32°C

editor news

நெல் பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பு

நெல் பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சாகுபடி முறைகள் (Cultural methods) 1.மண்ணை ஆழ உழும்போது மண்ணுக்கடியில் வாழும் பூச்சிகளும், நோய்க்காரணிகளும், களைகளும் புதைக்கப்படுகின்றன அல்லது மண்ணுக்கு மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. 2.தழைச்சத்து அதிகம் இடுவதால் பூச்சி, நோய்கள் அதிகரிக்கும். எனவே சிபாரிசு செய்யப்பட்ட தழைச்சத்து உரத்தினை பிரித்து இட்டு பூச்சி நோய் தாக்குதலைக் குறைக்கலாம். 3.விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைத்து பூச்சி நோய் தாக்குதலை தவிர்க்கலாம். 4.நெல் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி விட்டு நடவு செய்வதால் நெல் […]

August 31, 2017 editor news
பருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பு

பருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

  சாகுபடி முறைகள்(cultural methods): 1.கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணுக்கு அடியில் வாழும் பூச்சிகள், புழுக்கள், நோய்க்கிருமிகள் வெளியே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. 2.அறுவடைக்குப்பின் எஞ்சிய பயிர் பாகங்களை சேகரித்து அழித்து மறைந்து வாழும் தண்டுக்கூன் வண்டு, மாவுப்பூச்சி, அசுவினி ஆகியவற்றைத் தவிர்க்கலாம். 3.தொடர்ந்து பருத்தியைப் பயிரிடாமல் மாற்றுப் பயிரிட்டு பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம். உம். பருத்திக்குப் பின் நிலக்கடலை. 4.பருவத்தே பயிரிடுவதன் மூலம் அதாவது ஒரு பகுதியில் 15 நாள் காலவரையரைக்குள் விதைத்து பூச்சி நோய் […]

August 31, 2017 editor news
எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்! தொழில்நுட்பம்

எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!

வெற்றி நடை போடும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டிய பொருளாகவும் இடைத்தரகர் இல்லாமலும் விற்பனை செய்யவேண்டும் என்கிற நோக்கில் அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம்தான், ‘விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்’.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், கரூர் மாவட்டம், நடையனூரில் இயங்கிவரும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்’. 500 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இந்நிறுவனம். நடையனூர் […]

August 31, 2017 editor news
”தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்?” இயற்கை விவசாயம்

”தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்?”

“தமிழ்நாட்டில் தரமான மாஞ்செடிகள் உற்பத்தி செய்யும் அரசுப் பண்ணை எங்குள்ளது?” எம்.சுகந்தி, திருவெண்ணெய்நல்லூர்.கன்னியாகுமரியில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் அலுவலர் பதில் சொல்கிறார். “தமிழக வேளாண்மைத் துறையின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 53 தோட்டக்கலை பழப்பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பழ வகைக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த 53 பண்ணைகளுக்குத் தேவையான மா ரகங்களைக் கன்னியாகுமரி பண்ணையில்தான் உற்பத்திசெய்து விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் மா ரகங்களை உற்பத்தி செய்ய பிரத்யேகமாக […]

August 31, 2017 editor news
உலகுக்குச் சோறுபோடும் சிறு விவசாயிகள்! சில வரி செய்திகள்

உலகுக்குச் சோறுபோடும் சிறு விவசாயிகள்!

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது… 1989ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறத் தொடங்கிய நேரம் அது. அந்தச் சமயத்தில் வேளாண்மைக்காவும் வணிகத்துக்காகவும் சோவியத் யூனியனை அதிகம் நம்பியிருந்த கியூபா நாட்டின் வேளாண் பொருளாதாரம் ஆட்டம் காணத்தொடங்கியது. அப்போது கியூபா நாட்டின் விளைநிலங்களில் அதிகளவு கரும்புதான் விளைவிக்கப்பட்டது. அந்தக் கரும்பைச் சோவியத் யூனியனுக்கு பிரீமியம் விலையில் விற்பனை செய்து கொண்டிருந்தது. […]

August 31, 2017 editor news
பயிர் இனப்பெருக்கத்தின் நோக்கம்(Objectives of plant breeding): பயிர் பாதுகாப்பு

பயிர் இனப்பெருக்கத்தின் நோக்கம்(Objectives of plant breeding):

  1.நடைமுறையில் உள்ள பயிர் இரகங்களைக் காட்டிலும் உயர்ந்த பயிர் இரகங்களைப் பெருக்கம் செய்தல். 2.பயிர் விளைச்சலை அதிகரித்தல். 3.விளைபொருட்களின் தரம் உயர்த்துதல். 4., பூச்சிநோய் காரணிக்கு எதிர்ப்பு சக்தி ஊட்டுதல். 5.வறட்சி, உவர் தன்மை, அதிக வெப்பம், குளிர், பனி ஆகியவற்றை தாங்கி வளரும் தன்மையை அதிகரித்தல். 6.குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் பெறுதல். 7.ஒளி மற்றும் வெப்ப மாறுபாட்டால் பாதிப்புக்குள்ளாத இரகங்களைத் தோற்றுவித்தல். 8.ஒரே சமயத்தில் பயிர் முதிர்ச்சி அடைதல். 9.பயிருக்குத் தேவையான புறப்பண்புகளைத் தோற்றுவித்தல். […]

August 30, 2017 editor news
மிளகு சாகுபடி! தானியங்கள்

மிளகு சாகுபடி!

