32°C

Editor

ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி செய்திகள்

ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி

தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய் முதல் காய்கறிகள் வரையிலான பொருள்கள் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கான விற்பனை தொடக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக அரசின் புதிய முயற்சியைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருள்களை சந்தைப்படுத்த ஒரு புதிய முயற்சியாக சமையலுக்கு நறுமணமூட்டும் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகள், உலர் பழங்கள் பாக்கெட்டுகள் […]

November 6, 2018 Editor
விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம் கருத்துக்களம்

விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம்

6 லட்சம் கிராமங்களுக்கு மேல் அடங்கியுள்ள இந்தியாவில் அதிகப்படியானோர் செய்யும் தொழில் விவசாயம் மட்டுமே. உலகின் இரண்டாவது அதிகப்பட்ச மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் அனைவருக்கும் உணவிட வேண்டுமெனில் நம்மிடையே விவசாயம் சார்ந்த புதுப்புது தொழில்நுட்பங்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்முனைவுகளை உருவாக்குவது மிக அவசியம். அக்ரிசக்தியின் சார்பில் விவசாயம் சார்ந்த பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. விழுது மாணவ பத்திரிக்கையாளர்கள் திட்டம், டயல் பார் அக்ரி, உணவு சத்து விபரங்கள் என பல ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் […]

November 5, 2018 Editor
அமெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை! பயிர் பாதுகாப்பு

அமெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை!

அமெரிக்காவிலிருக்கும் நியூ இங்கிலாந்துப் பகுதி விவசாயிகளுக்கு அணில்களால் பிரச்னை வந்திருக்கிறது. ஆப்பிளும் பூசணிக்காயும் அதிகம் விளையும் இப்பகுதி விளைநிலங்களில், இந்த ஆண்டு அணில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த அணில்கள், ஆப்பிள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றைக் கடித்துச் சேதப்படுத்தி விடுவதால், அவற்றை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். இதற்கு முன்னர் இவ்வளவு அணில்களை ஒரே இடத்தில் பார்த்தது இல்லை என்கிறார்கள், நியூ இங்கிலாந்து விவசாயிகள். திடீரென அணில்கள் பெருகியதற்கான காரணம் பற்றி உள்ளூர் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. […]

October 5, 2018 Editor
விவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்! செய்திகள்

விவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் விவசாயத் துறையில் முதலீடு செய்ய இந்தியத் தொழிலபதிர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அந்த நாட்டின் விவசாயத்துறை துணை அமைச்சர் நஸீர் அகமது. கால்நடை வளர்ப்பும் விவசாயமும்தான் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இத்துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது, அந்த நாட்டுக்கு வலு சேர்க்கும். அதற்காக இந்தியத் தொழிலதிபர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க ஆப்கானிஸ்தான் தயாராக இருக்கிறது. ஆப்பிள், திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களுக்கும் உலர் பழங்களுக்கும் ஆப்கானிஸ்தான் உலகப் புகழ்பெற்றது. அவற்றுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகமாக […]

October 5, 2018 Editor
பருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் உற்பத்தி குறையும் அபாயம்! கருத்துக்களம்

பருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் உற்பத்தி குறையும் அபாயம்!

‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்டு ட்ரோபிகல் மெடிசின்’ (London School of Hygiene and Tropical Medicine) என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலக அளவில் நிகழும் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், ‘உலகளாவிய காய்கறி விநியோகம் 2050-ம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் வீழ்ச்சியடையக்கூடும். இன்றளவில் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பொதுவான பயிர்களே பெரும்பாலான மக்களின் உணவாக இருக்கின்றன. உலகளாவிய காய்கறிகளின் சராசரியான மகசூலானது, புவி […]

October 5, 2018 Editor
நாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி சில வரி செய்திகள்

நாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி

புதுதில்லி: Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) திட்டத்தின் கீழ் 93 நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு, நீண்டகால நீர்ப்பாசன நிதியம் ( LTIF) மூலம் ரூ 65,000 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நபார்டு வங்கியின் தலைவர் அறிவித்துள்ளார்

