சந்தை
மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!
இன்றைய சூழலில் விதையிலிருந்து விற்பனை வரை சந்தையைச் சார்ந்தே விவசாயிகளின் வாழ்க்கை சுழல்கிறது. பணப்பயிர்கள் நம் நிலங்களை ஆக்கிரமிப்பதால், வேதி உரங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றைக் காசு கொடுத்து வாங்கும் நிலையில் பெரும்பாலான விவசாயிகள் இல்லை. ஆதலால், உரம் வாங்கக் கடன் கொடுக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கே விளைபொருள்களைக் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலையில் உள்ளனர் விவசாயிகள். பெரும்பாலான கிராமங்களில் உரக்கடை உரிமையாளர்களே விளைபொருள்களையும் கொள்முதல் செய்துகொள்கிறார்கள். அதேபோல, நுகர்வோரில் அத்தனை தேவைகளுக்கும் சந்தையைச் சார்ந்தே இருக்க […]