32°C

editor news

தென்னையை தாக்கும் குருத்தழுகல், அடித்தண்டழுகல் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும் கோவை தென்னை கண்காட்சி 2018

தென்னையை தாக்கும் குருத்தழுகல், அடித்தண்டழுகல் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும்

இறைவனால் படைக்கப்பட்ட அதிசயங்களில் ஒன்று தென்னை மரம். ஏனெனில் தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயனளிக்ககூடியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை மரத்தை நாம் கற்பகதரு அல்லது கற்பகவிருட்சம் என்று அழைப்பதில் மிகை ஒன்றும் இல்லை. தென்னை சாகுபடியானது தற்போதுள்ள சூழ்நிலையில் இடுபொருட்களின் செலவு அதிகரிப்பு, கூலி உயர்வு, வேலையாட்களின் பற்றாக்குறை, பூச்சி தாக்குதல் போன்ற பல காரணங்களால் நலிவடைந்து இருந்தாலும், தென்னையின் மகசூலை   பாதிக்ககூடிய காரணிகளில் குருத்தழுகல், அடித்தண்டழுகல் போன்ற நோய்கள் முதன்மையானவை ஆகும். […]

December 1, 2020 editor news
சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள் மரங்கள்

சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள்

சப்போட்டா பொதுவாக வெப்பமண்டல பழப் பயிராகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது, 10-38 டிகிரி செல்சியஸ் வரை உகந்த வெப்பநிலை மற்றும் 70 % ஈரப்பதம் தேவைப்படுகிறது. மண் பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது. வண்டல் மற்றும் செம்மண் வகைகள் உகந்த மண் ஆகும். ரகங்கள் பாலா, கிரிக்கெட் பால், கோ1, கோ2 , PKM 1 போன்ற ரகங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக பயிர் செய்யும் ரகங்கள் […]

December 1, 2020 editor news
குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர் தொழில்நுட்பம்

குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர்

கடந்த ஐந்த ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் உள்ள தாகூர் மாவட்டத்தின் லிம்கெடா வட்டத்தில் உள்ள கம்டோய் கிராமத்தில் துவங்கிய மலர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மிகப்பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை கிராமப்புற பெண்கள் அடைய பெரிதும் உதவியுள்ளது. முந்தைய நெல் மற்றும் மக்காச்சோள சாகுபடிக்கு மாற்றாக விவசாயிகள் சாகுபடி செய்யும் மலர்கள், தோட்டக்கலை பயிர்களே சுமார் 650 விவசாயிகள் வாழ்க்கையை வெகுவாக முன்னேற செய்துள்ளது. இத்தகைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக இங்கு விவசாயிகள் பிள்ளைகள் அதிகளவு […]

December 1, 2020 editor news
சேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்!!! தொழில்நுட்பம்

சேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்!!!

நெற்பயிர் என்று நினைக்கும்போதே நம் எண்ணத்தில் தோன்றுவது சேற்று நீர் நிறைந்த நிலம்தான். ஆனால் நெற்பயிரை சேற்றுப் படுக்கையில்லாமல் மற்ற பயிர்களைப் போல் சொட்டு நீர் பாசனத்தில் வளர்க்கும் முறையை தென் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானி சங் ஜின் சோ(Sungjin choe) என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதற்கு அவர் வைத்துள்ள பெயர் ஸீட் பிலிம் கல்டிவேஷன்(Seed Film Cultivation – SFC). Seed Film Cultivation (SFC): இந்த முறையில் குறைந்த நீரில் இயற்கை சாணத்தை உரமாகக் கொண்டு […]

December 1, 2020 editor news
உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றிலை வள்ளி கிழங்கிற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் தொழில்நுட்பம்

உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றிலை வள்ளி கிழங்கிற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள்

பெரு வெற்றிலை வள்ளி (டயோஸ்கோரியா அலேட்டா) ஒரு வணிகப்பயிராக சுமார் 27,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, சுமார் 7.5 லட்சம் டன் உற்பத்தியோடு, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 28 டன் மகசூல் பெறப்படுகிறது.  இது இந்தியாவில் ஆந்திரா, ஒடிசா, கேரளா, அசாம், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா போன்ற 13 மாநிலங்களில், பரவலாக பயிரிடப்படுகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் பெரு வெற்றிலை வள்ளி சாகுபடி பெரு வெற்றிலை வள்ளி பல […]

