32°C

editor news

ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு

கோரை உலகின் மோசமான களைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரை இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது அனைத்து வகையான மண்ணிலும் வளர்கிறது. பயிரிடப்பட்ட வயல்கள் (குறைந்தது 50 வெவ்வேறு பயிர்கள்), சாலையோரங்கள், மேய்ச்சல் நிலங்கள், ஆற்றங்கரைகள், நீர்ப்பாசனத் தடங்கள் மற்றும் இயற்கை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழ்விடங்களில் கோரையைக் காணலாம். இவற்றில் பயிரிடப்பட்ட வயல்களைத் தவிர மற்ற வாழிடங்களில் பல்லினத்தன்மை மற்றும் மற்ற தாவர போட்டிகளால் கோரைக் குறைந்து காணப்படும். […]

September 17, 2020 editor news
பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

பருத்தி ஒரு பணப் பயிராகும். பருத்தி இழைகள் மட்டுமல்லாமல் அதன் முழுச் செடியும்  பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் மிக முக்கியமானது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இந்நோயினால் பருத்தி மகசூல் குறைவதோடு, பருத்தி இழைகளின் தரமும், பலமும் குறைகிறது. தீவிர நிலையில் இந்நோய் 100 சதவீத உற்பத்தியையும் பாதிக்கக்கூடியது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் […]

September 16, 2020 editor news
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6

உலகத்தில் நாம் செய்யும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதற்கு நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் கட்டாயம் இருப்பதுதான் உலக நியதி. அப்படித்தான் பசுமைப்புரட்சிக்கும். பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதற்கு வந்த வரவேற்புகளுக்கு ஈடாக எதிர்ப்புகளும் வந்தன. மனிதனுக்கும் வேளாண்மைக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளோ இரண்டாயிரம் ஆண்டுகளோ கொண்டது கிடையாது. பத்தாயிரம் ஆண்டுகளாக, அதாவது காடு மேடுகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன் விவசாயத்தைக் கற்றுக்கொண்ட பின்னர் ஒரே இடத்தில் குழுக்களாகத் தங்கி உறவாட […]

September 16, 2020 editor news
பசுமைக்  குடில் தொழில்நுட்பம் தொழில்நுட்பம்

பசுமைக் குடில் தொழில்நுட்பம்

நமது நாட்டில் 95% பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில பயிர்களை எல்லாவித தட்பவெட்ப  சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. பருவமழையும் சில சமயங்களில் பொய்த்துப் போவதால் விவசாயிகள் பெருமளவில் நஷ்டம் அடைகின்றனர். இதைத் தடுக்கவே ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அதுவே பசுமைக் குடில் தொழில்நுட்பம் ஆகும். வளர்ந்த நாடுகளான இஸ்ரேல், ஸ்பெயின், நெதர்லாந்து, சவூதி அரேபியா முதலிய நாடுகளில் இத்தொழிலில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. பசுமைக் குடில் தொழில்நுட்பம் என்பது பயிர்களுக்கு சாதகமான சுற்றுபுறச் சூழலை […]

September 16, 2020 editor news
நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி பயிர் வகைகள்

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி (எஸ்.எஸ்.ஐ) என்பது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய முறை,” குறைவான முதலீட்டில் அதிக லாபம் ” என்பது இதன் முக்கிய கருதுகோள். குறைந்த அளவிலான விதைகள்,   நீர் மற்றும் உரங்களை உகந்த முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற இந்த முறை வழிவகை செய்கிறது. எஸ்.எஸ்.ஐ வழக்கமான விதை, நீர் மற்றும் அடர் கரும்பு சாகுபடிக்கு மாற்றாகும். எஸ் எஸ் ஐ இன் முக்கிய கொள்கைகள் ஒரு பரு சீவலை கொண்டு […]

September 16, 2020 editor news
கோகோ செடியில்  தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சியின் தாக்குதலும் அவற்றின் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

கோகோ செடியில் தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சியின் தாக்குதலும் அவற்றின் மேலாண்மை முறைகளும்

