32°C

editor news

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும்  உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -1) தொடர்

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -1)

கால்நடை வளர்ப்பில்  தீவன  மேலாண்மை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.  முறையான தீவன  மேலாண்மை கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், கால்நடை வளர்ப்போர் அதிக லாபம் ஈட்டவும் துணைபுரிகிறது.  முறையற்ற தீவன மேலாண்மை கால்நடைகளுக்கு சில உபாதைகளை ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திவிடும்.  இவற்றில்  பின்வரும் சில முக்கிய உபாதைகளை குறிப்பிட்டுச்  சொல்லலாம். பால்சுரம் (Milk Fever) பால்சுரமானது அதிக அளவு பால் உற்பத்தி செய்யக்கூடிய பசுமாடுகளில் கன்று ஈன்ற முதல் இரண்டு […]

November 19, 2020 editor news
தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும் கோவை தென்னை கண்காட்சி 2018

தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகில் எண்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை பயிரிடப்படுகின்றது. தென்னை மரத்தின் அனைத்துப் பொருட்களும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன. காண்டாமிருக வண்டு தென்னை மட்டுமல்லாமல்  வாழை, கரும்பு, அன்னாச்சி மற்றும் பேரிச்சை போன்றவற்றை தாக்கும் தன்மைக் கொண்டது. காண்டாமிருக வண்டின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக காணப்படும்.  பொதுவாக காண்டாமிருக வண்டின் புழுக்கள் தென்னை மரத்தின் அருகில் உள்ள எருக்குளிகளில் காணப்படும். இதனால் தென்னை மரத்தின் அருகில் எருக்குளிகள் இருந்தாலோ அல்லது […]

November 19, 2020 editor news
இமயமலையில் பெருங்காயம் மருத்துவ குணங்கள்

இமயமலையில் பெருங்காயம்

இந்தியர்களின் சமையலறையில் ஓர் இன்றியமையாத வாசனை பொருளாக பெருங்காயம் திகழ்கின்றது. பல நோய்களுக்கு இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய பெருங்காயத்தை நாம் இறக்குமதி செய்கிறோம் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசானது வருடந்தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை ரூ.600 கோடி செலவில் ஈரான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது. இச்செலவினை குறைக்கும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் பெருங்காய விதைகளை பயிரிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பெருங்காயமானது அதிக […]

November 19, 2020 editor news
நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு தொழில்நுட்பம்

நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு

ஹிர்ஸ்மேனில்லா ஒரைசே என்றழைக்கப்படும் நெல் வேர் நூற்புழு நெற்பயிரைத்  தாக்கி அழிக்கக்கூடிய முக்கியமான நூற்புழுக்களுள் ஒன்றாகும். இது முதன் முதலில் 1902 ஆம் ஆண்டு ஜாவா தீவில் உள்ள நெல் வயலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்நூற்புழு நெற்பயிர் விளைவிக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றது. நெல் வேர் நூற்புழு போன்ற உருவத்துடன் காணப்படும் நீளமான நூற்புழுவாகும். இதனை உருப்பெருக்கியால் மட்டுமே காணமுடியும். இந்நூற்புழு வேரின் உள்ளே புகுந்து வாழ்நாள் முடிய நகர்ந்து கொண்டே  பயிரின் சாறை உறிஞ்சும் […]

November 19, 2020 editor news
உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

உளுந்து பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இதிலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இது. இங்கு  பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் பருப்பு வகையாகும்.   தோசை, இட்லி, வடை என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உளுந்தில் பெருமளவு விளைச்சலைப் பாதிக்கும் மஞ்சள் தேமல் நோய்ப்  பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் இங்கு காண்போம். நோய்க்காரணி இந்நோய் உளுந்து மஞ்சள் தேமல் நச்சுயிரியினால் தோன்றுகிறது. […]

