32°C

Editor

மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி ! இயற்கை விவசாயம்

மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி !

ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி எப்படி செய்வது என்று பார்ப்போம். மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி நடவு செய்ய விரும்புவர்கள்.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 7 அடி இடைவெளியில், 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 800 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ ஆட்டு எருவுடன் நிலத்தின் மேல் மண்ணைக் […]

July 26, 2016 Editor
பப்பாளி சாகுபடி செய்யும் விதம்! மரங்கள்

பப்பாளி சாகுபடி செய்யும் விதம்!

ஏக்கருக்கு 1000 கன்றுகள் தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை சட்டிக்கலப்பை மூலம் உழுது பத்து நாட்கள் காயவிட்டு, மீண்டும் சட்டிக்கலப்பை மூலம் உழுது, பத்து நாட்கள் காய விடவேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது அடுத்த நாள், கன்றுக்குக் கன்று 2 மீட்டர், வரிசைக்கு வரிசை 2 மீட்டர் என்ற இடைவெளியில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் காலையும் மாலையும் 2 மணி நேரம் தண்ணீர் விட்டு, மூன்றாவது நாள் மாலை, 15 […]

July 25, 2016 Editor
இ.எம் தயாரிக்கும் முறை ! இயற்கை உரம்

இ.எம் தயாரிக்கும் முறை !

20 லிட்டர் கொள்ளளவுள்ள மூடியுள்ள டிரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், 17 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீர் (போர்வெல் தண்ணீர்) ஊற்றிக்கொள்ள வேண்டும். 2 கிலோ கருப்பட்டியைக் காய்ச்சி பாகு பதத்துக்கு மாற்றி, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை (முதல்முறை தயாரிக்கும் போது, வெளியில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். அடுத்த முறை நாம் தயாரிக்கும், இ.எம் கரைசலையே பயன்படுத்திக் கொள்ளலாம்) கலந்து.. மூடியால் மூடி, வெயில் படாத […]

July 23, 2016 Editor
தக்காளி பயிருக்கு சோதனை அவசியம் செய்திகள்

தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

தக்காளி ஊசிப்புழு மேலாண்மையில் இனக்கவர்ச்சிப்பொறிகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இனக்கவர்ச்சிப்பொறிகள் ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண் அந்துப்பூச்சிகளைக் கூட கவர்ந்து கொன்று விடுகின்றன. இருப்பினும், இதனால் தக்காளியில் ஏற்படும் ஊசிப்புழுக்களின் சேதாரம் குறைவதில்லை. ஒருவேளை, இனக்கவர்ச்சிப்பொறிகளில் கவரப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் ஏற்கனவே கலவியை முடித்தவையாகக் கூட இருக்கலாம். அதனால்தான் சேதம் குறைவதில்லை. ஆனாலும், இன்னொன்றையும் இந்த இடத்தில் கருத்தில் கொள்ளவேண்டும், இனக்கவர்ச்சிப் பொறிகளின் செயல்திறன், அங்குள்ள தட்பவெப்பநிலை, பருவகாலம், பயிரிடும் முறைகள் ஆகியவற்றைப் […]

July 20, 2016 Editor
பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும் செய்திகள்

பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, காலா நமக், ஜவ்வாதுமலை நெல் உள்ளிட்ட அரியவகை பாரம்பர்ய நெல் வகைகள் சிறப்பு பெற்றவை. விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. […]

July 18, 2016 Editor
மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி ! செய்திகள்

மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பெட்ரோலியத்திற்கு இணையான உயிரி எரிபொருளை சோளத்திலிருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.. மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும் போது, சோளத்திற்கு இரசாயன உர பயன்பாடு மிகவும் குறைவு எனவே, இந்த எரிபொருள் உற்பத்திக்கு சோளம் மிகவும் உகந்த பயிராகும். இந்த ஆராய்ச்சிப்படி, குறிப்பிட்ட மரபணுவை கொண்ட சோளம் உயிரி எரிசக்தியை உருவாக்க பெரிதும் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியினை (University of Florida in Gainesville, Washington […]

July 18, 2016 Editor
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை ! இயற்கை உரம்

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !

10 கிலோ பசுஞ்சாணம், 10 லிட்டர் நாட்டு பசு மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ பயறு மாவு (கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு) ஆகியவற்றில் ஏதாவதொன்றின் மாவு, ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, சாகுபடி செய்துவரும் வயலில் உள்ள மண் கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு.. 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி இரண்டு நாட்கள் நிழலில் வைக்க வேண்டும். காலை மதியம் மற்றும் மாலை என மூன்று வேலையும், கடிகாரச் சுற்றுப்படி […]

July 16, 2016 Editor
மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை ! இயற்கை உரம்

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை !

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன் கழிவுவைப் போட்டு அதனுடன் 5 கிலோ நாட்டுச் சர்க்கரையை இட்டு.. காற்றுப் புகாதவாறு இறுக்கமான மூடி நிழலில், 45 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால், பழ வாசனை அடிக்கும். நாட்டுச்சர்க்கரையும், மீன்கழிவும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும். இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற கணக்கில் கலந்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 16, 2016 Editor
அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை ! இயற்கை உரம்

அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை !

தேவையானவை: சோற்றுக்கற்றாழை – 3 கிலோ பிரண்டை – 3 கிலோ வேப்பிலை – 2 கிலோ பப்பாளி இலை – 2 கிலோ நொச்சி இலை – 2 கிலோ ஆமணக்கு இலை – 2 கிலோ ஊமத்தை இலை – 2 கிலோ எருக்கு இலை – 2 கிலோ ஆவாரை இலை – 2 கிலோ சுண்டைக்காய்ச் செடி இலை – 2 கிலோ ஆடு தீண்டா பாலை இலை – 2 […]

July 15, 2016 Editor
கட்டணப் பயிற்சி: காளான் வளர்ப்பு ! செய்திகள்

கட்டணப் பயிற்சி: காளான் வளர்ப்பு !

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 20-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ 27-ம் தேதி, ’தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் ரூ. 100. தொடர்புக்கு, செல்போன்: 96559-26547, 96292-46586. நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 15, 2016 Editor