32°C

தொழில்நுட்பம்

சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம் தொழில்நுட்பம்

சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம்

தமிழ்நாட்டில் நெல் 2.04 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 9.98 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல் ஒரு முக்கிய உணவுப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் அரிசி தமிழ் நாட்டின் ஒரு பிரதான உணவு. நெல் வளர்ப்பிற்கு மழைபொழிவே  முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும் மழைபொழிவால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தே உள்ளது. மேலும் பயிருக்கு பிந்தைய வறட்சி காரணமாக பயிர் பாதியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பருவ நிலை […]

August 31, 2020 editor news
இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய பக்ஹார்ன் பழ சாகுபடி தொழில்நுட்பம்

இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய பக்ஹார்ன் பழ சாகுபடி

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (Defence Research and Development Organisation) இணைந்து இமாச்சல பிரதேச பெண்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மதிப்புக்கூட்டு முறைகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய மதிப்புக்கூட்டு முறை வாயிலாக அங்கு சாகுபடி செய்யப்படும் கடல் பக்ஹார்ன் சாகுபடி வாயிலாக வருடம் முழுவதும் வருமானம் பெறும் வகையில் மதிப்புக்கூட்டிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு […]

August 31, 2020 editor news
மண் மற்றும் சுற்றுசூழலை காக்கும் பேணுகை வேளாண்மை!! தொழில்நுட்பம்

மண் மற்றும் சுற்றுசூழலை காக்கும் பேணுகை வேளாண்மை!!

அனைத்து உயிரினங்களும் மண்ணை சார்ந்தே வாழ்கின்றன. மண்ணின்றி வாழ்வில்லை; வாழ்வின்றி மண்ணில்லை. மண் வளம் காத்திட தேசிய அளவிலான ‘மண் வள அட்டை வழங்கல்’ திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தபோது, ”நலமான மண்ணே பசுமையான பண்ணைக்கு வழிவகுக்கும்,” என்றார். வேளாண்மையில் தாவர வளர்ச்சிக்கு மண் ஒரு மிக முக்கியமான ஊடகமாகவும், உயிரினங்களின் நலத்திற்கு வளமான மண்ணே அடிப்படை ஆதாரமாகவும் அமைகிறது. மண் வளத்தை காப்பதற்கு வகுத்துள்ள உக்திகளில் ஒன்று பேணுகை வேளாண்மை. பேணுகை வேளாண்மையில் மூன்று […]

August 28, 2020 editor news
டிராகன் பழம் சாகுபடி  – ஓர் அறிமுகம் தொழில்நுட்பம்

டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம்

டிராகன் பழம் நாம் அதிகமாக அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். இதன் தாயகம்  தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். டிராகன் பழம் தமிழ்நாட்டில் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு சிலரே இந்த டிராகன் பழம் சாகுபடி ஆரம்பித்துள்ளனர். டிராகன் […]

August 25, 2020 editor news
நேரடி நெல் விதைப்பு முறை (டி.எஸ்.ஆர்) தொழில்நுட்பம்

நேரடி நெல் விதைப்பு முறை (டி.எஸ்.ஆர்)

 நீர், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக வழக்கமான நெல் உற்பத்தி கடுமையான தடைகளை எதிர்கொள்கிறது. டி. எஸ். ஆர் என்பது தொழிலாளர் தேவையை குறைப்பதற்கும், தண்ணீரைச் சேமிப்பதற்கும், காலநிலை அபாயங்களுக்கும் ஏற்ப மாற்றுவதற்கும் வழக்கமான பாரம்பரிய இடமாற்றம் செய்யப்படும் (seedlings transplant) முறைக்கு சாத்தியமான மாற்றமாகும். தற்போது நிலவி வரும் சுகாதார சூழ்நிலைக்கேற்ப இம்முறை தொழிலாளர் தேவையை குறைக்கிறது (Covid–19) . டி. எஸ். ஆர் – ன் நன்மைகள்: பசுமை இல்ல வாயுக்கள் […]

August 25, 2020 editor news
விஞ்ஞானி டூ விவசாயி – ஹரி நாத் காசிகணேசன் தொழில்நுட்பம்