November 19, 2020 editor news
மண்ணை காக்க காப்பு வேளாண்மை பயிர் பாதுகாப்பு

மண்ணை காக்க காப்பு வேளாண்மை

ஒரு மண்ணின் வளம் என்பது, அதற்கான சூழ்நிலை மற்றும் பயன்பாட்டு வரையறையில் நிலைத்த உற்பத்தியுடன் சூழ்நிலையை பாதுகாத்து தாவரங்கள் மற்றும் அதை சார்ந்த விலங்குகளின் நலனை பாதுகாக்க வேண்டும். ஆனால் கடந்த இருபது வருடங்களாக விவசாயிகள் இரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியதன் விளைவால் மண்ணிற்கு அங்கக உரங்களை இடுவதை முற்றிலுமாக மறந்துவிட்டனர். இதனால் மண்ணில் அங்கக தன்மை குறைந்து ஊட்டச்சத்துக்களை தேக்கி வைக்க முடியாமல் வளமற்ற மண்ணாக மாறி வருகின்றது. இதனை சரிசெய்து மண்ணின் […]

November 17, 2020 editor news
பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -1) தொடர்

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -1)

முன்னுரை வணிக ரீதியாக உயர் லாபம் தரக்கூடிய மலர் வகைகளை உற்பத்தி செய்வதில் இந்த நூற்றாண்டில் பசுமைக்குடில்கள் அல்லது பசுமை இல்லங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திறந்தவெளி தோட்டங்களில் பயிரிடும் போது பயிர் வளர்ச்சிக்கு உகந்த காலநிலை காரணிகளான வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், சூரிய வெளிச்சம், நீர் போன்றவற்றை மலர்களுக்கு தேவையான வகையில் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு வகை மலர் பயிருக்கும் தேவையான குறிப்பிட்ட காலநிலை காரணிகளை பசுமை இல்லத்தில் குறிப்பிட்ட அளவுக்கு கட்டுப்படுத்த இயலுமாகையால் […]

November 17, 2020 editor news
கழனியும் செயலியும் (பகுதி – 5) தொடர்

கழனியும் செயலியும் (பகுதி – 5)

மண்ணில்லா விவசாயம் தொடங்கி, பல்வேறு ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆராய்ச்சிகள் எல்லாம் மலையை குடைந்து செல்வதாய் இருந்தாலும், வெற்றி என்னவோ மண் துகள் அளவே கிடைக்கின்றன. இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட உழவியல் முறைகளும், தொழில்நுட்பங்களும், நிகர்நிலை வானிலை மற்றும் விலை நிலவரங்களும் சரிவர கிடைக்காதிருப்பதே. இவற்றினை ஓரளவிற்கு ஈடுகட்ட உதவிடும் விஞ்ஞான நண்பனே வேளாண் செயலிகள். சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக மேலும் சில செயலிகள் இங்கே…. Agri app விவசாயம் சார்ந்த சேவைகளை […]

November 17, 2020 editor news
தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் கோவை தென்னை கண்காட்சி 2018

தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்

    வெள்ளை ஈ பிறப்பிடம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் ஆகும். 2016 -ம் ஆண்டு கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முதலில் தாக்குதல் அறியப்பட்டது. மூன்று விதமான வெள்ளை பூச்சி ரகங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பூச்சி அமைப்பு : முதிர்ந்த வெள்ளை ஈ 2மி.மீ  நீளம் உடையது. வெள்ளை நிறமுடையது. வாழ்நாள் காலம் 40-50 நாட்கள். மிகவும் வேகமாக பெருக்கம் அடையும். பூச்சியின் முட்டை நிலை 10 நாட்களும், முதல் […]

November 13, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-15) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-15)

பொக்கிஷத்தில் புதைந்த ஏரி நம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான்  பொன்முட்டையிடும் வாத்தின் கதை அதில் வரும் முட்டாள் எஜமானைப் போல பல நிகழ்வுகள் வரலாற்றில் நடந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் பெரும் பழமை வாய்ந்த ஏரியை வெறும் வதந்தியை நம்பி வாரி  அழித்தது. துருக்கி தேசத்தின் கம்ஷேன் எனும் பகுதியில் டுமாலி என்னும் கிராமத்தில் உள்ள டிபிஸ் ஏரி பெரும் பழமை வாய்ந்த பனி கட்டி சூழ்  நன்னீர் ஏரி இது மலைக்குள் உள்ள […]

November 13, 2020 editor news