மருத்துவ குணங்கள்
இமயமலையில் பெருங்காயம்
இந்தியர்களின் சமையலறையில் ஓர் இன்றியமையாத வாசனை பொருளாக பெருங்காயம் திகழ்கின்றது. பல நோய்களுக்கு இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய பெருங்காயத்தை நாம் இறக்குமதி செய்கிறோம் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசானது வருடந்தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை ரூ.600 கோடி செலவில் ஈரான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது. இச்செலவினை குறைக்கும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் பெருங்காய விதைகளை பயிரிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பெருங்காயமானது அதிக […]