விஞ்ஞானி டூ விவசாயி – ஹரி நாத் காசிகணேசன்

உலகில் பல தொழில்கள் இயங்கி கொண்டியிருந்தாலும், ஏர்த் தொழிலின் பின்னேதான் அனைவரும் சுற்ற வேண்டிருக்கிறது. இந்த கருத்திற்கு இணங்க தமிழ்நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து, அப்பணியை விடுத்து மீண்டும் தாயகம் திரும்பி இயற்க்கை விவசாயம் செங்கல்பட்டில் உள்ள கலிவந்துபட்டு கிராமத்தில் செய்து வருகிறார், முனைவர். ஹரி நாத் காசிகணேசன் அமெரிக்காவில் நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வந்தவர் முனைவர்  ஹரிநாத். நமது தமிழ்நாட்டில் மிகவும் போற்றக்கூடிய இயற்கையான முறை உழவுத் தொழிலைத் […]

August 21, 2020 editor news
மதிப்புக்கூட்டலின் சிறப்பும் மற்றும் அதன் முக்கியத்துவமும் தொழில்நுட்பம்

மதிப்புக்கூட்டலின் சிறப்பும் மற்றும் அதன் முக்கியத்துவமும்

மதிப்புக் கூட்டல் (value addition) என்றால் என்ன அதன்  சிறப்பு அம்சம் என்ன  என்பது குறித்து அறிய வேண்டியவற்றை கீழே காண்போம். மதிப்புக்கூட்டல்: எந்த‌ ஒரு வேளாண் மூலப்பெருட்களையும்  செயலாக்கமோ அல்லது அதன் அடுத்த உற்பத்தி நிலைக்கோ கொண்டு செல்வதை மதிப்புக்கூட்டல் என்பார்கள். எது மதிப்பைச் சேர்க்கும்: தரம் (quality) செயல்பாடு(functionality) உருவம்(form) இடம்(place) நேரம் (time) பயன்படுத்தும் விதத்தை சுலபம்‌ ஆக்குதல் (ease of possession) இவை அனைத்தும்  வெவ்வேறு விதங்களில் வேளாண் பொருட்களுக்கு மதிப்பினை […]

August 20, 2020 editor news
கேரளா மாநிலத்தில் தென்னை சாகுபடியில் புதிய மழைநீர் சேகரிப்பு முயற்சிகள் தொழில்நுட்பம்

கேரளா மாநிலத்தில் தென்னை சாகுபடியில் புதிய மழைநீர் சேகரிப்பு முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக நீர்நிலை மேலாண்மையில் மழைநீர் சேகரிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறிப்பாக வீடுகளில், வணிக வளாகங்கள், தொழில் சாலைகளில் அதிகளவு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கும் வழிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் செயல்பாட்டில் நாடு முழுவதும் உள்ளது. இத்தகைய நடைமுறை சூழலில் கேரளா மாநில வேளாண் துறை “காசர்கோடு” மாவட்டத்தில் உள்ள 50,000 ஹெக்டர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 10 லட்சம் தென்னை மரங்கள் மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்பை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியில் […]

August 19, 2020 editor news
பசுமை கூடாரங்களில் குடைமிளகாய் சாகுபடி தொழில்நுட்பம்

பசுமை கூடாரங்களில் குடைமிளகாய் சாகுபடி

பாதுகாக்கப்பட்ட சாகுபடி என்பது ஒரு உயர் தொழில் நுட்ப  முறையாகும். இது பயிரிடப்படும் தாவரங்களுக்கு சாதகமான தட்ப வெப்ப சூழலை உருவாக்குகிறது. பல்வேறு முறைகளில் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறைகளான பசுமைக்கூட அமைப்பு (விசிறி மற்றும் திண்டு அமைப்பு), இயற்கையான காற்றோட்டம், நிழற்கூடம், பாலித்தீன் சுரங்கம் மற்றும் சுரங்கப்பாதையில் நடப்பது ஆகியவை பயன்பாட்டில் உள்ளது. சர்வதேச அளவில் நெதர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் பரப்பளவில் முன்னணியாக திகழ்கின்றன. இந்தியாவில் […]

August 19, 2020 editor news
அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி தொழில்நுட்பம்

அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி

உலக அழகி கிளியோபாட்ராவுக்கு மிகவும் விருப்பமான  பழம் – அத்திப்பழம் என்று நீங்கள் அறிவீரா ? ஆம் உண்மைதான் கிளியோபாட்ராவுக்கு விருப்பமான பழங்ககளுள் ஒன்று இந்த அத்திப் பழம். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழத்தை அப்படியேவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். அத்தி மரம் மிகவும் மருத்துவ குணம் பெற்றது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டது. தினசரி 2 பழங்களை […]

August 17, 2020 editor news