  “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டுலும் விருந்துண்ணலாம்” என்கிறது பழமொழி! ஆனால், எங்களது காரமான மிளகு ஐந்து இருந்தாலே போதும் அனைவரின் வீட்டிலும் உணவருந்தலாம்” என்கின்றனர் புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி விவசாயிகள். மலைகளிலும், மலையடிவாரத்திலும் மட்டுமே மிளகுக் கொடி வளரக்கூடியது என்பதனை உடைத்து சமதரையிலும் மிளகுக் கொடியினை வளர்க்கலாம் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தினர். சாதித்த கறம்பக்குடி விவசாயி ’வாசனைப் பயிர் அரசன்’ என்றழைக்கப்படும் மிளகு கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாகத்தான், […]

August 30, 2017 editor news
பயிறு வகைப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்(Steps to improve production of pulses): தொழில்நுட்பம்

பயிறு வகைப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்(Steps to improve production of pulses):

1.உயர் விளைச்சல் தரும் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். 2.அக மற்றும் புறத்தூய்மை கொண்ட சான்றிதழ் பெற்ற விதைகளை நடவு செய்ய வேண்டும். 3.சரியான பட்டம், பட்டத்திற்கேற்ற இரகம் அல்லது வீரிய ஒட்டு இரகம், சரியான நடவு முறை மற்றும் பயிர் எண்ணிக்கை ஆகியவற்றை பராமரித்து விளைச்சலை அதிகரிக்கலாம். 4.பயறு வகைப்பயிர்களை ஊடுபயிராகவோ, மானாவாரியாகவோ சாகுபடி செய்யாமல் இறவையில் தனிப்பயிராக பயிரிட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம். 5.மானாவாரியில் சாகுபடி […]

August 30, 2017 editor news
விவசாய  நூல் – முதல் அதிகாரம் தொடர்

விவசாய நூல் – முதல் அதிகாரம்

முகவுரை. வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும் ஒதுவா ரெல்லாரு முழுவார் தந் தலைக்கடைக்கே கோதைவேன் மன்னவர்தங் குடைவளமுங் கொழுவளமே ஆதலால் இவர்பெருமை யார்உரைக்க வல்லாரே. (கம்பர்)     கிருஷி(விவசாயம்) என்கிற பதத்திற்குப் பூமியைப் பண்படுத்திப் பயிரிடுதலென்பதே சரியான பொருள். ஆயினும், சாதாரணமாய் அப்பதம் பிராணி சம்பந்தமாயும், தாவர சம்பந்தமாயும், நிலத்திலிருந்து நேராகவோ வேறு எவ்விதமாகவோ நாம் அடையக்கூடிய பொருள்களை உண்டாக்குவதற்கு அவசியமான சாதனங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதாகவே வழங்கப்படுகிறது. நிலத்திலே வளரும் பயிர் வகைகளும் […]

August 30, 2017 editor news
தேக்கு:மரவேலைப்பாட்டுக்கான தாவரம் மரங்கள்

தேக்கு:மரவேலைப்பாட்டுக்கான தாவரம்

இதன் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். இது வெர்பினேசி குடும்பத்தைச் சார்ந்தது. இது மரமாக நெடிதுயர்ந்து வளரும் இலையுதிர் தாவரமாகும். செல் பூச்சிகளின் தாக்குதலை எதிர்த்து நிற்கக்கூடியது. அதாவது செல் பூச்சியினால் இதன் மரக்கட்டை அரிக்கப்படுவதில்லை. சாற்றுக்கட்டை வெண்மையானது, மையக்கட்டை அல்லது வைரக்கட்டை பசுமையானது; மணமுடையது. இத்தாவரத்தின் கட்டை நீண்ட நாட்களுக்கு மணத்துடன் உள்ளது. இது உறுதியானது; நீண்ட காலம் உழைக்கக்கூடியது; மெருகேற்கும் தன்மைபெற்று. இந்தியாவில் தேக்குமரம் நாற்காலி, மேசை, கட்டில் போன்ற பொருட்கள், கட்டிடப் பொருட்கள், […]

August 28, 2017 editor news