32°C

Editor

இ.எம். பயன்பாடுகள்..! இயற்கை உரம்

இ.எம். பயன்பாடுகள்..!

சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் இடங்கள், கழிவறைகள், கழிவறைத்தொட்டிகள், சமயலறை என அனைத்து இடங்களிலும் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம். வேளாண்மை, மனிதர்கள், கால்நடைகள், திடக்கழிவு மேலாண்மை, கழிநீர்ச் சுத்திகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, சுகாதார மேலாண்மை, சுற்றுச்சூழல் சமன்செய்தல், மாசடைந்த மண், நீரைச் சீர்படுத்துதல் ஆகிய பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு. இ.எம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அருமையை உணர்ந்துகொண்ட பல நாடுகள், மாசடைந்த நீர்நிலைகளை மீட்டெடுக்க இ.எம் திரவத்தைப் பயன்படுத்துகின்றன.. நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

February 28, 2017 Editor
”குறையும் மேய்ச்சல் நிலம்” இறக்குமதி செய்யும் ஆபத்தில் இந்தியா..! செய்திகள்

”குறையும் மேய்ச்சல் நிலம்” இறக்குமதி செய்யும் ஆபத்தில் இந்தியா..!

இந்தியா முழுவதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்து வருவதால், நாட்டிலுள்ள 299 மில்லியன் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் பால் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மறுபுறம் விளைச்சில் நிலம் குறைந்துவருகிறது. இதே நிலை நீடித்தால்,இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்தியா பாலை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் ஏற்படலாம். இது பால் தேவைக்கு மட்டுமல்ல , எதிர்காலத்தில் எல்லா தேவைகளுக்கும் இறக்குமதியை நாடியே இருக்கவேண்டிய கட்டாயமும் இருக்கலாம். நம் நாட்டில் கடந்த சில […]

February 25, 2017 Editor
விவசாயம் குறுஞ்செயலி பயன்படுத்துவோரின் கனிவான கவனத்திற்கு மானியங்கள்

விவசாயம் குறுஞ்செயலி பயன்படுத்துவோரின் கனிவான கவனத்திற்கு

அனைவருக்கும் வணக்கம் விவசாயம் குறுஞ்செயலி தற்போது மூன்று லட்சம் பயனாளர்களை கொண்டு இயங்கிவருகிறது. இதனை தற்போது அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். விவசாயம் குறுஞ்செயலியில் இன்னமும் என்னென்ன விதமான வசதிகளை சேர்க்கலாம் என்பதையும் அனைவரும் தெரியப்படுத்தலாம். தங்கள் ஆலோசனைகளை அனுப்பவேண்டிய முகவரி editor.vivasayam@gmail.com நன்றி!

February 24, 2017 Editor
ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..! கால்நடை

ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..!

கடுமையான வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்குக் கொடுப்பதற்காகப் பதப்படுத்தி வைக்கப்படும் தீவனம்தான் ஊறுகாய்ப் புல், தீவனச்சோளம், கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கினியா புல், கொழுக்கட்டைப் புல், தீவனத்தட்டை, குதிரை மசால், வேலிமசால், முயல்மசால் ஆகியவற்றில் கிடைப்பவற்றை ஊறுகாய்ப் புல்லாகப் பதப்படுத்தி வைக்கலாம். 6X6 அடி தூரம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். குழி மேடான இடத்தில் இருக்க வேண்டும். குழிக்குள் கால் அடி உயரத்துக்கு மணலைப் பரப்பி, அதன் […]

February 23, 2017 Editor
குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..! செய்திகள்

குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..!

சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய அரசின் சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆராய்ச்சி தோட்டம் உள்ளது. அங்கு ஐந்நூறு வகையான பாரம்பர்ய மருத்துவ மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூலிகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இம்மையத்தின் மூலமாக, மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வீட்டுத் தொட்டிகளில் வளர்க்கக்கூடிய துளசி, கற்பூரவல்லி, நிலவேம்பு, தூதுவளை, சித்தரத்தை, திப்பிலி, திருநீற்றுப்பச்சிலை.. போன்ற முப்பது வகையான மூலிகை நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு, […]

February 22, 2017 Editor
மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல் கால்நடை

மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல்

உலர் தீவனத்தில் முதன்மையானதாக இருப்பது வைக்கோல். வைக்கோலை மதிப்புக்கூட்டிக் கொடுத்தால் முழுமையான பலன் கிடைக்கும். 10 கிலோ கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் பை முழுவதும் வைக்கோலால் நிரப்ப வேண்டும். ஒரு கிலோ கல் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோல்மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும். அடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளித்துப் பிளாஸ்டிக் பையை இறுக்கமாகக் கட்டி, நிழலில் 12 நாட்கள் வைத்து, பிறகு மாடுகளுக்குக் கொடுக்கலாம். இப்படி […]

February 22, 2017 Editor
மாற்றுத் தீவனம் அசோலா..! கால்நடை

மாற்றுத் தீவனம் அசோலா..!

நீர் பாசி வகையைச் சேர்ந்த அசோலா கால்நடைகளுக்கு முக்கியமான மாற்றுத் தீவனமாகும். 200-க்கும் மேற்பட்ட பாசி வகைகள் இருக்கின்றன. இதில் உணவாக பயன்படும் பாசிகளில் அசோலாவும் ஒன்று. 30 சதவிகிதம் புரதச்சத்தும், 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளன. சிறிய பரப்பிலேயே குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி அசோலா வளர்க்கலாம். 9 அடி நீளம், 3 அடி அகலத்தில், பாலி எத்திலீன் ஷீட் கொண்டு தொட்டி போல அமைக்க வேண்டும். இதில், 10 கிலோ மண், 5 கிலோ […]

February 21, 2017 Editor
வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..! கால்நடை

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

”சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும். கோ-1, கோ-2, கோ-3, கோ-4, […]

February 20, 2017 Editor
சுழற்சி முறையில் கீரை சாகுபடி..! கீரை வகைகள்

சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். பிறகு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு கிலோ வீதம் கனஜீவாமிர்தம் இட வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் […]

February 20, 2017 Editor
செம்பருத்திச்செடி பராமரிப்பு முறைகள்..! விவசாய கட்டுரைகள்

செம்பருத்திச்செடி பராமரிப்பு முறைகள்..!

அளவான ஊட்டம் கொடுத்தால் போதும் நடவு செய்த இரண்டாம் மாதத்தில் இருந்து, மாதம் ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து பாசன நீரில் கலந்து கொடுக்க வேண்டும். செம்பருத்திக்கு அதிக ஊட்டம் கொடுத்தால், இலைகள் சிவப்பு நிறத்துக்கு மாறுவதோடு பூக்கள் பூக்காது. அதனால் அளவாகக் கொடுத்தால் போதுமானது. பருவமழைக்கு முன் கவாத்து கன்று நடவு செய்து இரண்டு […]

February 18, 2017 Editor