32°C

Editor

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை..! செய்திகள்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை..!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது: 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

November 30, 2016 Editor
விவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு செய்திகள்

விவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு

கர்நாடக மாநில அரசாங்கம், வறண்ட வெப்ப மண்டலத்துக்கான உலக பயிர் ஆய்வு மையத்துடன் இணைந்து தங்களுடைய விவசாயி்களின் வருமானம் தற்போது உள்ளதை விட 20% கூட்ட சுவர்னர் கிருஷி கிராம யோஜனா என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 105 மாதிரி கிராமங்ககள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே விவசாயி்களுடன் இணைந்து வறண்ட நிலத்தில் விவசாயம் செய்யும் முயற்சியினை அம்மாநில அரசாங்கம் செய்ய உள்ளதாக அம்மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது 1000 கிராமங்களுக்கு விரிவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். […]

November 29, 2016 Editor
முதல் உற்பத்தியில் 800 டன் பேரிச்சை : ராஜஸ்தான் செய்திகள்

முதல் உற்பத்தியில் 800 டன் பேரிச்சை : ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநில அரசு 2015-2016ம் ஆண்டில் 800 டன் பேரிச்சையை உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 2007-2008ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில அரசு 135 ஹெக்டேரில் அரபிய நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட பேரிச்சை செடிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின் 2008-2009 ம் ஆண்டில் மேலும் 12 மாவட்டங்களில் பேரிச்சை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. அதனர் 813 ஹெக்டேரில் பேரிச்சை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது தங்கள் மாநிலத்தின் முதல் பேரிச்சை உற்பத்தி […]

November 29, 2016 Editor
மழை நீர் சேகரிக்கலாம் வாங்க! செய்திகள்

மழை நீர் சேகரிக்கலாம் வாங்க!

வடகிழக்கு பருவமழை இன்றுவரை திசை மாறி செல்வதால் தமிழகத்திற்கு இம்முறை 80% மழை கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் டிசம்பர் மாதம் ஒரளவேனும் மழை தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது, அந்த சூழ்நிலையில் நாம் கிடைக்கும் மழை நீரை நமக்கு உபயோகமாக பயன்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு துளி மழைநீரும் நமக்கு பெருவெள்ளம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக வீட்டில் மழை நீர் சேகரிப்பை அரசாங்கம் கட்டாயமாக்கினாலும் இன்றுவரை அதை செயல்படுத்துவதில் ஏதேனும் […]

November 29, 2016 Editor
இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..! இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!

ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு.. ஒவ்வொரு குழியிலும் அரைக் கூடை எருவையும், மேல் மண்ணையும் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு நான்கு விதைகள் வீதம் ஊன்றிவிட வேண்டும். அசுவினியை […]

November 27, 2016 Editor
ஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி..? மருத்துவ குணங்கள்

ஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி..?

டானிக் அல்லது சிரப் போன்றவற்றுக்கு மாற்றாகச் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படுவது மணப்பாகு. மணம் கூடிய பாகு என்பதுதான் மணப்பாகு. ஆடாதொடை மணப்பாகு சளி, இருமலுக்கு அற்புதமான திரவ மருந்து. ஆடாதொடை இலையை 1 கிலோ எடுத்துக் கழுவி சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் இட்டு 6 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றிக் கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் ஒன்றரை லிட்டராகச் சுண்டிய பிறகு, 1 கிலோ பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பாகுபதத்துக்குக் காய்ச்சி, வேறு […]

November 27, 2016 Editor
அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..! செய்திகள்

அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

தொல்லியல் ஆராய்ச்சிகளின்படி கி.மு.2000 ஆண்டில் சீனாவில் அரிசி சாகுபடி செய்யப்பட்டதாக தற்போது வரை நம்பப்படுகிறது. ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் இந்தியாதான் அரிசி சாகுபடிக்கு முன்னோடி என்பதை பிரிட்டன் மற்றும் இந்தியர்கள் அடங்கிய ஆராய்ச்சிக்குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி சீனாவில் அரிசி சாகுபடி துவங்குவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இந்தியாவில் அரசி சாகுபடி நடைபெற்று வந்ததாக தெரிய வந்துள்ளது. சிந்து சமவெளியில் வசித்த மக்கள் காலத்திற்கேற்ப பல வகையான அரிசி வகைகளை பயிரிடுவதில் கைதேர்ந்தவர்களாக […]

November 25, 2016 Editor
பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..! செய்திகள்

பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..!

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது, இந்திய விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பணப்பரிமாற்றத்தை அதிக அளவில் ரூபாய் நோட்டுகளாகவே செய்து வருகிறார்கள். இந்தியாவிலுள்ள பஞ்சாப், உத்தரபிரதேசம், ஒடிசா, மகராஷ்டிரா, குஜராத் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகளிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரவில்லை. இதன் காரணமாக பயிர்களுக்கான விதைகள் வாங்குவதற்கு கூட […]

November 25, 2016 Editor
சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள் செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

சுளுக்கு நீக்கும் மூசாம்பரம் சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம் இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம். இது, கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கருமை நிறத்தில் பிசின் போன்று இருக்கும். அடிபட்ட வீக்கம், நரம்புப்பிறழ்வு, சுளுக்குச் சதைச்சிதைவு ஆகிய நிலைகளில் மூசாம்பரத்தை வெந்நீரில் கரைத்துக் குழம்புப் பக்குவத்தில் இளஞ்சூட்டில் பூசினால் குணமாகும். 2 கிராம் மூசாம்பரத்துடன் 5 கிராம் குல்கந்து சேர்த்து அரைத்து […]

November 23, 2016 Editor
மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..! செய்திகள்

மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..!

குளம் தயாரிப்பு! குளம் தயாரிப்பு குறித்துப் பேசிய ரங்கநாதன், “ஒரு ஏக்கர் பரப்பில் 8 அடி ஆழத்துக்குக் குளம் வெட்ட வேண்டும். ஒரு குளத்துக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். பிறகு, 2 டன் ஈரச் சாணத்தைத் தண்ணீரில் கரைத்து மேலும் 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் தேவையான அளவு தாவர நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கும். உள்ளங்கையைத் தண்ணீருக்குள் விட்டுப் […]

November 22, 2016 Editor