32°C

பஞ்சகவ்யா

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா ! இயற்கை விவசாயம்

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல். ”சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு, பச்சை இரண்டு ரக இளநீர் மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன். இதுக்கும் 25 அடி இடைவெளிதான். சொட்டுநீர் பாசனம்தான் போட்டிருக்கேன். ஆறு வயசாச்சு, வழக்கமாக தென்னையைப் பராமரிக்கிறது மாதிரிதான் இதையும் பராமரிக்கிறேன். ஏக்கருக்கு 80 மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கு. அதில் […]

December 24, 2016 Editor
மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி ! இயற்கை விவசாயம்

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாட்கள் ஆறவிட வேண்டும் பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில் மேட்டுப்பத்தி அமைத்து அதில் 50 கிலோ கனஜீவாமிர்தத்தை (பவுடர் வடிவில் இருக்கும்) தூவ வேண்டும். பின்னர், 15 கிலோ கிச்சலிச்சம்பா விதையைப் பாத்தியில் பரவலாகத் தூவ வேண்டும். பிறகு 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி வைக்கோலைப் பரப்பி விதைகளை மூட வேண்டும். […]

December 22, 2016 Editor
இரண்டு வகை பஞ்சகவ்யா ! இயற்கை உரம்

இரண்டு வகை பஞ்சகவ்யா !

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர் எட்டில் ஒரு பங்கு, சாணம் பதினாறில் ஒரு பங்கு என்று நாட்டுப்பசுவின் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிப்பது சிருஷ்டி கிரமா. சாணம் ஒரு பங்கு, சிறுநீர் அரைப் பங்கு, பால் கால் பங்கு, தயிர் எட்டில் ஒரு பங்கு, நெய் பதினாறில் […]

December 21, 2016 Editor
ஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

ஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை

ஜாதிக்காய் நன்கு படர்ந்து வளரும் மரம். அதனால், 25 அடி இடைவெளி கொடுக்க வேண்டும். இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் வளரும். அதே போல உப்புத்தண்ணீரில் வளர்ச்சி சரியாக இருக்காது; அதனால் உப்புத்தண்ணீர் நிலம் கொண்டிருப்பவர்கள் இதனை தவிர்த்து விட வேண்டும். 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழியெடுத்து, அதில், ஒரு கூடை அளவு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை […]

December 17, 2016 Editor
காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் ! பயிர் பாதுகாப்பு

காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் !

மருதாநதி அணைப்பகுதியில் உள்ள தோப்பு, வனப்பகுதி அருகே இருப்பதால் காட்டு மாடு, மான் ஆகியவை அடிக்கடி ரசூலின் தோட்டத்துக்குள் வந்து போகின்றன. இதனால், இளஞ்செடிகளைக் காப்பாற்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார், ரசூல். “மான் வரும் இடத்தில் புதிதாக எந்த செடிகளையும் நட்டு வைக்க முடியாது. அதற்கு தேவையில்லை என்றாலும் சும்மா கடித்துவிட்டு போய்விடும் அதனால், நிறைய செடிகள் வீணாகும். மான்களையும் தொந்தரவு செய்யாமல், செடிகளையும் பாதுகாக்கிறதுக்காக மாட்டுச் சாணியைக் கெட்டியான பதமாகக் கரைத்து செடிகள் மேலே தெளித்துவிடுவோம். […]

December 17, 2016 Editor
உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா? இயற்கை விவசாயம்

உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. 55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும், இயற்கை உணவுகள் அதிக சத்தானவை என நம்புகின்றனர். 40 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் வாங்கும் உணவு வகைகளில் சிலவற்றை இயற்கை உணவாக தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சராசரி விற்பனையைக் காட்டிலும் இயற்கை உணவுகளின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. […]

December 9, 2016 Editor
கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..! கால்நடை

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். ”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவை தயாரிக்கும் முறை, மற்றும் பயன்படுத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயில், காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்களில் 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் […]

December 3, 2016 Editor
பஞ்சகவ்யாவில் பப்பாளி! இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் பப்பாளி!

பஞ்சகவ்யாவில் பப்பாளி சேர்ப்பது குறித்து, ’கொடுமுடி டாக்டர்’ நடராஜனிடம் கேட்டபோது, ”செலவைக் குறைக்க சர்க்கரைக்கு பதிலாக அவரோட தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சேர்க்க ஆரம்பித்தார் பழனிச்சாமி. இதில் தவறு ஏதும் இல்லை. கனிந்த பழங்களில் இருந்து இனிப்புத்தன்மை பஞ்சகவ்யாவுக்குக் கிடைத்து விடுகிறது. அதே மாதிரி அவர் நுண்ணுயிரிகளுக்கு தீனியாக சத்துமாவு கலப்பார். இதிலும் தவறு இல்லை. நாளுக்கு நாள் பஞ்சகவ்யா பரிணாம வளர்ச்சி அடைவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் இப்படி ஆராய்ச்சி செய்பவர்கள் பயிர்களுக்கு […]

September 21, 2016 Editor
பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு

பசு மாட்டுச்சாணம் – 5 கிலோ, மாட்டுச்சிறுநீர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், நெய் – 1 லிட்டர், நாட்டுச்சர்க்கரை – 1 கிலோ ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில் மருத்துவர் நடராஜன் பஞ்சகவ்யா தயாரித்துள்ளார். இருந்தாலும், பயிர்களைப் பொறுத்து மூலப்பொருட்களின் அளவுகளைக் கூட்டிக் குறைத்தும் சில பொருட்களை புதிதாகச் சேர்த்தும் ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுள்ளார், செல்லமுத்து. “சர்க்கரைக்கு பதிலாக 3 லிட்டர் கரும்புச்சாறு சேர்த்துக்கிட்டு இலைவழித் தெளிப்பாகக் கொடுக்கும்போது, நல்ல […]

September 17, 2016 Editor
பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள் இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்

பசுஞ்சாணம் கௌடில்யர், வராகமிக்கிரர், சுரபாலர், சோமேஸ்வரதேவர் ஆகியோரது காலங்களில் விவசாயத்தில் சாணம் உபயோகிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘கோமே’ என்று வடமொழியில் அழைக்கப்படும் பசுஞ்சாணத்தில், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தகம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றோடு பாக்டீரியா, பூஞ்சாணம் ஆகியவையும் உள்ளன. பசுஞ்சாணத்தில் 82 சதவிகிதம் நீரும், 18 சதவிகிதம் திடப்பொருளும் அடங்கியுள்ளன. சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி விதை பாதுகாப்புக்கான சிறந்த களம் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டு […]

August 27, 2016 Editor