32°C

Editor

காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ ! காய்கறி வகைகள்

காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ !

ஒரு குடும்பத்துக்கு கால் ஏக்கர் நிலம் இருந்தால் போதிய வருவாய் எடுக்க முடியும் என்று தபோல்கர் கூறுகிறார். இதற்கு ஏற்ப தோட்டத்தை வடிவமைக்க வேண்டும். அன்றாடம் தோட்டத்தில் 4 மணி நேரம் உடல் உழைப்பு செலுத்த வேண்டும். பழமரங்கள், உரம் தரும் மரங்கள், தீவனம் வளம் குறைந்த நீரில் பயிர் செய்ய வேண்டும். காய்கறி, கிழங்கு, கீரை, பருப்பு, எண்ணெய்வித்து போன்றவற்றிற்கு அதிகம் தண்ணீரும் கவனமும் தேவை. வேர்க்கடலை போன்ற பயிர் வகை 20 சதுரடி பரப்பில் […]

October 5, 2016 Editor
தேவையில்லாத ஆசை – நம்மாழ்வார் செய்திகள்

தேவையில்லாத ஆசை – நம்மாழ்வார்

முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான். எதுக்குன்னா “டிராக்டர்ல ஊத்து; மோட்டார் போட்டு தண்ணி எடு; தானியம் பெருகும்”னு சொன்னான். இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான். எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம். சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது.  நாம […]

October 5, 2016 Editor
வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6 கால்நடை

வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6

இந்த வருமானத்தைவிட, தோட்டங்களில் வான்கோழி வளர்க்கும்போது  மண்ணும் வளமாகிறது. அரசாங்கம் சட்டம் போட்ட பின்பும் மழைநீர் சேகரிப்பை நாம் ஒழுங்காக செய்யவில்லை. ஆனால், வான்கோழிகள் அருமையான மழைநீர் கலன்கள் ஒரு வான்கோழி மண்குளியலுக்காக தோண்டும் குழியின் அளவு ஒரு அடி அகலம், அரையடி ஆழம்.. அதே மாதிரி நான்கு ஐந்து இடத்தில் குழிகளைத் தோண்டி விளையாடும். இந்த குழியில் மழை பொழியும் போது இரண்டு லிட்டர் தண்ணீர் நிற்கும். ஐந்து குழியிலும் பத்து லிட்டர் தண்ணீர் தேங்கும். […]

October 4, 2016 Editor
தயிரின் மருத்துவ குணங்கள்..! மருத்துவ குணங்கள்

தயிரின் மருத்துவ குணங்கள்..!

இந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. இனிப்பு பதார்த்தங்களில் தொடங்கி, விருந்தை முடித்து வைப்பது வரை என அனைத்து இந்திய உணவுகளிலும் தயிர் இருக்கும். நம் முன்னோர்கள் ஏதோ காரணமில்லாமல் இப்படி தயிரை பயன்படுத்தியிருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். தயிரில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்களை அறிந்தால் நீங்களே மலைத்துப் போவீர்கள். ஒரு குவளை தயிரில் 100-150 கலோரிகள், 3.5 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் சர்க்கரை, 8 முதல் 10 சதவீதம் […]

October 3, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 5 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 5

விற்பனை மற்றும் கொட்டகை அமைப்பு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்.. மாதிரியான விசேச காலங்களில் இதற்கு கிராக்கி அதிகம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் விற்கும்படி முன்கூட்டியே திட்டம் போட்டு வளர்க்க வேண்டும். வான்கோழி இறைச்சியில் கழிவு என்று பார்த்தால் வெறும் 20 சதவிகிதம்தான். அதனால்தான் உயிர் எடை கிலோ ரூ 140-க்கி விற்கிறது.. இரண்டு மாதக் குஞ்சுகளுக்குத் தந்தூரிக்காக நல்ல கிராக்கி இருக்கு. அந்த வயதுடைய குஞ்சுகளுக்கு இருநூறு ரூபாய் வரை கிடைக்கும். அதில்லாமல் பெரியதாக வளர்த்து […]

October 3, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 4 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 4