September 24, 2018 Editor
விவசாயிகள் மூலிகைகளை பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு மூன்று லட்சம் ஈட்டலாம் பயிர் வகைகள்

விவசாயிகள் மூலிகைகளை பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு மூன்று லட்சம் ஈட்டலாம்

அரிசி மற்றும் கோதுமை பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 30,000 மட்டுமே விவசாயிகளால் ஈட்ட முடியும் என்ற நிலைமையை விவசாயிகள் மூலிகைச் செடிகளை பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய் ஈட்ட முடியும் என்ற செய்தி நம் விவசாயிகளிடையே கொண்டு சேர்க்கவேண்டியது நம் அனைவரின் அவசியமாகும். மூலிகைச் செடி என்பது கீரையில் ஆரம்பித்து நெல்லிக்காய், கடுக்காய், ஆவாரம், சுக்கு, மிளகு, திப்பிலி என பலவிதமான மூலிகைகள் நம் பாரம்பரிய மூலிகைகளை ஆராய்ந்தாலே போதுமானது. அதோடு மட்டுமல்ல நம் […]

September 15, 2018 Editor
பண்ணைக் குட்டைகள் அமைக்க முற்றிலும் இலவசம் மானியங்கள்

பண்ணைக் குட்டைகள் அமைக்க முற்றிலும் இலவசம்

தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட துறைகளால் பண்ணை குட்டைகள் 100% மானியத்தில் இலவசமாக அமைத்து தரப்படுகின்றன: 1. வேளாண் பொறியியல் துறை (AED) 2. மாவட்ட நீர்வள அபிவிருத்தி துறை (DWDA) 3. மீன்வளத் துறை (பெரும்பாலும் கடலோர பகுதிகளில்) 4. கிராமப்புற அபிவிருத்தி துறை (DRDA) தயவுசெய்து இந்த துறைகளை அணுகவும் மற்றும் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும் (பட்டா ,சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், விண்ணப்ப மனு போன்றவை). இது 100% இலவசமாக அமைத்து தரப்படுகிறது!!! மானியம் […]

September 10, 2018 Editor
கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம் செய்திகள்

கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம்

கேரளாவில் பெய்த கனமழை எதிரொலியால் டெல்டா மாவட்டங்களில் வைக்கோல் வாங்குவதற்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் வைக்கோல் வாங்க யாரும் வராததல் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கேரளாவில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், தமிழகத்தில் இருந்து கேரளவியாபாரிகள் கொண்டு செல்வது வாடிக்கையாகும். கேரளாவுக்கு வைக்கோல் அனுப்பி வைக்கும் வியாபாரிகள், அறுவடை நடைபெறும் வயலுக்கு சென்று ஒரு ஏக்கர் வயலில் உள்ள வைக்கோலை எடுத்து கொள்ள ₹1,500 கொடுத்து விட்டு இயந்திரம் உதவியுடன் வைக்கோலை சேகரித்து லாரியில் […]

September 6, 2018 Editor
பாசுமதி அரிசி உற்பத்தியில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதை குறைக்க திட்டம் : பஞ்சாப் மாநில அரசு விவசாய கட்டுரைகள்

பாசுமதி அரிசி உற்பத்தியில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதை குறைக்க திட்டம் : பஞ்சாப் மாநில அரசு

சண்டிகர்: பஞ்சாபில் விளையும் பாசுமதி அரிசியில் பூச்சிக்கொல்லி அதிகமாக இருந்த குற்றச்சாட்டால் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசசு dissuade, Acephate, Cabandazim, Thiamethoxam, Tricyclazole மற்றும் Triazophos ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துங்களை பயன்படுத்த பொதுக் கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட முயற்சி செய்துவருகிறது. பஞ்சாப் மாநிலர அரசியின் இந்த முயற்சியினால் இந்த ஆண்டு உற்பத்தியாகும் பாசுமதி அரிசியில் இரசாயண அளவு […]

September 6, 2018 Editor