32°C

Editor

மடிநோய்க்கு மருந்து! கால்நடை

மடிநோய்க்கு மருந்து!

மாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையே ‘மடிநோய்’ மடிநோய் வந்த மாடுகளை ஒதுக்கி வைச்சிடுவாங்க. கால் கிலோ சோற்றுக்கற்றாழையைத் துண்டு துண்டாக வெட்டி, அதை ஆட்டுக்கல் உரல்ல அரைச்சு, இரண்டு கரண்டி மஞ்சள்தூளையும், அரைப் பாக்கு அளவு சுண்ணாம்பையும் சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு பிசையனும். இதை ஒரு நாளுக்கு பத்து தடவை வீதம், ஒரு மாசத்துக்கு மடிக்காம்புகள்ல தேய்ச்சா… மடி நோய் சரியாகிடும். நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 4, 2016 Editor
மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் ! இயற்கை உரம்

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி பல இடங்களில் காய்ந்து காணப்படும். ஒற்றை நாற்று நடவு செய்த நிலங்களில், போதுமான அளவுக்குக் காற்று, சூரிய ஒளி கிடைப்பதால், புகையான் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால், […]

July 4, 2016 Editor
சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்! இயற்கை உரம்

சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்!

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும் இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். தயாரிப்பு முறை : ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் […]

July 2, 2016 Editor
பரோட்டாவுக்கு சவால் விடும் தினை ! சிறுதானிய சமையல்

பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !

’ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா? உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா?’        இந்த பாட்டை, 1951-ம் வருசம் வெளியான ‘சிங்காரி’ திரைப்படத்துக்காக எழுதியிருக்காரு கவிஞர் தஞ்சை ராமையாதாஸ். ஆக, உணவுப் பஞ்சம் மூலமாதான், ஊர் முழுக்க பரோட்டா பரவியிருக்கு. அட, ஆமாங்க… இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்துல, உலகம் முழுக்கவே உணவுப் பஞ்சம். போர்வீரர்களுக்குகூட உணவு கொடுக்க முடியாத நிலை. அப்பதான், குறைஞ்ச […]

July 2, 2016 Editor
பட்டன் ரோஜா சாகுபடி ! இயற்கை விவசாயம்

பட்டன் ரோஜா சாகுபடி !

ஏக்கருக்கு 2,500 செடிகள் ! ”பட்டன் ரோஜா பதியன் (கன்று) ஊன்ற கார்த்திகைப் பட்டம் சிறப்பானது. களியும் மணலும் கலந்த இருமண் பாடு மற்றும் செம்மண் ஆகியவை ஏற்றவை. தேர்வு செய்த சாகுபடி நிலத்தில்.. 3 சால் உழவு ஓட்டி பிறகு, ஏக்கருக்கு 3 டன் மாட்டு எரு இட்டு ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். 8 அடி இடைவெளியில் ஓர் அடி அகலமும் அரையடி உயரமும் கொண்ட நீளமான பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்தியின் […]

July 1, 2016 Editor
எள் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

எள் சாகுபடி செய்யும் முறை

எள், மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். அனைத்துப் பட்டங்களுக்கும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு, 15 நாட்களுக்குள் இரண்டு உழவு ஓட்ட வேண்டும். நிலம் புழுதியான பிறகு, 10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்து, பாத்திகளில் எள்ளைத் தூவ வேண்டும். ஏக்கருக்கு அரைகிலோ விதை […]

June 30, 2016 Editor
கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை ! இயற்கை விவசாயம்

கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை !

இயற்கை முறையில் சிறுதானியங்களை சாகுபடி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்… “சித்திரை மாத ஆரம்பத்தில் இரண்டு நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, ஒரு வாரம் நிலத்தைக் காயவிட வேண்டும். பிறகு கோடை உழவு அடிக்க வேண்டும். கோடை உழவு அடிப்பதால் மண் இறுக்கம் நீங்கி பொலபொலப்பாக மாறி விடும். இதனால், மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழை நீர் ஆவியாகாமல் தடுக்கப்படுவதோடு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். மண் இறுகலாக இருந்தால் மகசூல் குறையும். உளுந்து வைகாசி […]

June 29, 2016 Editor
உளுந்து சாகுபடி இயற்கை விவசாயம்

உளுந்து சாகுபடி

ஏக்கருக்கு 5 கிலோ விதை “உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200 கிலோ சலித்த சாணத்தூளுடன், 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைச் சேர்த்து பிசைந்து ஒரு நாள் முழுவதும் நிழலில் காய வைத்து அதை நிலத்தில் கொட்டிக் கலைத்து ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, வசதிக்கேற்றவாறு பாத்திகள், வாய்க்கால்கள் அமைத்து, 5 கிலோ உளுந்தை உழவு ஓட்டிக்கொண்டே விதைக்க வேண்டும். […]

June 28, 2016 Editor
பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை இயற்கை உரம்

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை

பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…. ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம். 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் : பச்சைப்பசுஞ்சாணம் – 5 கிலோ பசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர் காய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர் […]

June 27, 2016 Editor
எலுமிச்சை சாகுபடி இயற்கை விவசாயம்

எலுமிச்சை சாகுபடி

ஒரு ஏக்கர் நடவு செய்ய 200 நாற்றுகள் தேவைப்படும். தற்போது ஒரு நாற்று 120 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 15 அடி இடைவெளியில் 1 கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும். கட்டிகள் இல்லாத செம்மண் மற்றும் தொழுஉரம் இரண்டையும் சரிசமமாக கலந்து முக்கால் அடி  அளவுக்கு குழிக்குள் கொட்ட வேண்டும். பிறகு, நாற்றுகள் உள்ள பைகளின் அடிப்பகுதியை கிழித்துவிட்டு, நடவு செய்து மேல் மண்ணைக் கொண்டு குழிகளை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதிகாலை […]

June 25, 2016 Editor