நோய்த்தடுப்பு மருந்துகள் குஞ்சு பொறித்த 7 முதல் 9 நாட்களுக்குள் குஞ்சுகளுக்கு ‘ஆர்.டி.எஃப்’ மருந்தை மூக்கிலும் கண்ணிலும் ஒவ்வொரு சொட்டு விட வேண்டும். 21 முதல் 23-ம் நாட்களுக்குள் அம்மை தடுப்பூசி போட வேண்டும். 27 முதல் 29-ம் நாட்களுக்குள் லசோட்டா சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒவ்வொரு பருவம் தொடங்கும்போதும் இந்த ஊசி போட்டால் எந்த நோயுமே வான்கோழிக்கு வராது. இதில் சில மருந்துகள் மட்டும்தான் கடைகளில் கிடைக்கும். சில மருந்துகளைச் சொல்லி […]

October 1, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 3 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 3

முட்டைப் பருவம் நல்ல அடர்தீவனமும் தேவையான அளவுக்கு சுத்தமான தண்ணீரையும் கொடுத்து வளர்த்தால் எட்டு மாதத்தில் முட்டை போட ஆரம்பிக்கும். அதனால் ஏழாவது மாதத்தில் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முட்டை போடும் காலத்தில் வயிற்றில் புழு இருந்தால், கருகலைந்து விடும். முட்டை பருவத்தில் கால்சியம் பற்றாக்குறையாக இருந்தால், முட்டை ஓடு பலமில்லாமல், தோல் முட்டை அதிகமாக கிடைக்கும். நல்ல முட்டையாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வரும் குஞ்சுகளின் கால் வளைந்து நொண்டி, நொண்டி […]

September 30, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு : பகுதி-2 கால்நடை

வான்கோழி வளர்ப்பு : பகுதி-2

இளம் பருவம் வான்கோழியில் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுவது குஞ்சுகளில்தான். இதைத் தடுக்க 7-ம் நாளில் ராணிக்கட் நோயிற்கு எதிரான ‘ஆர்.டி.வி.எப்’ சொட்டு மருந்தைக் கோழியின் கண்ணில் ஒரு சொட்டு, மூக்கில் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். அதோடு முதல் இருபது நாளைக்கு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 21-ம் நாளில் அம்மை ஊசியை இறக்கையில் போடவேண்டும் 30-ம் நாளில் மறுபடியும் ராணிக்கட்டுக்கு எதிராக ‘லசோட்டா’ சொட்டு மருந்தை கண்ணிலும் மூக்கிலும் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். இந்த மருந்துகள் […]

September 29, 2016 Editor
வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1 கால்நடை

வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1

வான்கோழி வளர்ப்பு தொடர்பாக, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் கே.வி.பாலு இங்கே விவரிக்கிறார். “வான்கோழியில கருப்பு நிறத்துல இருக்குறது, நமது நாட்டு இனம். இது போக, அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை, சிறிய வெள்ளை..னு பல ரகங்கள் இருக்கு. இந்த ரகங்களில் வெள்ளை நிற இறக்கை இருக்கும் வான்கோழிகளுக்குத்தான் கிராக்கி அதிகம். வெள்ளை நிற இறக்கை இருக்கும் வான்கோழிகள் வேகமாக வளர்வதுடன், நமது தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றது. […]

September 26, 2016 Editor
பப்பாளியில் வேர் அழுகலைத் தடுக்க சுண்ணாம்பு துத்தநாகக் கரைசல்! பயிர் பாதுகாப்பு

பப்பாளியில் வேர் அழுகலைத் தடுக்க சுண்ணாம்பு துத்தநாகக் கரைசல்!

சில கன்றுகளின் வேர்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் தாக்குவதால், கன்றுகள் சரிந்து விடும். இலைகள் பழுப்பு நிறமாகி, கன்று வாடலாகக் காணப்பட்டால், தூர்ப்பகுதியில் லேசாக குழிதோண்டிப் பார்த்தால் வேர் அழுகல் தெரியும். இதைத் தடுக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சுண்ணாம்பு, 200 கிராம் மயில்துத்தம் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். மயில்துத்தத்தை நேரடியாகத் தூவினால் பொங்கி, முகத்தில் தெறித்துவிடும். அதனால் ஓரமாகத் தூவி, மெதுவாகக் கலக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மயில்துத்தக் கரைசலைக் கலந்து, […]

September 22, 2016 Editor