தொடர்
விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்
விவசாயத்திற்குரிய காலதேச நிலைமைகள்: ’மாரியல்லது காரியமில்லை.’ விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற முக்கியமான நிலைமைகள் மூன்று. அவை மண்ணின் குணாகுணம், சீதோஷ்ணஸ்திதி, நிலத்தின் ஸ்தானம். அதாவது தானியங்கள் வெகுவாய் விற்பனையாகும் சந்தையைநோக்கி எவ்வாறு நிலம் இருக்கின்றது என்பது. ஆயினும், இவ்வதிகாரத்தின் தலைப்பிற கூறிய பழமொழிபோன்ற மற்ற பழமொழி வசனங்களால் மழையின் பெருமையும் தெளிவாகும். பண்ணை இருக்கும் இடத்தைக் குறித்துச் சொல்லுங்கால் ஏற்கனவே முகவுரையில் விவரித்தபடி பெரிய நகர்களின் அருகே தோட்டக் விவசாயமும் பாற் விவசாயமும் சாதாரணமாய் லாபகரமானவை, ஜனத்தொகை […]