32°C

விளைச்சல்

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை இயற்கை உரம்

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு  பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது. நன்றி என். மதுபாலன், B.sc […]

January 12, 2017 Editor
அமிர்த கரைசல் தயாரிப்பு இயற்கை உரம்

அமிர்த கரைசல் தயாரிப்பு

தேவையானவை 1. பச்சை பசுஞ்சாணம் -10kg 2. பசுவின் கோமியம் -10லிட்டர் 3. நாட்டு சர்க்கரை -250g 4. தண்ணீர் -100lit செய்முறை இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும். இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம். அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம். பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும். தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும். […]

January 11, 2017 Editor
பஞ்சகவ்யா தயாரிப்பு இயற்கை உரம்

பஞ்சகவ்யா தயாரிப்பு

1. பசுமாட்டு கோமியம் – 4 லிட்டர் – பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள் 2. பசும்பால் – 3 லிட்டர் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள் 3. நன்கு புளித்த தயிர் – 2 லிட்டர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள் (லேக்டோபேஸில்லஸ்) 4. பசுமாட்டு நெய் – அரை லிட்டர் – வைட்டமின்-ஏ, -வைட்டமின்பி, கால்சியம், கொழுப்புகள் 5. இளநீர் -2 – சைட்டோசைனின் எனும் வளர்ச்சி ஊக்கி […]

January 10, 2017 Editor
வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..! இயற்கை உரம்

வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..!

நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு – 200 கிராம் மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக செய்முறை தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை அரைக்க வெண்டும். இரவு முழுவதும் பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும். இரண்டு […]

January 9, 2017 Editor
வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..! இயற்கை உரம்

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால் மட்டுமே சாவின் விளிம்பில் இருக்கும் விவசாயிடம் இந்த செய்தி சென்றுசேரும், உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரிக்கும் ஒரு நுண்ணுயிர் கலவை பயிர்கள் தற்காலிகமாக வறட்சியை தாங்கி 7 முதல் 10 நாட்கள் தாக்குப்பிடிக்க உதவும் , […]

January 7, 2017 Editor
பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை. இயற்கை உரம்

பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

தேவையானவை கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ செய்முறை இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும். 1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும். நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க […]

January 7, 2017 Editor
இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள் இயற்கை உரம்

இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் […]

January 6, 2017 Editor
பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்! இயற்கை விவசாயம்

பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

சொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.. “மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ, அதே மாதிரி பயிர்களுக்கும் தினமும் தண்ணீர் அவசியம். ஆனா அதுக்கும் அளவு உண்டு. தினமும் தேவையான அளவு தண்ணீர் கொடுக்காமல் வாரம் ஒரு தடவையோ, நாலு நாளைக்கு ஒரு தடவையோ அதிகத் தண்ணீரை சிலர் பாய்ச்சுவாங்க. எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் அன்றைக்குத் தேவையான அளவைத்தான் செடி […]

January 6, 2017 Editor
விதை நேர்த்தி செய்யும் முறை இயற்கை விவசாயம்

விதை நேர்த்தி செய்யும் முறை

நல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு. தண்ணீரின் அடியில் மூழ்கியிருக்கும் விதைகளை விதைப்பதற்கு உபயோகிக்கவும். இந்த முறை மூலம் சேதமடைந்த விதைகளை அப்புறப்படுத்தலாம். அடியில் மூழ்கியிருக்கும் விதைகள்தான் நன்கு முளைப்புத்திறன் கொண்டவை. 15 கிலோ விதைக்கு தலா 600 கிராம் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், ட்ரைக்கோடெர்மா விரிடி, 100 மில்லி பஞ்சகவ்யா […]

January 5, 2017 Editor
காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை மருத்துவ குணங்கள்

காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை

காலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள் கடைப்பிடித்த வழலை வாங்கும் முறை (உடலில் படிந்துள்ள நச்சுகளை வெளியேற்றும் முறை). இதை வடலூர் அருட்பிரகாச வள்ளலார்தான் உலகுக்கு அறிவித்தார். சித்தர்களுக்கு இதெல்லாம் முடியும், நம்மால் செய்ய முடியுமா என்று மலைப்பவர்கள், பின்வரும் காலை பானத்தை செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். உலர்ந்த மஞ்சள் கரிசாலை இலை […]

January 4, 2017 Editor