தொடர்
விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்!
பண்ணைநிலமும் சாகுபடிக்குரிய முயற்சியும். (1)அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கைவிடாதே. (2)கச்ச நிலமானாலும் கை சேர்க்கை. (3)புன்செயிற் புதிது நன்செயிற் பழையது. (4)அடைப்பில்லாக் காடும் விடுப்பில்லா ஏரும். ஒரு குடியானவன் அநுபவித்துவரும் பூமியின் விஸ்தீரணம் பண்ணை நிலமென்று சொல்லப்படும். அவனுக்குச் சொந்தமான நிலம் முழுவதும் ஒரே அடைப்பில் இருப்பது மிக அநுகூலம். எவ்வளவுக்கெவ்வளவு அவன் வீடு தன் நிலத்துக்கருகில் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனுக்கு நலந்தான். இந்நாட்டில் வசிக்கும் குடிகள் கிராமாந்தரங்களில் ஒருமிக்கக் கும்பலாகக் குடியிருப்பதைவிட, […]