32°C

editor news

தேனீ வளர்ப்பு பகுதி – 11 தொடர்

தேனீ வளர்ப்பு பகுதி – 11

தேன் மகசூலை அதிகரிப்பதற்கான சில யுக்திகள்  மிதமான அல்லது சராசரியான தேன் உற்பத்திக்காக தேனீ கூடுகளைக் கையாளுவதற்கான அனைத்து பருவகால மற்றும் இதர மேலாண்மை நடைமுறைகளைப் பற்றிய பல வழிமுறைகள் வெவ்வேறு அத்தியாயங்களின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வணிக ரீதியில் தேனீ வளர்ப்பவர்கள் மிக அதிக மகசூலைப் பெறுவதற்கான சில கூடுதல் தகவல்களை இந்தப் பகுதியில் பார்க்க உள்ளோம். செயற்கை ராணி விலக்கு சட்டங்களைப் பயன்படுத்துதல் நல்ல தரமான அடைகளைப் பயன்படுத்துதல் தேனீ இழப்புகளைத் தடுத்தல் தரமான […]

October 21, 2020 editor news
கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம் தொழில்நுட்பம்

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்ட நிலவேம்பின் தாவரவியல் பெயர் ஆண்ட்ராகிராபிஸ் பேனிகுலேட்டா. அக்கந்தேசியே எனப்படும்  தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இத்தாவரமானது கசப்புகளின் அரசன் என்றழைக்கபடுகிறது. இதன் இலைகள் மற்றும் வேறானது சிக்கன் குனியா, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், வயிற்றுப்புண் மற்றும் இருமல், பாம்புக்கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இனப்பெருக்கம் நிலவேம்பு பொதுவாக விதைகள் முலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. தரமான விதைகளை வேளாண்மை பல்கலை கழகம்  அல்லது ஆராய்ச்சி நிலையங்களிலில் இருந்து பெற்று விதை உற்பத்தி செய்ய […]

October 21, 2020 editor news
சிப்பி காளான்-   சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2) தொடர்

சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும் அல்லது வைக்கோலை 10 கிராம் கார்பென்டாசிம் மற்றும் 100 மில்லி ஃபார்மலின் கலந்த நீரில் 16 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வைக்கோலை உலர்த்திக் கொள்ள வேண்டும்.  கைகளால் வைக்கோலை எடுத்து […]

October 21, 2020 editor news
மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள் தொழில்நுட்பம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்தில் பண்ணை வீடுகள் அமைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டில் நகர்ப்புறங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளை கடந்த 10 ஆண்டுகளாக வேளாண் சுற்றுலாவை (Farm Tour) நோக்கி ஈர்த்து வருகின்றனர், முதலில் மிகச் சிறிய அளவில் துவங்கிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள் தற்போது பெரிய அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்த புதிய சுற்றுலா முயற்சியில் பயணிகளை வெகுவாக ஈர்க்கவும், அவர்களின் […]

October 21, 2020 editor news
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8

பசுமைப் புரட்சி என்னும் வார்த்தையை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம், நாம் பசுமையைப் புரட்சி செய்யப்போவதில்லை. உணவு உற்பத்தியில் புரட்சி செய்யப்போகிறோம். இந்தப் பசுமை புரட்சியின் முக்கியச் சாரம்சமே நவீனமயமாக்கல் தான். இன்று எப்படி நாம் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களைச் சென்று சேருமோ சேராதோ என்று விவாதிக்கிறோமோ அதே போலத் தான் அன்று பசுமைப் புரட்சியும், அது அனைத்து விவசாயிகளையும் சென்று சேர்கிறதா என்ற கேள்வி இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் – சமூகம். […]

October 21, 2020 editor news
மாம்பழங்களில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

மாம்பழங்களில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை கட்டுப்பாடு

அறிமுகம் மாம்பழம் இந்தியாவின் தேசியப் பழமாகும். உலகின் மாம்பழங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படுகின்றது. மேலும், 2017 ஆம் வருடத்தில் மாம்பழங்களின் உலகளாவிய உற்பத்தி  50.6 மில்லியன் டன்கள் ஆகும், மாம்பழபழங்கள் அதிகம்  உற்பத்தி  செய்யும் நாடாக இந்தியா உள்ளது (19.5 மில்லியன் டன்). இந்தியாவிற்கு அடுத்ததாக பெரிய உற்பத்தியாளர்களாக சீனா மற்றும் தாய்லாந்து உள்ளது. பொதுவாக மாம்பழம் இனிமையானது, இருப்பினும் மாம்பழச்சதைப்பகுதி, அதன் சுவை மற்றும் அமைப்புக்கு ஏற்ப வகைகள் மாறுபடுகின்றன. அல்போன்சோ […]

