32°C

விளைச்சல்

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன? கருத்துக்களம்

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன?

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகளின் மின்கட்டணம், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருள்களுக்கு தகுந்த விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 விவசாயிகள் ஒன்றுதிரண்டு பிரம்மாண்ட பேரணி நாசிக்கில் கடந்த 6ம் தேதி துவங்கிய பேரணி, 180 கி.மீ தூரம் நடைப்பயணத்திற்கு பின் நேற்று மும்பையை வந்தடைந்தது. மும்பையில் மக்கள் உணவுப் பொருட்கள், தண்ணீர் கொடுத்து விவசாயிகளை அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. சாலைகளில் விவசாயிகளுக்கு மலர்கொத்து கொடுத்து நகரவாசிகள் வரவேற்றது […]

March 13, 2018 Editor
ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன? செய்திகள்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 […]

January 19, 2018 Editor
ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை இயற்கை உரம்

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம். கழிவுகள் கலந்த கலவையை […]

April 15, 2017 Editor
மிளகு சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

மிளகு சாகுபடி செய்யும் முறை

“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயரப்பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி தேவையான தொழு உரம், […]

April 13, 2017 Editor
கோடை உழவு..! இயற்கை விவசாயம்

கோடை உழவு..!

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் செம்மறியாடுகளைக் கிடை அடைக்க வேண்டும். பிறகு, ஒருமுறை உழுது வைக்க வேண்டும். ஆடி மாதம் மழை கிடைத்தவுடன், உடனடியாக ஓர் உழவு ஓட்டி விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் […]

March 21, 2017 Editor
கருங்குறுவை சாகுபடி..! இயற்கை விவசாயம்

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த […]

March 18, 2017 Editor
அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..! இயற்கை விவசாயம்

அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..!

செண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப் பரவலாகக் கொட்டி ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, 10 அடி சதுரத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாத்திகளில் செடிக்குச்செடி ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி என இருக்குமாறு ஒரு அங்குல ஆழத்தில் […]

March 17, 2017 Editor
ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..! காய்கறி வகைகள்

ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!

இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும். பொதுவாக காய்கறிப்பயிர்களுக்கு இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைத்த அன்று நீர்ப் பாய்ச்சி, மூன்றாம் நாள் அடுத்தப் பாசனம் செய்ய வேண்டும். 20 மற்றும் […]

March 13, 2017 Editor
டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை விவசாய கட்டுரைகள்

டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

டி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஆட்டு எரு, மாட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கலந்து பாத்தி முழுவதும் தூவி, விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதைநெல்லை தூவி விதைக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் […]

March 9, 2017 Editor
நோனி பழ சாகுபடி..! விவசாய கட்டுரைகள்

நோனி பழ சாகுபடி..!

நோனியை விதை மற்றும் விண்பதியன் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். பெரிய பழங்கள் கொடுக்கும் மரங்களிலிருந்து பழங்களைச் சேகரித்து விதைகளைப் பிரித்து, அவற்றை ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும். இப்படி வளரும் நாற்றுகளை எடுத்து பிளாஸ்டிக் பைகளில் நட்டு, 2 மாதங்கள் வரை வளர்த்து, பிறகுதான் நிலத்தில் நடவுசெய்ய வேண்டும். 2 சதுரஅடியில் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழி ஆறிய பிறகு செம்மண், மணல், தொழுவுரம் ஆகியவற்றைச் சமஅளவில் கலந்து குழிக்குள் இட்டு கன்றுகளை […]

March 6, 2017 Editor