December 1, 2020 editor news
நன்மை செய்யும் பூச்சிகள் தினம் ஒரு தகவல்

நன்மை செய்யும் பூச்சிகள்

மண்புழுக்கள் மட்டும் உழவனின் நண்பர்கள் அல்ல பூச்சிகளும் உழவனின் நண்பர்கள்தான். உலகில் உள்ள உயிரினங்களில் பூச்சிகளே மிகவும் அதிக எண்ணிக்கையில்  உள்ளன. பூச்சிகள் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன. பூச்சிகள் இருந்தால் மட்டும்தான் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கும். மனித இனம் மறைந்தாலும்கூட தன்னை தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவை இந்தப் பூச்சிகள். பூச்சிகளில் இரண்டு வகை உண்டு. அவை நன்மை செய்யும் பூச்சிகள் […]

December 1, 2020 editor news
மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

மஞ்சள் நமது உணவுப் பொருட்களில் நிறம், சுவைக் கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 – 90 செ.மீ உயரம் வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உண்டு. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோய் டாஃப்ரினா மாக்குலன்ஸ்  என்ற ஒரு […]

December 1, 2020 editor news
அங்கக  வேளாண்மையில்  தரச்சான்று (பகுதி-2) தொடர்

அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-2)

ஆவண பராமரிப்பு: அங்கக வேளாண் சான்றளிப்பில் ஆவண பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பண்ணை சாகுபடி மற்றும் பதப்படுத்தும் முறைகள், இடுபொருள், விளைபொருள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து தர வேண்டும். அங்கக விவசாய பண்ணைகளில் கீழ்க்கண்ட ஆவணங்களை, பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். பண்ணை வரைபடம். பண்ணை விளைநிலங்களைக் குறித்த கடந்த மூன்று ஆண்டுகளின் விபரங்கள். பண்ணையில் மேற்கொள்ளப்படும் செய்முறைகள். இடு பொருட்கள் பதிவேடு. விளை பொருட்கள் பதிவேடு. அறுவடைப் பதிவேடு. சேமிப்புப் பதிவேடு. விற்பனைப் […]

November 30, 2020 editor news
புவி வெப்பமடைதலினால் பூச்சிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் பயிர் பாதுகாப்பு

புவி வெப்பமடைதலினால் பூச்சிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம்

முன்னுரை                                     இந்த தலைப்பு புவி வெப்பமயமாவதால் பூச்சிகளின் இயக்கவியலில் ஏற்படும் தாக்கத்தை விளக்குகிறது. புவி வெப்பமடைதலின் விளைவாக காலநிலை மாறுபாடு, வறட்சி, வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு, மழைப்பொழிவு மாற்றங்கள், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டத்தில் உயர்வு, கடல் வெப்பம் அதிகரிப்பு, காற்றின் ஈரப்பதத்தில் மாற்றம், கரியமில வாயுக்களின் அளவில் மாற்றம் ஆகியவை நிகழ்கிறது. இந்த மாற்றம் பூச்சிகளின் இயக்கவியல் மீது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறனைக் குறைக்கிறது. […]

November 28, 2020 editor news
நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-2) தொடர்

நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-2)

கரையும் உரங்களின் பயன்கள்: திட வடிவ கரையும் உரங்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைப்பதற்கும் வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கும் ஏற்றதாகும். சீரான அளவில் இடப்படும் உரங்கள் வீணாகாமல் செடிகளுக்குப் பயன்படுகிறது. உரத்தோடு பூச்சி மருந்து மற்றும் பூஞ்சாண மருந்துகளையும் கலந்து அளிக்க முடியும். உரப்பயன்பாட்டு அளவு அ. சாதாரண உரங்கள் மூலம் 30.50 % 20 % 50 % ஆ. கரையும் திட உரங்கள் மூலம் 95 % 45 % 85 % மண்ணையும் நிலத்தடி […]

November 28, 2020 editor news