32°C

Editor

சிவனார் வேம்பு! பயிர் வகைகள்

சிவனார் வேம்பு!

‘அன்னெரிஞ்சான் பூண்டு’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். சிவப்பு நிறத் தண்டில், கருஞ்சிவப்பு நிற மலர்களையும் புல் போன்ற சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். நல்ல மழைவளம் இருந்தால் 6 அடி உயரம் வரை வளரும். மணற்பாங்கான இடங்களில் பெருமளவு வளர்ந்திருக்கும். குறிப்பாக, பனை மரங்கள் உள்ள இடத்தில் இச்செடியும் இருக்கும். தவிர, இது பனைத் தொழிலோடும் சம்பந்தப்பட்ட செடியாகும். பனையில் இருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சுவதற்கு இச்செடியை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பறித்த அன்றே கட்டாகக் கட்டி எரிக்க […]

July 10, 2017 Editor
உலகளவில் அரிசி  பயன்பாடு! செய்திகள்

உலகளவில் அரிசி  பயன்பாடு!

உலகளவில்  4 மில்லியன்  (400கோடி)  மக்கள்  அரிசியை  பயன்படுத்தி  வருகிறார்கள்.  அதாவது,  உலக  மக்கள்  தொகையில் இது  56  சதவிகிதம் உலகலவில்  14கோடியே  40  லட்சம்  விவசாயக்  குடும்பங்கள்   நெல்  உற்பத்தியில்  ஈடுபட்டு  வருகின்றன.  2015-ம்  ஆண்டில்,  48கோடி  டன்  அரிசி  உலகளவில்  பயன்படுத்தப்பட்டுள்ளது.   2040-ம்  ஆண்டில்,  கூடுதலாக  9  கோடியே  60லட்சம்  டன்  அரிசி  தேவைப்படும்   வாய்ப்பிருக்கிறது.

July 9, 2017 Editor
நுண்ணுயிர்களைப் அறிவோமா! தொழில்நுட்பம்

நுண்ணுயிர்களைப் அறிவோமா!

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே ஆட்டிவைப்பவை கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது , இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை […]

July 9, 2017 Editor
தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை! பயிர் பாதுகாப்பு

தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை!

  ‘பருவத்தே பயிர் செய்’ என்று நம் முன்னோர் சொல்லி வைத்துள்ளனர். ஆனால், காவிரியை நம்பிக் காத்திருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளுக்குப் பருவத்தில் பயிர் செய்வது என்பது சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. சம்பா பருவ நெல் சாகுபடிக்கு… செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விதை விட்டு, நாற்று உற்பத்தி செய்ய வேண்டும். அக்டோபர் 10-ம் தேதிக்குள் நாற்று நடவுப்பணிகளை முடிக்க வேண்டும். அப்படியில்லாமல் தாமதமானால், ஐப்பசி மாத அடைமழையில் பயிர்கள் சிக்கி பெரும் பாதிப்படையும். தவிர, ஜனவரி 28-ம் தேதி […]

July 9, 2017 Editor
கறிவேம்பு! பயிர் வகைகள்

கறிவேம்பு!

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புத மூலிகை. நாம் நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்தி, பிறகு தூக்கி எறியும் கறிவேப்பிலை தான் இது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இதைத் தாளிக்க மட்டுமே பயன்படுத்தினால் முழுப்பயன் கிடைக்காது. அதனால், உணவுத்தட்டில் இருந்து இதைத் தூக்கி எறியாமல் கண்டிப்பாக உண்ண வேண்டும். அப்போதுதான் முழுப்பலன் கிடைக்கும். முன்பு குழந்தைகளைக் குளிப்பாட்டிய உடன் ‘உரப்பு மருந்து’ எனும் மருந்தை குழந்தைகளின் நாக்கில் தடவி விடுவார்கள். சிறிது […]

July 8, 2017 Editor
பூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு பயிர் பாதுகாப்பு

பூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக மரப்பயிர்களுக்கு ஊடுபயிராக வேம்பை வளர்த்து பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்லாமல் வேப்பங்கொட்டை மூலம் பூச்சிவிரட்டிகளையும் கிருமிநாசினிகளையும் தயாரிக்கலாம். வேம்பு நேரடியாக பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சிவிரட்டியாக செயல்படுகிறது. வேம்பின் இலை,பூ,விதை,இலை,பட்டை, ஆகிய ஒவ்வொன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அந்துப்பூச்சி, கூன்வண்டு,காண்டாமிருக வண்டு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிவகைகளை வேம்பு கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம் பூச்சி தாக்குதலால் பயிர்களுக்கு பரவும் நோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும். வேம்பில் உள்ள அசாடிராக்டின் என்ற அமிலப்பொருளே பூச்சிக்கொல்லி தன்மைக்கும் வேம்பின் […]

July 7, 2017 Editor
நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்! தொழில்நுட்பம்

நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘ஜீரோபட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் “ஜீரோபட்ஜெட் முறையில் சாகுபடி செய்யும்போது, பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் எனத் தனியாக எதையும் கொடுக்க வேண்டாம். மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றில் நாட்டுமாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு. இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்துவிட்டாலே போதும். காதலியைப் பிரிந்த காதலன் தேடிவருவது போல, நாட்டு மண்புழுக்கள் மேலே வந்துவிடும். நம்  பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும். நிலத்தில் கீழே, மேலே என்று மாற்றி மாற்றிச் சென்றுகொண்டே […]

July 6, 2017 Editor
மொந்தன் வாழை … இயற்கை விவசாயம்

மொந்தன் வாழை …

இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்  முதல் தலைமுறை விவசாயிகள், இளம்விவசாயிகளில்  பலர் ,விவசாயித்தை ஆரம்பிக்கும்போதே இயற்கை முறையில் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களன்றி  பெரும்பாலான இயற்க்கை விவசாயிகள் ,ரசாயன முறையில் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இயற்க்கைக்கு மாறியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ரசாயனத்தின் பாதிப்புகளை உணர்ந்து இயற்க்கைக்கு மாறியவர்களும் சிலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் இயற்க்கைமுறையில்  மொந்தன் வாழையைச் சாகுபடி செய்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் கள்ளக்குறிச்சியில் […]

July 6, 2017 Editor
மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி? செய்திகள்

மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி?

உள்நாட்டில் பயன்படுத்தப்படும் உருண்டை மஞ்சள் ரகத்தைத் தவிர, மற்ற மஞ்சள் ரகத்தைத் தவிர,மற்ற மஞ்சள் ரகங்கள் அனைத்தும் ஏற்றுமதிக்கேற்ற ரகங்கள்தான். ‘எக்ஸ்ட்ரா போல்டு’ [முதல் தர மஞ்சள்],’மினி சேலம்’ [இரண்டாம் தரம்] மற்றும் ‘மீடியம் மஞ்சள்’ [மூன்றாம் தரம்] ஆகிய மூன்று வகைகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ளது. மலேசியா,இலங்கை,நியூசிலாந்து, துபாய் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு மஞ்சள் அதிகமாக ஏற்றுமதியாகிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று வகையான மஞ்சள் ரகங்களில் முதல் தர மஞ்சளை மலேசியர்கள் அதிகம் விரும்புகிறார்கள். […]

July 5, 2017 Editor
விவசாயிகளின் வருமானமும், பாதிப்புத் தன்மையும்! செய்திகள்

விவசாயிகளின் வருமானமும், பாதிப்புத் தன்மையும்!

விவசாயிகளுக்கு ஏற்பட்ட தொல்லைகள் காரணமாகவும் 2022 வாக்கில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரதமர் கூறியதாலும் விவசாயிகளின் வருமானம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. இதனால், விவாதங்களின் மையமாக விவசாயிகள் காணப்பட்டார்கள். விவசாய வருமானத்திற்குப் பல காரணிகள் உண்டு. உயர் வருமானத்திற்கு முக்கிய காரணி அவருடைய நிலத்தின் செழுமையாகும். விவசாயத்திற்குத் தேவைப்படும் அனைத்து இடு பொருட்களுக்குமான உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும். ஏனென்றால், நீர் மற்றும் உரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. தொழில்நுட்ப மேம்பாட்டால் உற்பத்தியும் திறமையும் வலுக்கிறது. […]

July 5, 2017 Editor