32°C

editor news

விவசாயிகளின் வாழ்க்கையை நிமிர்த்தும் நேந்திரம்! மரங்கள்

விவசாயிகளின் வாழ்க்கையை நிமிர்த்தும் நேந்திரம்!

ஆயிரம் வாழை 80 ஆயிரம் லாபம்! கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறைச் சேர்ந்த விவசாயி பொன்னப்பன் நேந்திரன் வாழை விவசாயத்தில் அசத்தி வருகிறார். அவ்வை ஏலாக் கரையில் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வரிடம் பேசினோம். “ஒணம் பண்டிகையின்போது மலையாளிகளுக்கு ஏத்தங்காய் சிப்ஸீம், உப்பேரி (சர்க்கரை வரட்டி)யும் இல்லைன்னா வெள்ளமே இறங்காது. உப்பேரின்னா வேறொண்ணும் இல்லை. நேந்திரங்காய் தோல் எடுத்து கொஞ்சம் கெட்டியான சிப்ஸாக கட் பண்ணி சர்க்கரை பாகில் முக்கி எடுக்கிறதுக்குப் பேரு தான் சர்க்கரை வரட்டி. […]

September 6, 2017 editor news
விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்! தொடர்

விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்!

பண்ணைநிலமும் சாகுபடிக்குரிய முயற்சியும். (1)அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கைவிடாதே. (2)கச்ச நிலமானாலும் கை சேர்க்கை. (3)புன்செயிற் புதிது நன்செயிற் பழையது. (4)அடைப்பில்லாக் காடும் விடுப்பில்லா ஏரும்.      ஒரு குடியானவன் அநுபவித்துவரும் பூமியின் விஸ்தீரணம் பண்ணை நிலமென்று சொல்லப்படும். அவனுக்குச் சொந்தமான நிலம் முழுவதும் ஒரே அடைப்பில் இருப்பது மிக அநுகூலம். எவ்வளவுக்கெவ்வளவு அவன் வீடு தன் நிலத்துக்கருகில் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனுக்கு நலந்தான். இந்நாட்டில் வசிக்கும் குடிகள் கிராமாந்தரங்களில் ஒருமிக்கக் கும்பலாகக் குடியிருப்பதைவிட, […]

September 6, 2017 editor news
உழவும் தொழிலும்  மரவள்ளிக் கிழங்கும்!!! தொழில்நுட்பம்

உழவும் தொழிலும் மரவள்ளிக் கிழங்கும்!!!

  சிப்ஸாக விற்றால் லாபம் 2 மடங்கு! விவசாயம் சிரமத்தில் நடக்க, விளை பொருட்களை வைத்து நடக்கும் வியாபாரங்களோ உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது… அதற்குக் காரணம் விவசாயி மூலப்பொருளை உற்பத்தி செய்பவராகவும் வியாபாரி விற்பனைக்கான பொருளை அதிலிருந்து தயாரிப்பவராகவும் இருப்பதுதான். விவசாயிகளும் தங்கள் விளைபொருளை நுகர்பொருளாக்கி விற்கும் திறனை வளர்த்துக் கொண்டால் எல்லா காலத்திலும் ஒரு நிலையான வருமானத்தைப் பெறலாம்… பணப் பயிர்களை வளர்க்கும் சிறு, குறு விவசாயிகள் சாகுபடி காலங்கள் தவிர்த்து சாதாரண நேரங்களிலும் ஒரு […]

September 5, 2017 editor news
உணவுப் பதப்படுத்துதல்! தொழில்நுட்பம்

உணவுப் பதப்படுத்துதல்!

     இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் வேலைகளைக்கூட உதறிவிட்டு இயற்கை விவசாயம், பண்ணைகள், உணவுப் பதனிடல் என்று விவசாயம் சார்ந்த வேலைகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதன் தாக்கமோ என்னவோ விவசாயக் குடும்பங்களில் உழவையே தொழிலாகக் கொள்ள புதிய படிப்புகள் என்ன? என்கிற தேடலும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.      அந்த வகையில் பெரும்பாலான வர்களின் கவனத்தை ஈர்க்கும் படிப்பு உணவுப் பதப்படுத்துதல். ஒரு காலத்தில் கிராமங்களில், சிறு நகரங்களில் ரைஸ் மில் வைத்திருப்பது ஒரு பெரிய கெளரவம். […]

September 5, 2017 editor news
  வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா! இயற்கை உரம்

  வறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

“ஆத்துத் தண்ணி கிடைக்கல; மழையும் கிடைக்கல. அதனால நெல் விவசாயமே கேள்விக்குறியாகிடுச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் குறைஞ்சளவு தண்ணியை வெச்சே நெல் சாகுபடி பண்ணி கணிசமான மகசூல் எடுத்திருக்கேன். அதுக்குக் காரணம், இயற்கை முறை விவசாயத்துல பாரம்பர்ய நெல் ரகத்தைப் பயிர் செஞ்சதுதான்” என்று இயற்கை விவசாயத்துக்கும் பாரம்பர்ய நெல் ரகத்துக்கும் கட்டியம் கூறுகிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன். திருநெல்வேலி  மாவட்டம் பணகுடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பதிவிரிசூரியன் கிராமத்தில் உள்ளது முருகனின் நெல் வயல், […]

September 5, 2017 editor news
இந்திய அரசின் ரப்பர் வாரியம் தொழில்நுட்பம்

இந்திய அரசின் ரப்பர் வாரியம்

     இந்தியாவில் ரப்பர்வாரியம் 1947-ல் தோற்றுவிக்கப்பட்டது. ரப்பர் தொழிலை மேம்படுத்த ரப்பர் பற்றி ஆராய்ச்சி, பயிற்சி, பயிரிடுவோர்க்கு ஆலோசனை வழங்கிட, மார்கெட்டிங் செய்ய , தொழிலாளர்களுக்கு உதவிட இது தொடங்கப்பட்டது.      தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருடத்திற்கு 24,020 டன் ரப்பர் கிடைக்கிறது. ஆனால் அருகில் உள்ள கேரளாவில் இந்திய உற்பத்தியில் 92% கிடைக்கிறது. எனவே தமிழக ரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கேரளாவில் இருந்து ரப்பரை வாங்குகின்றனர். 6 […]

September 5, 2017 editor news
கால்நடைகள் கால்நடை

கால்நடைகள்

                                       கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் நோக்கம்: கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பல்வேறு முறைகளை அறிதல். தடுப்பூசி போடும் முறைகள்: கால்நடைகளைத் தாக்கும் அநேக நச்சுயிரி நோய்கள் வந்த பின்பு கட்டுப்படுத்துவது எளிதல்ல. எனவே நோய் வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட வருமுன் காத்தலே சிறந்தது. இதன் அடிப்படையில் பல்வேறு தடுப்பூசி நோய்கள் […]

September 4, 2017 editor news
கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு! கால்நடை

கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு!

  வேளாண் தொழிலில் ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. லாபம் தரும் தொழிலாகவும் இருக்கிறது. வெள்ளாடு இனம் தமிழக மக்களின் விருப்ப ஆடாக இருந்தாலும் செம்மறி ஆடுகள் தவிர்க்க முடியாத இனமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக லாபம் தரும் இனமாக இருப்பதுதான். தமிழ்நாட்டில் சென்னை சிவப்பு ஆடு. திருச்சி கருப்பு. மேச்சேரி. கோவை குறும்பை. நீலகிரி. ராமநாதபுரம் வெள்ளை. வெம்பூர். கீழக்கரிசல் ஆகிய எட்டு வகையான செம்மறி ஆடு இனங்கள் உள்ளன. தற்போது […]

September 4, 2017 editor news
அலங்கார மீன் வளர்ப்பு தொழில்நுட்பம்

அலங்கார மீன் வளர்ப்பு

நோக்கம்: வணிக நோக்கிலான வேளாண்மையின் முக்கிய அங்கமான அலங்கார மீன் வளர்ப்பு பற்றி அறிதல் அலங்கார மீன் வளர்ப்பு: பல்வேறு வண்ணங்களைக் கொண்ட சிறிய இரக மீன்களை தொட்டிகள் அல்லது கண்ணாடிக் கலன்களில் வளர்ப்பதே அலங்கார மீன் வளர்ப்பாகும். இது வீடு, அலுவலகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த இடங்களில் அழகு மற்றும் மன அமைதிக்காக வளர்க்கப்படுகிறது. ஏற்ற மீன் இனங்கள்: பார்ப்ஸ், ரேஸ் போராஸ், பொன்மீன், டெட்ராஸ், டேனியோஸ், பேட்டாஸ், ஏஞ்சல் மீன், கோரமிஸ், கப்பி, கருப்பு […]

September 4, 2017 editor news
நாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்! கால்நடை

நாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்!

நாட்டுக்கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான கைவைத்தியம் ஆகியவை குறித்து முன்னோடிப் பண்ணையாளர் ‘காட்டுப்புத்தூர்’ பாலு சில விஷயங்களைக் பகிர்ந்துகொண்டார். “நாட்டுக்கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான். வெள்ளை , பச்சை அல்லது வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் கோழிகள் மலத்தைக் கழிந்தால் அது வெள்ளைக்கழிசலுக்கான அறிகுறி. காபி நிறத்தில் கழிந்தால் அது ரத்தக்கழிசலுக்கான அறிகுறி. இந்த […]

September 4, 2017 editor news