகையான சத்துக்கள் மண்ணிற்கு வளமளிக்கின்றன. ஆனால் சாம்பல் பயன்படுத்தும்போது மிக கவனமாக கையாள வேண்டும். மண்ணில் அதிகமான ஆசிட் இருந்தாலோ அல்லது பொட்டாசியம் இருந்தாலோ அதற்கு மரச்சாம்பல்தான் சிறந்த தீர்வு. மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral  

June 21, 2016 Editor
மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள் கீரை வகைகள்

மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை குணமாகும். மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும். ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும். ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன், ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் […]

June 20, 2016 Editor
விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT) செய்திகள்

விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT)

விவசாயத் துறையில்தான் தொழில்நுட்பம் மிகமிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் பொருட்களின் இணையம் (IoT) தொழில்நுட்பம் விவசாயிகளை மிக நுட்பமான விவசாயிகளாக மாற்றவுள்ளது. ஆம் சென்சார்கள் எனப்படும் நுண்ணுணர்விகள் வழியாக விவசாயத்தை இன்னமும் மேம்படுத்தலாம். பெருகி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு பொருட்களின் இணையம் (IoT) இன்னொரு வரப்பிரசாதம் ஆகும். ஆம் இதற்கு முன் தண்ணீரை பொத்தாம் பொதுவாக பயிர்களுக்கு இறைத்துவிடுவோம். ஆனால், “பொருட்களின் இணையம்” உணர்வி மூலம் பயிர்கள் உள்ள மண்ணில் புதைத்து வைத்துவிட்டு வேரை கண்காணிக்கிறார்கள். […]

June 18, 2016 Editor
பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள் கீரை வகைகள்

பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையை, சித்தர்களும், முன்னோர்களும் 6 வகைப் பருவங்களாகப் பிரித்துள்ளனர். கீரைகள் பற்றிய இந்தப் புத்தகத்தில் பருவ காலங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். இருக்கிறது, மற்ற உணவுகளைப் போல் கீரை உணவுகள் கிடையாது. மற்றவற்றில் இல்லாத, கிடைக்காத பல ‘நல்ல விஷயங்கள்’ கீரைகளில் உள்ளன. அவற்றை, எந்தவித தடங்கல்களோ, குறைபாடுகளோ இல்லாமல் ‘அனுபவிக்க’ வேண்டும் என்றால், தட்பவெப்ப நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சித்தர்களும், இதைக் கருத்தில் கொண்டுதான் பருவ காலங்களுக்கு […]

June 15, 2016 Editor
கீரைகளைப் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை கீரை வகைகள்

கீரைகளைப் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

கடைக்குப் போகிறோம், கீரைக்கட்டு வாங்கி வருகிறோம் அல்லது தோட்டத்தில் இருக்கும் கீரையைக் கிள்ளி வருகிறோம் அல்லது மரத்தில் இருந்து ஒடித்துக்கொள்கிறோம். வீட்டுக்குக் கொண்டு வந்த உடனேயே அதை அப்படியே சமைத்துச் சாப்பிட்டு விட முடியாது. கீரை என்பது மிகவும் எளிமையான உணவுதான் என்றாலும், அதைச் சமைத்துச் சாப்பிடுவதற்கு முன் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கீரைக்கட்டு என்றால், அதில் கீரை மட்டும் இருக்காது. அதோடு புல், பூண்டு என்று தேவையற்ற செடி, கொடிகளும் இருக்கும். முதலில் […]

June 13, 2016 Editor
அகத்திக் கீரை (Sesbania grandiflora) கீரை வகைகள்

அகத்திக் கீரை (Sesbania grandiflora)

சித்தர் பாடல் மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம் திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச் சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு                             (அகத்தியர் குணபாடம்) பொருள் உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும். நிறைய சாப்பிட்டால் வாயுப் பிரச்னை உருவாகும். அகத்திக் கீரையின் தன்மை விஷநாசினி – Antidote குளிர்ச்சி உண்டாக்கி – Refrigerant மலமிளக்கி – Laxative புழு அகற்றி – […]

June 9, 2016 Editor