32°C

Editor

உலகின் முதல் மீத்தேன் டிராக்டர் செய்திகள்

உலகின் முதல் மீத்தேன் டிராக்டர்

உலகில் முதல் மீத்தேன் ஆற்றல் கொண்ட டிராக்டரை இத்தாலி உருவாக்கி உள்ளது. இந்த புதிய டிராக்டரை இத்தாலியின் பொறியாளார்கள் மீத்தேன் எரிபொருளை கொண்டு இயங்கும் விதத்தில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது Green House பாதிப்பு உலகில் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் Green House பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட மாசு மற்றும் இயற்கை பாதிப்பால் ஏற்படுகிறது. Green House-ல் உள்ள கார்பனின் அளவினை குறைக்க விலங்குகளின் கழிவிலிருந்து இயந்திரங்களை இயக்க முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இத்தாலி விஞ்ஞானிகள் […]

April 22, 2017 Editor
உலகின் அழகிய மரம்! செய்திகள்

உலகின் அழகிய மரம்!

ஜப்பானின் Tochigi என்னும் இடத்தில் Ashikaga எனும் பூங்கா உள்ளது. இங்குதான் உலகின் மிகவும் அழகான விஸ்டீரியா மரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மிகப் பழமையானதும், மிக விசாலமானதுமாக உள்ள இம்மரம், இப்பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுமார் 143 வயதான இந்த விஸ்டீரியா மரத்தின் கிளைகள் விட்டங்களின் துணையோடு நிற்பதால் ஓர் மலர் குடைபோல் காட்சி தருகிறது. மே முதல் ஏப்ரல் வரையிலான நடுப்பகுதியில், இப்பூங்காவிற்கு வருகை தந்தால் இந்த விஸ்டீரிய மரத்தின் முழு அழகையும் ரசிக்கலாம் […]

April 22, 2017 Editor
தண்ணீர் பிரச்னையை போக்கணுமா? செய்திகள்

தண்ணீர் பிரச்னையை போக்கணுமா?

தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்று பல்வேறு அரசாங்கங்கள் பெரும்முயற்சி எடுத்து பின் இதை ஒன்றிணைக்க ஆகும் செலவிற்கு நிதிகளை திரட்ட பெரும் பணி என்று பல்வேறு சிக்கல்கள் காரணமாக அரசாங்கங்கள் இதை கைவிட்டுவிட்டன. ஆனால் பெரும் செலவு செய்து தேசியை நதிகளை ஒன்றிணைத்தாலும் அதன் பின்னும் சிக்கல்கள் நிச்சயமாக வரும். எப்படியெனில் ஒரு வேலை அதிகப்படியான தண்ணீர் வந்தால் அவற்றை எப்படி முறையான மேலாண்மை செய்யலாம் என்ற திட்டம் இல்லையெனில் நமக்கு சிரமமே. ஆனால் 2500 வருடங்களுக்கு […]

April 22, 2017 Editor
வாழைச் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

வாழைச் சாகுபடி செய்யும் முறை

வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே… ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் அழிந்துவிடும். ஆடி மாதத்தில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். நடவுக்கு முதல் நாள் குழியில் தண்ணீர்விட்டு ஈரப்படுத்த வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து, […]

April 21, 2017 Editor
கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி? செய்திகள்

கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி?

பசுமை விகடனில் வெளிவந்த பேட்டி… சிக்ரி (CECRI) இயக்குநர் விஜயமோகன் பிள்ளையிடம் பேசினோம். “தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கழிவுநீரை மறுசுழற்சி செய்வது தொடர்பான ஆராய்ச்சியை எங்கள் மைய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். ஆய்வின் முடிவில் மிகவும் குறைந்த செலவில் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆலையில் கிராபைட் மிதவை முறையில் பிரிக்கும்போது, மிக நுண்ணியக் கிராபைட் துகள்கள் (5 முதல் 6 மைக்ரான் அளவு) நீருடன் கலந்து வெளியேறுகின்றன. […]

April 19, 2017 Editor
ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை இயற்கை உரம்

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம். கழிவுகள் கலந்த கலவையை […]

April 15, 2017 Editor
சிறுதானிய மாநாடு செய்திகள்

சிறுதானிய மாநாடு

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் நபார்டு வங்கி இணைந்து சென்னையில் ஏப்ரல் 21-ம் தேதி ‘தமிழ்நாடு சிறுதானியங்கள் மாநாடு’ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. சிறுதானியங்களின் விற்பனை வாய்ப்புகள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள்.. போன்றவை பற்றி இந்நிகழ்ச்சியில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். அனுமதி இலவசம். முதலில் முன்பதிவு செய்யும் 100 விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி. இடம் : தாஜ் கோரமண்டல் ஓட்டல், நுங்கம்பாக்கம், சென்னை. தொடர்புக்கு, செல்போன் : 99404 88807 நன்றி பசுமை […]

April 13, 2017 Editor
மிளகு சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

மிளகு சாகுபடி செய்யும் முறை

“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயரப்பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி தேவையான தொழு உரம், […]

April 13, 2017 Editor
பலன் தரும் வல்லாரை..! கீரை வகைகள்

பலன் தரும் வல்லாரை..!

திப்பிலியை வல்லாரைச் சாற்றில் 7 முறை ஊறவைத்துப் பாவனை (பக்குவம்) செய்து உலர்த்திப் பொடித்து உண்டுவர, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். தொண்டை கரகரப்பு நீங்கி குரல்வளம் உண்டாகும். உலர்ந்த வல்லாரை இலை, வெட்பாலை விதை, வசம்பு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றைச் சமஎடையில் எடுத்துப் பொடி செய்து வைத்துகொள்ளவும். இதிலிருந்து தினமும் இருவேளை 25 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து உண்டு வர தொண்டை கபம், தொண்டைக்கம்மல் நீங்கி நல்ல குரல்வளம் உண்டாகும். இது பாடகர்களுக்கு மிகச்சிறப்பான […]

April 12, 2017 Editor
விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! செய்திகள்

விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினி என்ற மூன்றெழுத்தின் பிரமாண்டம் இந்தியா முழுதும் அறியும். கர்நாடாகவில் விதைக்கப்பட்டாலும் தமிழகத்தின் விருட்சமாய் வளர்ந்திருக்கும் இந்த உச்ச நட்சத்திரம். உச்சநட்சத்திரத்தினை தாக்கினாலே போதும், நாமும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்றே பலரும் இவரை காயப்படுத்தினாலும், பொறுமையாக உட்கார்ந்திருக்கும் ரஜினியை, சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வா, என்று கோரிக்கை வலுக்கிறது. ஆனாலும் அவரே அறியாமல் பல வருடங்களாக அரசியலில் அவர் நீக்கமற கலந்திருக்கிறார் என்பதை அவர் அறிந்தும், அறியாமலும் இருக்கிறார். யார் புதியதாக கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பித்திருக்கும் […]

April 11, 2017 Editor