32°C

editor news

தேனீ வளர்ப்பு பகுதி – 7 தொடர்

தேனீ வளர்ப்பு பகுதி – 7

 தேனீக்களின் பருவகால மேலாண்மை தேனீ நிர்வாகத்தின் கொள்கைகள் தேனீக்களுக்கு தேன் மற்றும் மகரந்தம் ஆண்டு முழுவதும் கிடைக்காது. இருப்பினும், ஆண்டின் சில பகுதிகளில் உபரி உணவு (surplus food) கிடைக்கிறது, மற்ற காலங்களில் சிறிய மற்றும் வாழ்வாதார உணவு கிடைக்கிறது, அதேசமயம் தேனீக்கள் ஆண்டின் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை காலத்தை சந்திக்க நேரிடும். ஒரு வருடத்தில் வெவ்வேறு பருவங்கள் உள்ளன, அவை மிகவும் மாறுபட்ட வானிலையை கொண்டுள்ளன, சில நேரங்களில் வானிலை ஆனது தேனீக்களுக்கு மிகவும் […]

August 31, 2020 editor news
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

பசுமைப் புரட்சியின் தாக்கத்தை இந்திய வேளாண்மையில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதற்கான ஆதாரங்களாக இருப்பது புள்ளிவிவரங்கள். எனவே சில புள்ளிவிவரத் தரவுகளைப் பார்ப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 81 மில்லியன் டன்களாக இருந்தது. அதுவே பசுமைப் புரட்சிக்கு பின்பு தானிய உற்பத்தி அபரிமிதமாக இருந்தது. அதாவது, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 203 மில்லியன் டன்னும், பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் 212 மில்லியன் டன்களாக இருந்தது. இதில் கோதுமையின் உற்பத்திதான் மிக அதிகம். […]

August 31, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-10) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-10)

சிலிர்க்காத சிரப்புஞ்சி என் தேவைக்கு இந்த உலகில் எல்லாம் உண்டு என் பேராசைக்குத் தான் இந்த உலகம் போதவில்லை என்பார் அண்ணல் காந்தியடிகள். அப்படி நம் பேராசையினால் அதிகம் இருந்தும் போதாமல் போனவை ஏராளம். அதன் வரிசையில் ஒன்றுதான் சிரப்புஞ்சி. 1974 ஆம் ஆண்டு உலகிலேயே அதிகமான மழை பொழிவான 24555 மில்லி மீட்டர் மழை பதிவானது சிரபுஞ்சியில் எப்படி, ஒவ்வொரு முறையும் தன் சாதனைகளை தானே முறியடிப்பாரோ சச்சின். அப்படித்தான் 1861 ம் ஆண்டு பெய்த […]

August 31, 2020 editor news
மல்பெரியில் உயிர் உர மேலாண்மை இயற்கை உரம்

மல்பெரியில் உயிர் உர மேலாண்மை

பட்டு உற்பத்தியில் மல்பெரி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. மல்பெரி செடிகளை பயிரிட்டு அதன் இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக கொடுக்கின்றனர். இந்தியா பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பட்டுப்புழுவின் வளர்ச்சி மற்றும்  பட்டுக்கூடு விளைச்சல், மல்பெரி இலைகளின் தரத்தைச் சார்ந்து இருக்கிறது. உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மல்பெரிக்கு தேவையான தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச் சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் எளிதாக கிடைக்க செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான இலை உற்பத்திக்கும் வழிவகை செய்கின்றது. மல்பெரி […]

August 28, 2020 editor news
மண் மற்றும் சுற்றுசூழலை காக்கும் பேணுகை வேளாண்மை!! தொழில்நுட்பம்

மண் மற்றும் சுற்றுசூழலை காக்கும் பேணுகை வேளாண்மை!!

