32°C

downwind உர முறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும்

Editor Tamilnadu Published: April 29, 2016 1 நிமிட வாசிப்பு கீரை வகைகள்
எழுத்து அளவு:

தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கீரைகளை பல்பொருள் அங்காடியில் வாங்க வேண்டாம் என்பதாகும். ஏனென்றால் பல்பொருள் அங்காடிகளில் விற்கும் கீரைகள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்ததாக இருப்பதால் நம் உடலிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கூறியுள்ளனர். மேலும் இதேப் போல பழங்கள் மற்றும் காய்கறிளிலும்       ஈ-கோலி நுண்ணுயிரி பாதிப்பு இருப்பதால் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இத்தொற்றுநோய் நிலத்தின் அருகில் உள்ள கழிவறைகளிலிருந்து பரவுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனை சரி செய்ய downwind உர முறையினை விவசாயிகள் மேற்கொண்டால் பாதிப்புகளை பெருமளவு குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொதுவாக சால்மோனெல்லா மற்றும் ஈ-கோலி நோய்கள் எரு தளத்திலிருந்து பரவுகிறது.

இதனை சரிசெய்ய downwind உர முறை மிக ஏற்றதாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் பொறியியல் ஒரு இணை பேராசிரியர் ஷேன் ரோஜர்ஸ் கூறினார். மேலும் அவர்கள் நடத்திய ஆய்வில் 160 மீட்டர் உயர பகுதிகளிலிருந்து நிலத்தில் உரத்தினை ஈடுவதால் நோய்கள் பயிர்களுக்கு வருவது குறையும்.

https://www.sciencedaily.com/releases/2016/04/160413140124.htm

விளம்பரம்

உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

 hello@cloudsindia.in

சிறப்பான இணையதள சேவைக்கு

http://cloudsindia.in/

 

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க