October 16, 2020 editor news
அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள் கால்நடை

அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்

அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவனம் மற்றும் இது ஒரு  மிதக்கும் நீர்வாழ் உயிரி  ஆகும். இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடியது. கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர். அவர்களுக்கு அசோலா  ஒரு சரியான தீர்வாகும். அசோலா  கால்நடைகள், மீன், பன்றி மற்றும் கோழிகளுக்கு ஏற்ற நிலையான தீவனமாகும், இது தவிர பண்ணையில் உயிர் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே பல விவசாயிகள் அசோலா […]

October 16, 2020 editor news
சம்பங்கி சாகுபடி தொழில்நுட்பங்கள் தொழில்நுட்பம்

சம்பங்கி சாகுபடி தொழில்நுட்பங்கள்

முன்னுரை வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்யப்படும் வணிக மலர்களில் சம்பங்கி முக்கியமான மலர்ப்பயிராகும். இம்மலர்கள் கவர்ச்சியான வெண்மை மற்றும் வண்ண நிறங்களாலும் மெல்லிய நறுமணத்துடனும், கொய்மலர் மற்றும் உதிரி மலராகவும், நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன.  மேலும் தோட்டங்களில் அழகுக்காக தொட்டிகளிலும், படுக்கைகளிலும், வரப்புகளிலும் வளர்க்கப்படுகின்றன. வட மாநிலங்களில் இவை பெரும்பாலும் கொய்  மலருக்காகவும், தென்னிந்தியாவில் உதிரி மலருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றது. இதன் மலர்கள் மென்மையாக இருப்பினும் மலரை சுற்றிலும் மெழுகு போன்ற […]

October 16, 2020 editor news
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

மண் என்பது பல்லுயிரின் அடிப்படை. ஆற்றல் உருவாகும் இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஒரு காட்டு அமைப்பில் மான், புலி, சிங்கம் இருக்கிறதோ, ஒரு நீர் அமைப்பில் மீன்கள், ஆமைகள் எல்லாம் இருக்கிறதோ, அதே போல மண் என்பதும் பல உயிர்களைத் தாங்கிய அமைப்பு. நம்முடைய கண்ணுக்கு வெறும் கரடுமுரடான கல்லும் பாறையுமாகத் தெரிந்தாலும் மண் ஒரு வீடு. இந்த வீட்டில் பாக்டீரியா, பூஞ்சைகள், பாசிகள், ஆக்டினோமைசீட்கள் என்ற பெரிய கூட்டுக் குடும்பம் இருக்கிறது. இதில் பல […]

October 16, 2020 editor news
மேகாலயா மாநிலத்தில் பெண் விவசாயிகள் அதிகாரம் பெற உதவிய பலாப் பழ சாகுபடி தொழில்நுட்பம்

மேகாலயா மாநிலத்தில் பெண் விவசாயிகள் அதிகாரம் பெற உதவிய பலாப் பழ சாகுபடி

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரபல “The Guardian” இதழில் இந்தியாவின் பலாப் பழம் குறித்த தவறான செய்தி சர்வதேச அளவிலும் நமது நாட்டிலும் பல சர்ச்சைகளை உருவாக்கியது. தவறான புரிதல்களுடன் எழுதப்பட்ட இக்கட்டுரையின் எதிர்வினையாக இந்திய ஊடக உலகில், சமூக தளங்களில் பலாப் பழத்தின் சிறப்புகள் குறித்து பலதரப்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்டது. இத்தகைய சூழலில் அதிகப்படியான எதிர்வினைகள் கேரளா மாநிலத்தில் இருந்து வந்தது. கேரளா மாநிலத்தின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் வீடுகளில் ஜூன் 5ம் […]

October 16, 2020 editor news