தொடர்
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6
உலகத்தில் நாம் செய்யும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதற்கு நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் கட்டாயம் இருப்பதுதான் உலக நியதி. அப்படித்தான் பசுமைப்புரட்சிக்கும். பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதற்கு வந்த வரவேற்புகளுக்கு ஈடாக எதிர்ப்புகளும் வந்தன. மனிதனுக்கும் வேளாண்மைக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளோ இரண்டாயிரம் ஆண்டுகளோ கொண்டது கிடையாது. பத்தாயிரம் ஆண்டுகளாக, அதாவது காடு மேடுகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன் விவசாயத்தைக் கற்றுக்கொண்ட பின்னர் ஒரே இடத்தில் குழுக்களாகத் தங்கி உறவாட […]