32°C

வளர்ப்பு

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன? செய்திகள்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 […]

January 19, 2018 Editor
ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை இயற்கை உரம்

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம். கழிவுகள் கலந்த கலவையை […]

April 15, 2017 Editor
டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை விவசாய கட்டுரைகள்

டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

டி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஆட்டு எரு, மாட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கலந்து பாத்தி முழுவதும் தூவி, விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதைநெல்லை தூவி விதைக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் […]

March 9, 2017 Editor
மண்பானை பாசனம்..! இயற்கை விவசாயம்

மண்பானை பாசனம்..!

தனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைத்து வைத்திருக்கிறோம்.. பானையை புதைப்பதற்கு முன்னால், பானைக்கு அடிப்பக்கம் பக்கவாட்டில் சின்னதாக ஒரு துளை போட்டுவிடுவோம். அதோட வாய்ப்பகுதி மட்டும் கொஞ்சம் சாய்வா இருக்கிற மாதிரி புதைத்துவிடுவோம். வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சும்போது, பானைக்குள்ளேயும் […]

March 4, 2017 Editor
வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..! கால்நடை

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

”சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும். கோ-1, கோ-2, கோ-3, கோ-4, […]

February 20, 2017 Editor
சுழற்சி முறையில் கீரை சாகுபடி..! கீரை வகைகள்

சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். பிறகு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு கிலோ வீதம் கனஜீவாமிர்தம் இட வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் […]

February 20, 2017 Editor
செம்பருத்தி சாகுபடி..! இயற்கை விவசாயம்

செம்பருத்தி சாகுபடி..!

ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்வது குறித்து ஆஸ்டின் கிருபாகரன் சொன்ன தகவல்கள்.. செம்பருத்தி நடவுக்கு ஆனி, ஆடி பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது, இரண்டு நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது, ஆறு அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்க முடியும். பிறகு சொட்டுநீர்க் […]

February 17, 2017 Editor
நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..! இயற்கை உரம்

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தேவையான பொருட்கள்: குழு 1 : 70 கிலோ முழுமையாக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம், 10 கிலோ சாம்பல் அல்லது அரிசி தவிடு சாம்பல் மற்றும் 20 கிலோ மரத்தூள். குழு 2 : (அ) ஐந்து லிட்டர் பஞ்சகாவ்யா, (ஆ) ஐந்து லிட்டர் செறிவூட்டப்பட்ட அமுதம் கரைசல், (இ) ஐந்துலிட்டர் இளநீர் – மோர் அல்லது அரப்பு – மோர் அல்லது சீயக்காய் – […]

February 8, 2017 Editor
விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5) இயற்கை உரம்

விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)

இது ஐந்து பொருட்களை கொண்டுள்ளது என்பதால், ET5 பெயரிடப்பட்டது. தேவையான பொருட்கள்: (அ) 100 மிலி அங்கக வினிகர், (ஆ) 100 மிலி ET, (இ) 100 கிராம்வெல்லம், (ஈ) 100 மில்லி பிராந்தி, (இ) 600 மிலி தண்ணீர் மொத்தம் சேர்த்து ஒரு லிட்டர். தயாரிப்பு: அனைத்தையும் கலந்துமற்றும் 7-10 நாட்களுக்கு நொதிக்க அனுமதிக்கவும். பயன்பாடு: 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2-5 மில்லி தெளிக்க வேண்டும். கடுமையான நோய்த்தாக்குதல்l இருந்தால் […]

February 6, 2017 Editor
திரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு இயற்கை உரம்

திரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு

நுண்ணூட்டச்சத்து குறைபாடு சரி படுத்துவதற்கான திரமி – நொதித்த தாவரசாறு (TFPE) தேவையானபொருட்கள் : பின்வரும் இலைகள்: (அ) புளிஅல்லது துத்தநாகம், (ஆ) அவரை, செம்பருத்தி, அல்லது வல்லாரை (செம்பு), (இ) கறிவேப்பிலை, முருங்கை இலை, அல்லது வேறு எந்த கீரை இலைகள் (இரும்பு ), (ஈ) எருக்கு (போரான்), (உ)அனைத்து வகையான மலர்கள் (மாலிப்டினம்), (ஊ) துத்தி (கால்சியம்), (எ) எள்அல்லது கடுகு தாவரங்கள் (கந்தகம்), (ஏ) வெண்டை இலை (அயோடின்), (ஐ) லாண்டானா காமரா, […]

February 4, 2017 Editor