32°C

Editor

கிச்சலிச்சம்பா சாகுபடி முறை ! இயற்கை விவசாயம்

கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !

கிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக் கொட்டி, தண்ணீர் விட்டு இரண்டு முறை உழ வேண்டும். பிறகு இலை, தழைகளை (எருக்கன், ஆவாரை போன்றவை) போட்டு உழ வேண்டும். நாற்றுகளை நடவு செய்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 20 நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும். களை எடுத்த 10 நாட்களுக்குள் […]

August 11, 2016 Editor
அதிக மகசூல் கொடுக்கும் நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு ! விவசாய கட்டுரைகள்

அதிக மகசூல் கொடுக்கும் நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு !

நிலக்கடலை [வி.ஆர்.ஐ] 105-110 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், ஏ.எல்.ஆர்-3, ஏ.கே-303 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. மானாவாரியாகப் பயிரிட ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இறவைக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே மாதங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு மானாவாரியில், 2,130 கிலோவும் இறவையில் 2,700 கிலோவும் மகசூல் கிடைக்கும். வி.ஆர்.ஐ-6 ரகத்தை விட அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. நிலக்கடலை விளையும் அனைத்துப் பகுதிகளும் சாகுபடி செய்ய ஏற்றவை. […]

August 10, 2016 Editor
அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் ! தானியங்கள்

அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் !

கம்பு கோ-10 ரகம் இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029, பி.டி-6033, பி.டி-6034, பி.டி-6039, பி.டி-6047 ஆகிய ஐந்து ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இறவை சாகுபடிக்கு சித்திரை, மாசிப் பட்டங்கள் ஏற்றவை. மானாவரிக்கு ஆடி, புரட்டாசிப் பட்டங்கள் ஏற்றவை. தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்ற பயிர். அடிச்சாம்பல் நோய்க்கு அதிக எதிர்ப்புச் சக்தி கொண்டது. அதிக அளவு புரதச்சத்து (12.07 […]

August 9, 2016 Editor
நெற்பயிரைத் தாக்கும் நத்தைக்குத் தீர்வு ! பயிர் பாதுகாப்பு

நெற்பயிரைத் தாக்கும் நத்தைக்குத் தீர்வு !

மழை பெய்து முடிந்த சமயத்தில் நத்தைகள் அதிகமாக வயலுக்குள் வரும். அவை நெற்பயிரின் அடிப்பகுதியைத் துண்டித்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நத்தைகளைத் தடுக்க.. கல்உப்பை வயலின் ஓரத்தில் தூவி விட்டால், அதில் சிறப்பான பலன் கிடைக்கும். நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

August 9, 2016 Editor
சம்பங்கி சாகுபடி செய்யும் முறை ! இயற்கை உரம்

சம்பங்கி சாகுபடி செய்யும் முறை !

ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் முறை பற்றி காண்போம். ஒன்றே முக்கால் அடி இடைவெளி ! சம்பங்கி சாகுபடி செய்ய.. களர் மண்ணைத் தவிர்த்து வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. அதிகமான குளிர் இருக்கும் பனிக்காலத்தைத் தவிர, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை குறுக்கு நெடுக்காக நான்கு முதல் ஐந்து சால் புழுதி உழவு செய்து, மண்ணைப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு டன் […]

August 9, 2016 Editor
கொம்பு சாண உரம் தயாரிப்பு இயற்கை உரம்

கொம்பு சாண உரம் தயாரிப்பு

கொம்பு சாண உரம், பூமியில் உள்ள ஆற்றலை அதிகப்படுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு உதவும் சாவியாக இருக்கிறது. இந்த உரத்தைத் தயாரிக்க செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றவை. இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஒரு அடி ஆழம் குழிதோண்டி, அதற்குள் இந்தக் கொம்பை புதைத்துவிட வேண்டும். சுமார் 6 மாத காலம் கழித்து எடுத்துப் பார்த்தால்.. கொம்புக்குள் வைக்கப்பட்ட சாணமானது, காப்பித் […]

August 8, 2016 Editor
இயற்கை முறையில் கடலை சாகுபடி ! இயற்கை உரம்

இயற்கை முறையில் கடலை சாகுபடி !

நிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைக் கொட்டி டில்லர் மூலம் நன்கு உழுது, 10 அடி நீளம், 8 அடி அகலத்தில் பாத்தி எடுக்கவேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். 50 சென்ட் நிலத்தில் 130 பாத்திகள் வரை எடுக்கலாம். பிறகு, பாத்திகளில் முக்கால் அடி இடைவெளியில் விதைக்கடலையை விதைக்கவேண்டும் (50 […]

August 6, 2016 Editor
பின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்.. கால்நடை

பின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்..

இது ஒரு வித்தியாசமான போராட்டம். கலபகோஸ் தீவுகளை அறிந்திருப்பீர்கள். பல்லுயிர் பெருக்கத்துக்கு மிக முக்கியமான தீவுகள் இவை. பரிணாமவியலின் பரிசோதனைகூடம் என அழைக்கபடும் தீவுகள். டார்வின் இங்கே வந்து தான் பரிணாமவியலை கற்றார். இங்கே இருக்கும் பின்ச் பறவைகள் எண்ணிக்கை மிக குறைந்து வந்தது. காரணம் மாகட் எனப்படும் அட்டைபூச்சிகள் இப்பறவைக் கூடுகளில் புகுந்து இளம் பின்ச் குஞ்சுகளின் ரத்ததை குடித்து அவற்றை அழித்து வந்தன. இத்தீவில் இருப்பது போன்ற பின்ச் பறவைகள் எங்கும் இல்லாததால் அட்டைபூச்சிகளிடம் இருந்து […]

August 5, 2016 Editor
பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்!! செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்!!

இந்திய அறிவியல் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 15 மாநிலங்களில் 115 மாவட்டங்களில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது. பருவ நிலை மாற்றம் என்பது ஒவ்வொரு பருவத்திலும் சராசரியாக உள்ள மழை, வெப்பம், காற்று ஆகியவையில் ஏற்படும் குறைந்த மற்றும் உச்சப்பட்ச மாற்றங்களே பருவநிலை மாற்றம் ஆகும். உதாரணத்திற்கு நல்ல வெயில் காலத்தில் சாரசாரிக்கும் அதிகமான மழைபொழிவு, நல்ல மழைக்காலத்தில் கொளுத்தும் வெயில் போன்றவையே. புவி வெப்பமயமாதலுக்கு […]

August 5, 2016 Editor
தூதுவளையின் நன்மைகள் (Solanum trilobatum) கீரை வகைகள்

தூதுவளையின் நன்மைகள் (Solanum trilobatum)

சித்தர் பாடல் காதுமந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம் ஓது மந்தம் முத்தோடம் உட்சூலை – தாதுநட்டம் மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர் தூதுவளைப் பத்திரியைத் தூய்த்து.                                (பதார்த்த குணசிந்தாமணி) பொருள் தூதுவளையை உணவாகக் கொண்டால், காது மந்தம், காசநோய்கள், தோல் நோய்கள், வயிற்று வலி போன்ற நோய்கள் தீரும். தூதுவளையின் தன்மை வெப்பம் உண்டாக்கி – […]

August 4, 2016 Editor