32°C

இயற்கை

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..! கால்நடை

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..!

கால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு அதிகளவு அதிகளவு தவிடு கொடுப்பது ஆபத்தில் முடிந்துவிடும். ஆடுகளைத் தாக்கும் நோய்களில், துள்ளுமாரி நோய், ஆட்டு அம்மை, ஆட்டுக்கொல்லி நோய், அடைப்பான், நீலநாக்கு நோய் போன்றவை முக்கியமானவை. ஆடுகளுக்கு ஜூன் மாதத்தில் ஆட்டுக்கொல்லி எனப்படும் பிபிஆர் நோய்க்கான தடுப்பூசியும்; ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசியும்; […]

January 2, 2017 Editor
மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி? இயற்கை உரம்

மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி?

மா  மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இல்லாமலிருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவே கூடாது. தரையில் படர்ந்துள்ள அல்லது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கிளைகள் உள்ள மரங்களின் தண்டுகள்தான் தண்டுத் துளைப்பானின் குடியிருப்புகள். அதே போல, மா மரங்களின் அடியில் […]

December 31, 2016 Editor
ரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா சில வரி செய்திகள்

ரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா

ஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில் தேசிய விவசாய விற்பனை சந்தைப்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து இணையம் வழியாக விற்பனைகளை ஊக்குவிக்கிறது. இதில் நெல் மட்டும் ரூ.1,500 கோடிக்கும், மீதபயிர்கள் 1,000 கோடிக்கும் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த நடைமுறை இருந்தாலும் இன்னமும் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.. நன்றி! மேலும் […]

December 26, 2016 Editor
சில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும் விவசாய கட்டுரைகள்

சில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்

சளியைக் குணமாக்கும் மூலிகைகள் சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். உடல்வலி அதிகமாக இருந்தால், கைப்பிடியளவு குறுந்தொட்டி வேர் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். காய்ச்சலுடன் அதிகமாக உடல்வலி, தலைவலி இருந்தால் நொச்சி இலை, எலுமிச்சை இலை, மஞ்சள் பொடி, கல் உப்பு ஆகியவற்றைக் […]

December 26, 2016 Editor
மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி ! இயற்கை விவசாயம்

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாட்கள் ஆறவிட வேண்டும் பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில் மேட்டுப்பத்தி அமைத்து அதில் 50 கிலோ கனஜீவாமிர்தத்தை (பவுடர் வடிவில் இருக்கும்) தூவ வேண்டும். பின்னர், 15 கிலோ கிச்சலிச்சம்பா விதையைப் பாத்தியில் பரவலாகத் தூவ வேண்டும். பிறகு 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி வைக்கோலைப் பரப்பி விதைகளை மூட வேண்டும். […]

December 22, 2016 Editor
இரண்டு வகை பஞ்சகவ்யா ! இயற்கை உரம்

இரண்டு வகை பஞ்சகவ்யா !

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர் எட்டில் ஒரு பங்கு, சாணம் பதினாறில் ஒரு பங்கு என்று நாட்டுப்பசுவின் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிப்பது சிருஷ்டி கிரமா. சாணம் ஒரு பங்கு, சிறுநீர் அரைப் பங்கு, பால் கால் பங்கு, தயிர் எட்டில் ஒரு பங்கு, நெய் பதினாறில் […]

December 21, 2016 Editor
ஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

ஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை

ஜாதிக்காய் நன்கு படர்ந்து வளரும் மரம். அதனால், 25 அடி இடைவெளி கொடுக்க வேண்டும். இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் வளரும். அதே போல உப்புத்தண்ணீரில் வளர்ச்சி சரியாக இருக்காது; அதனால் உப்புத்தண்ணீர் நிலம் கொண்டிருப்பவர்கள் இதனை தவிர்த்து விட வேண்டும். 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழியெடுத்து, அதில், ஒரு கூடை அளவு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை […]

December 17, 2016 Editor
காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் ! பயிர் பாதுகாப்பு

காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் !

மருதாநதி அணைப்பகுதியில் உள்ள தோப்பு, வனப்பகுதி அருகே இருப்பதால் காட்டு மாடு, மான் ஆகியவை அடிக்கடி ரசூலின் தோட்டத்துக்குள் வந்து போகின்றன. இதனால், இளஞ்செடிகளைக் காப்பாற்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார், ரசூல். “மான் வரும் இடத்தில் புதிதாக எந்த செடிகளையும் நட்டு வைக்க முடியாது. அதற்கு தேவையில்லை என்றாலும் சும்மா கடித்துவிட்டு போய்விடும் அதனால், நிறைய செடிகள் வீணாகும். மான்களையும் தொந்தரவு செய்யாமல், செடிகளையும் பாதுகாக்கிறதுக்காக மாட்டுச் சாணியைக் கெட்டியான பதமாகக் கரைத்து செடிகள் மேலே தெளித்துவிடுவோம். […]

December 17, 2016 Editor
உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா? இயற்கை விவசாயம்

உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. 55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும், இயற்கை உணவுகள் அதிக சத்தானவை என நம்புகின்றனர். 40 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் வாங்கும் உணவு வகைகளில் சிலவற்றை இயற்கை உணவாக தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சராசரி விற்பனையைக் காட்டிலும் இயற்கை உணவுகளின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. […]

December 9, 2016 Editor
கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..! கால்நடை

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். ”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவை தயாரிக்கும் முறை, மற்றும் பயன்படுத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயில், காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்களில் 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் […]

December 3, 2016 Editor