32°C

சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி

Editor Tamilnadu Published: November 14, 2015 2 நிமிட வாசிப்பு தொழில்நுட்பம்
எழுத்து அளவு:

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் தற்போது புதிய முறையில் மின் சக்தியை உற்பத்தி செய்ய ஆராய்ச்சி செய்து வருகின்றது. சூரியகாந்தி பூ விவசாயம் செய்யும் நிலங்களில் Airlist ஆற்றல் மூலம் தற்போது மின்சாரம் தயாரிக்கும் பணியினை சுவிஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 2,000 மடங்கு சூரிய கதிர் வீச்சினை சூரிய காந்தி பூக்கள் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது எனவே சுவிஸ் நிறுவனம் இந்த சூரிய காந்தி சக்தியை பயன்படுத்தி 80% மின்சார சக்தியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 10 மணி நேர சூரிய ஒளியிலிருந்து சுமார் 12KW மற்றும் 20 KW அளவிற்கு சூரிய மின் சக்தி தயாரிக்க முடியும். இது எப்படி என்றால் சூரிய காந்தி தாவரத்தின் இலைகளில் உள்ள நீரினை தன்னகத்தே ஈர்த்து அதனை மின் சக்தியாக மாற்றுகிறது. இவ்வாறு ஈரபதத்தை காற்று ஒளியின் மூலம் ஈர்ப்பதால் பல சராசரி வீடுகளுக்கு போதுமான மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இவர்கள் சூரியகாந்தி விவசாயம் செய்யும் இடங்களில் இருந்து சுமார் 30 முதல் 40 லிட்டர் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறி உள்ளனர். தற்போது இவர்கள் கண்டறிந்த Airlist ஆற்றல் மூலம் தயாரிக்கப்படும் மலிவு சூரிய தொழில்நுட்பத்தினை வரும் 2017-ம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வரப்போவதாக IBM ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். Airlist ஆற்றல் எப்படி சூரியகாந்தி தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

  1. தனியாக ஒருங்கிணைந்த டிஷ் Antena இதற்கு தேவைப்படுகிறது.
  2. இந்த டிஷ் Antena-வை நிறுவ குறைந்த பணம் தேவை, மற்றும் நீண்ட வாழ்நாள் கொண்டது.
  3. இதனை எப்போது வேண்டுமானாலும் நிலத்தில் வைத்துக் கொள்ளலாம்
  4. கிராம புறங்களுக்கு ஏற்ற ஒரு முறை.

http://www.greenbuildermedia.com/blog/news/solar-sunflower-concentrates-power-and-desalinates-water

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க