கோகோ ஒரு வாசனை மிகுந்த பணப்பயிராகும். இது வணிகரீதியில் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது. கோகோ தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலப்பகுதியைத் தாயகமாகக் கொண்டது. கோகோ பயிரானது 1523 ஆம் ஆண்டிலிருந்தே உலகின் பல நாடுகளில் பயிரிடப்பட்டு வந்தாலும் நமது இந்திய நாட்டில் 1970 ஆம் ஆண்டு முதல் பண்ணைப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  உலக அளவில் கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீதமாக உள்ளது. கோகோ சாக்லேட் சுவை மிகுந்த பானங்கள் […]

September 16, 2020 editor news
தென்னைத் தோட்டங்களில் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான உழவர் பங்கேற்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம் விவசாய நிகழ்ச்சிகள்

தென்னைத் தோட்டங்களில் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான உழவர் பங்கேற்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம்

முன்னுரை தென்னை இந்தியாவில் உள்ள வணிகப்பயிரில் ஒரு முக்கியமான தோட்டப் பயிராகும். இது ஆண்டு முழுவதும் விவசாய குடும்பத்திற்கு சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வருமானம் கிடைப்பதில்லை. மேலும் அதிக அளவு விலை ஏற்ற இறக்கம் தென்னை விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. தென்னை மரத்தின் தனித்துவமான தாவரக் கட்டமைப்பு  மரங்களுக்கிடையில் பயன்படுத்தப்படாத பெரும்பகுதியை (75%) ஊடுபயிர் சாகுபடிக்கு போதுமான வாய்ப்பை வழங்குகிறது. வெப்பமண்டல கிழங்கு பயிர்களான மரவள்ளி, […]

September 16, 2020 editor news
அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

அவரைக்காய் உண்ணச் சுவையாகவும், மிகுந்தச்  சத்துள்ளதாகவும் இருக்கிறது. இதில் புரதச் சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். அவரையில் பல வகைகள் உண்டு. இச்செடி இந்தியாவில் இருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாகக் கருத்தப்படுகிறது. அவரையில் பல வித நோய்கள் தோன்றினாலும் துரு நோயால் 3 – 36 சதம் வரையில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அவரையை தாக்கும் துரு நோயை பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் […]

September 16, 2020 editor news
கரும்பு சாகுபடியில் நிலத்தடி சொட்டு நீர்  பாசனம் மூலம் மணிச்சத்து உர அளவு நிர்ணயம் பற்றிய ஆய்வு தொழில்நுட்பம்

கரும்பு சாகுபடியில் நிலத்தடி சொட்டு நீர் பாசனம் மூலம் மணிச்சத்து உர அளவு நிர்ணயம் பற்றிய ஆய்வு

பழங்காலத்திலிருந்தே கரும்பு பயிரிடப்பட்டு வருவதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கரும்பு மகசூலை அதிகரிப்பதில் ஊட்டச் சத்துக்கள் அதிக பங்கு வகிக்கின்றன. கரும்பு வளர்ச்சி பருவத்தில் அதிக சத்துக்களை உட்கொள்கிறது. பேரூட்டச்சத்துக்களில் ஒன்றான மணிச்சத்து கரும்பிற்கு மிகவும் முக்கியமானது. மணிச்சத்தினை தாவரம் எடுத்து கொள்வது என்பது, மணிச்சத்து உரம் கரையும் மற்றும் தாவரம் உறிஞ்சக்கூடிய வடிவத்தில் இருப்பதை பொருத்தது ஆகும். மணிச்சத்தின் தேவை, தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை விட குறைவானது.  மணிச்சத்து புரதம் உருவாவதற்கு, மகசூல் அதிகரிப்பதற்கு, […]

September 16, 2020 editor news
வட மாநிலங்களில் கிராமப்புற பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள் கால்நடை

வட மாநிலங்களில் கிராமப்புற பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநில கிராமப்புற தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் வாழ்வில் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள் பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் கோழி வளர்ப்பவர்கள் நிறுவனத்தின் சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிதி உதவிகளை வழங்கி தங்களின் வீடுகளுக்கு பின்புறம் 500 சதுர அடியில் கறிக் கோழிகள் வளர்க்கத் தேவைப்படும் மூலதனத்தை வழங்கி உதவி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் 500 […]

September 16, 2020 editor news