32°C

Editor

திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி கால்நடை

திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

திருவள்ளூர் அடுத்த, கோவூரில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சினை மாடுகளுக்கு சில சமயம் கருச்சிதைவு எற்படும். நோயால் பாதித்த கறவை மாடுகளில் பால் குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். […]

March 2, 2018 Editor
நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க ‘சோலார்’ மின் விளக்கு அறிமுகம் இயற்கை விவசாயம்

நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க ‘சோலார்’ மின் விளக்கு அறிமுகம்

நெற்பயிரை பயிரை அதிகம் தாக்கும் பூச்சி வகைகளில் அந்திபூச்சியும் ஒன்று,. இந்த அந்திப்பூச்சி நெற்பயிரின் இலைகளை கடித்து சேதப்படுத்துவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறை புதிய கருவி ஒன்று அறிமுகம் செய்துள்ளது. அந்திபூச்சிகளை ஒழிப்பதற்கு, வேளாண் துறையின் மூலம், மானிய விலையில், சூர்ய மின்விளக்கு பொறி ஒன்று விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த விளக்கின் மொத்த விலை, 4,480 ரூபாய். இதில், விவசாயிகளுக்கு அரசு மானியமாக, 2,000 ரூபாய் வழங்குகிறது. இது […]

March 1, 2018 Editor
பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்திகள்

பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம்

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு சட்டம் இயற்றியும், அகற்றாததாலும், ஏரியின் மதகுகள் பராமரிக்கப்படாததாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் தற்போது பெய்த மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறை பராமரிப்பில் 787 ஏரிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 649 ஏரிகள் உள்ளன. தவிர, 2,000க்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டைகள் உள்ளன. பெரும்பாலான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளன. […]

February 28, 2018 Editor
கிருஷ்ணகிரி மாவட்டதில் யானைகளால் வீணாகும் தக்காளியும், மாமரங்களும் விவசாய கட்டுரைகள்

கிருஷ்ணகிரி மாவட்டதில் யானைகளால் வீணாகும் தக்காளியும், மாமரங்களும்

தேன்கனிக்கோட்டை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானைகள், மாமரங்களை முறித்து போட்டு துவம்சம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், பல பிரிவுகாளக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி மரகட்டா, ஆலள்ளி, வட்டவடிவுபாறை, ஊடேதுர்கம், சானமாவு உள்ளிட்ட வனப்பகுதியில் முகாமிட்டு கடந்த 4 மாதங்களாக அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், ஆலள்ளி காட்டில் முகாமிட்டுள்ள யானை கூட்டம், நேற்று முன்தினம் இரவு இருதுக்கோட்டை அருகே […]

February 27, 2018 Editor
விலை வீழ்ச்சியால் தோட்டத்திலேயே வீணாகும் கொத்தமல்லி விவசாய கட்டுரைகள்

விலை வீழ்ச்சியால் தோட்டத்திலேயே வீணாகும் கொத்தமல்லி

விளைச்சல் அதிகரிப்பால், ஓசூரில் கொத்தமல்லி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், பறிக்காமல் விடுவதால் தோட்டத்திலேயே வீணாகி வருகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் அதிகளவில் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கரில் பயிரிட ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. இது 40 நாட்களில் விளைச்சல் கொடுக்கக்கூடிய பயிர் என்பதால், விவசாயிகள் அதிகளவில் கொத்தமல்லி பயிரிடுகின்றனர். இந்த பகுதியிலிருந்து கோவை, திருச்சி, சென்னை, சேலம்  உள்ளிட்ட நகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தினமும் கொத்தமல்லி அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, […]

February 27, 2018 Editor
புலியூரை மையமாக கொண்டு தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்க வேண்டுகோள் விவசாய கட்டுரைகள்

புலியூரை மையமாக கொண்டு தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்க வேண்டுகோள்

கிருஷ்ணகிரி கலெக்டரிடம், கோட்டப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு,. கிருஷ்ணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், மருதேரி, செல்லம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, புங்கம்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் தேங்காய்க்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட் மட்டுமின்றி […]

February 27, 2018 Editor
திண்டுக்கல் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு செய்திகள்

திண்டுக்கல் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு

திண்டுக்கல்லில் வாழை, வெங்காயம், மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை (பிப்.28) கடைசி நாள்’ என, தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ஸ்ரீராம் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: மாறி வரும் சூழ்நிலை, இயற்கை இடர்பாடுகள், வெள்ளம், வறட்சியால் வேளாண், தோட்டக்கலை பயிர்களில் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க பயிர் காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது. விவசாயிகள் காப்பீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்தாண்டு வாழை, வெங்காயம், மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய […]

February 27, 2018 Editor
200 ஏக்கரில் இலவச தோட்டம் அமைக்க ஏற்பாடு:விவசாயிகளுக்கு வாய்ப்பு விவசாய கட்டுரைகள்

200 ஏக்கரில் இலவச தோட்டம் அமைக்க ஏற்பாடு:விவசாயிகளுக்கு வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 200 எக்டேரில் தோட்டம் அமைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறை மூலம், ஒன்றியங்களில் இடம் வைத்திருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவசமாக தோட்டம் அமைத்து கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இலவச தோட்டம் திண்டுக்கல் ஒன்றியத்தில் 40 […]

February 27, 2018 Editor
கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை விவசாய கட்டுரைகள்

கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சுற்றுப்பற பகுதிகளில் கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவருவதால், நெற்பயிர் கருகி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கிணற்று நீரை நம்பி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது கிணற்றின் நீர் மட்டம் குறைந்து, போதிய அளவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், நெற்பயிர் கருகும் சூழ்நிலையில் உள்ளது. செலவு செய்த பணமும், உழைப்பும் வீணாகிறது என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்

February 27, 2018 Editor
மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு செய்திகள்

மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு

ப.வேலுார் தாலுகாவில், மரவள்ளிக்கிழங்கின் விலை, டன் ஒன்றுக்கு ரூ. 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகாவில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. அவை, கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்கின் விலை, மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரம், […]

February 26, 2018 Editor