அனைத்து உயிரினங்களும் மண்ணை சார்ந்தே வாழ்கின்றன. மண்ணின்றி வாழ்வில்லை; வாழ்வின்றி மண்ணில்லை. மண் வளம் காத்திட தேசிய அளவிலான ‘மண் வள அட்டை வழங்கல்’ திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தபோது, ”நலமான மண்ணே பசுமையான பண்ணைக்கு வழிவகுக்கும்,” என்றார். வேளாண்மையில் தாவர வளர்ச்சிக்கு மண் ஒரு மிக முக்கியமான ஊடகமாகவும், உயிரினங்களின் நலத்திற்கு வளமான மண்ணே அடிப்படை ஆதாரமாகவும் அமைகிறது. மண் வளத்தை காப்பதற்கு வகுத்துள்ள உக்திகளில் ஒன்று பேணுகை வேளாண்மை. பேணுகை வேளாண்மையில் மூன்று […]

August 28, 2020 editor news
பருத்திப் பயிரில் களை மேலாண்மை பயிர் பாதுகாப்பு

பருத்திப் பயிரில் களை மேலாண்மை

பருத்தி பயிரானது தமிழகத்தில் முக்கியமாக பெரம்பலூர், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சமார் 1.2 லட்சம் ஹெக்டரில் பயிரடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட உற்பத்தி குறைவாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் மானாவாரியாக பயிரிடுதல் பழைய தொழில்நுட்பத்தையே சார்ந்திருத்தல் சரியான முறையில் பருத்திச் செடியை பராமரிக்க இயலாமை களைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் களைகள்: விவசாயிகள் பருத்தி விதை ஊன்றியவுடன், களையும் பருத்தியும் சேர்ந்தே முளைக்க ஆரம்பிக்கிறது. களையானது பருத்தியுடன் […]

August 28, 2020 editor news
கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை கால்நடை

கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை

பால் காய்ச்சல் நோயானது விவசாயியின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகும். கறவை மாடுகளின் நலனை காக்கவும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை தடுக்கவும் பால் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். ஏன் பால் காய்ச்சல் நோய் கறவை மாடுகளுக்கு வருகிறது? கன்று போட்டவுடன் மாடுகளில் இருந்து பெறப்படும் சீம்பாலில் அதிக அளவு கால்சியம் சத்து வெளியேறுகிறது ( ஓரு லிட்டர் சீம்பாலில் – 3 கிராம் கால்சியம் ). கறவை மாடுகளில் தினமும் கறக்கும் பால் […]

August 28, 2020 editor news
“தென்மேற்கு பருவமழையும் விவசாயமும்” தினம் ஒரு தகவல்

“தென்மேற்கு பருவமழையும் விவசாயமும்”

“தென்மேற்கு பருவமழை“ என்பது தெற்கே அல்லது தெற்கு திசையிலிருந்து அதிவேகமாக வீசப்படும் காற்றினால், கோடைகாலத்தின் முடிவில் தெற்காசிய பகுதியான இந்தியாவில் அதிக மழையைப் பொழிவதகும். இந்தியப் பெருங்கடலின் கரையோரங்களில் குறிப்பாக அரேபியக் கடலில் காற்றின் திசையை பருவ காலமாக மாற்றி மழைப் பொழிவதை தென்மேற்கு பருவமழை என்று இந்திய வானிலை ஆய்வு துறை (Indian Meteorological Department) குறிப்பிடுகிறது. காற்று வீசும் திசையை பொருத்தும், இந்திய பெருங்கடலில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவும், பருவமழை யானது […]

August 28, 2020 editor news
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-6) தொடர்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-6)

மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்: தேவையான பொருட்கள்:  மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம் தண்ணீர் – 1 குவளை / 200 மில்லி இந்துப்பு – 1 சிட்டிகை மாவு தயாரிக்கும் முறை: மாப்பிள்ளை சம்பா அரிசி 1கிலோ வாங்கி, கல் மற்றும் தூசு நீக்கி, நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இல்லையெனில் வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும். பின்னர் மாவு மில்லில் கொடுத்து […]

August 28, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5)

வெள்ளம் கரை கடந்தால்! வெள்ளம் அதில் ஒரு லகரத்தை மாற்றி விட்டால் அது இனிப்பை குறிக்கும். இந்த வெள்ளமோ பலரது வாழ்வின் இனிப்பை எடுத்து இருக்கிறது. உலகில் இயற்கை (சிலநேரம் செயற்கையாகவும்) சீற்றங்களில் அதிக உயிர்களைப் பறித்துக் கொள்வது வெள்ளம் தான். உலகின் 2% தான் அதிகம் பாதிக்கும் பகுதிகள். ஆனால் மனிதன் ஆக்கிரமிப்பில் அதையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா ஆண்டுதோறும் குறைந்தது 8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்காவது வெள்ளம் […]

August 28, 2020 editor news