32°C

Editor

சவுக்கு சாகுபடி செய்யும் முறை மரங்கள்

சவுக்கு சாகுபடி செய்யும் முறை

சவுக்கு சாகுபடி செய்யும் முறை எப்படி என்று பார்ப்போம். சவுக்கு சாகுபடிக்காக தேர்வு செய்யும் நிலத்தை ஐந்து மாதங்கள் காயப்போட வேண்டும். பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, எட்டு சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, 3 அடி இடைவெளியில் இரண்டு அங்குல அளவுக்கு குழி எடுத்து சவுக்குக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 4 ஆயிரத்து 800 கன்றுகள் வரை நட முடியும். நடவு செய்து ஓர் ஆண்டு […]

July 13, 2016 Editor
ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..? இயற்கை விவசாயம்

ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..?

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது. தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும்.. அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு. ஆடிப்பட்டத்தின்போது, சுமாரான மழையே கிடைப்பதால், குறுகியகால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்வது நல்லது. நெல்லில் 100-110 நாட்கள் வயதுடைய ரகங்களைத் தேர்வு செய்யலாம். சோளம், நிலக்கடலை, […]

July 11, 2016 Editor
பயிர்களுக்கான உழவுமுறை ! இயற்கை விவசாயம்

பயிர்களுக்கான உழவுமுறை !

கேழ்வரகு : இரண்டு அல்லது மூன்று முறை இயந்திரக் கலப்பையால் உழ வேண்டும். நாட்டு கலப்பை என்றால், ஐந்து முறை உழ வேண்டும். மக்காச்சோளம் : சட்டிக் கலப்பையால் ஒரு முறை உழுது, கொத்துக்கலப்பையால் இரண்டு முறை உழ வேண்டும். நிலக்கடலை : கொத்துக் கலப்பையால் இரண்டு அல்லது மூன்று முறை உழ வேண்டும். நாட்டுக் கலப்பை என்றால், மூன்று அல்லது 4 முறை உழ வேண்டும். பொதுவாக, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பருமனான விதைகளுக்கு குறைந்த […]

July 11, 2016 Editor
செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை ! இயற்கை விவசாயம்

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். […]

July 9, 2016 Editor
70 நாட்களில் காளான் வளர்ப்பது எப்படி..? செய்திகள்

70 நாட்களில் காளான் வளர்ப்பது எப்படி..?

தரமான புது வைக்கோலை 2 முதல் 3 அங்குல நீளத்துக்கு வெட்டி, சுத்தமான தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைத்து, நெல் அவிக்கும் டிரம்மில் 45 நிமிடங்கள் அவிக்க வேண்டும். பிறகு, நிழலான இடத்தில் கொட்டி கையில் பிடித்தால், ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்த்த வேண்டும். 14 x 26 என்ற அளவில், உள்ள பாலித்தீன் பையில், கொஞ்சம் வைக்கோல் கொஞ்சம் காளான் விதைகள்.. என அடுக்கடுக்காக நிரப்பி பையைச் சுற்றிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட […]

July 8, 2016 Editor
நெற்பயிருக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை இயற்கை உரம்

நெற்பயிருக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்கிற விதத்தில் கலந்து விதைநேர்த்தி, நாற்றங்கால், நடவு, என ஒவ்வொரு பருவத்திலும் மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா தெளித்து வரவேண்டும். கதிர் பிடித்தவுடன், பஞ்சகவ்யா தெளிக்கக் கூடாது. அப்படி தெளித்தால், சன்ன ரக நெல், மோட்டா ரக நெல்லாக கடினமாகிவிடும். பஞ்சகவ்யா பயன்படுத்துவதால், அதிக தூர்கள், அதிக கிளைகள், அதிக கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரிலும் அதிக நெல்மணிகள் பிடிப்பதுடன் நோய்த்தாக்குதலும் […]

July 8, 2016 Editor
மண்ணுக்கேற்ற மரங்கள்..! செய்திகள்

மண்ணுக்கேற்ற மரங்கள்..!

கரிசல் மண் – நெல்லி, புளி, புங்கன், நாவல், சவுக்கு, வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள். வண்டல் மண் – தேக்கு, மூங்கில், கருவேல், சவண்டல், புளி உள்ளிட்ட மரங்கள். களர் மண் – குடை வேல், வேம்பு, புளி, பூவரசன், வாகை போன்ற மரங்கள் உவர் மண் – சவுக்கு, இலவு, புளி, வேம்பு ஆகிய மரங்கள் களிமண் – வாகை, புளி, புங்கன், சவண்டல், நெல்லி, கருவேல், மருது அமில நிலம் – குமிழ், […]

July 7, 2016 Editor
நிலக்கடலை விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது..? இயற்கை விவசாயம்

நிலக்கடலை விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது..?

வெளிமாநிலங்களிலிருந்து பல நிலக்கடலை ரகங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் பாரம்பர்ய நிலக்கடலை ரகங்கள், 125 நாட்கள் 135 நாட்கள் கொண்ட கொடி, அடர்கொடி வகைகளைச் சேர்ந்தவை. தற்சமயம் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, 105 நாட்களில் வளரக்கூடிய கொத்து, அடர்கொடி ஆராய்ச்சி ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் கோ-6, கோ-7, டி.எம்.வி-13 (சிவப்பு நிற விதை), வி.ஆர்.ஐ-7 ஆகிய ரகங்கள் இருக்கின்றன. இவை தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ரகங்கள். மானாவாரி, இறவை இரண்டிலும் பயிர் […]

July 6, 2016 Editor
தேக்குக்குக் கவாத்து அவசியம் ! மரங்கள்

தேக்குக்குக் கவாத்து அவசியம் !

கூழாங்கல் நிலத்தில் தேக்கு சாகுபடி செய்வது எப்படி என்று பார்ப்போம். மணல் கலந்த கூழாங்கல் நிலத்தில் தேக்கு நன்றாகவே வளரும். ஆறடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி குழி எடுக்கும்போது, ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் தலா 2 கிலோ வண்டல் மண், தொழுவுரம் ஆகியவற்றைக் கலந்து கொட்டி, கன்றுகளை நடவு செய்து.. மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். மாதம் ஒரு முறை தழை, மணி, […]

July 6, 2016 Editor
முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை! இயற்கை உரம்

முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!

தோலுரித்த ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை, ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி.. லேசான சணல் சாக்கு அல்லது வெள்ளைத்துணியில் வைத்து நன்கு முறுக்கினால், சாறு கிடைக்கும். 10 முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து, அதில் வெங்காயச் சாற்றைச் சேர்த்துக் கலக்கினால்… கரைசல் தயார். இது ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கும். இதை ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 50 மில்லி […]

July 5, 2016 Editor