Skip to content

டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு

Mettur Dam

கர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது முறையாக 100 அடியை எட்டியது. இதனையடுத்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் காவிரி நீருக்கு பூஜை செய்தனர்.

தஞ்சை டெல்டா பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் இபிஎஸ் திறந்து வைத்தார். தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் பத்தாயிரம் கன அடி வரை உயர்த்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தற்போது அணைக்கு வினாடிக்கு நீர் வரத்து 2.53 லட்சம் கன அடியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj