32°C

வெண்டை

நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை சந்தை

நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 25 ரூபாய் மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் பீர்க்கன், தக்காளி, வெண்டை, முருங்கை, தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய காய்கறிகளில், ஏதாவது ஐந்து காய்கறி விதைகள் 40 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும், அதிகபட்சமாக, ஆறு காய்கறி தளைகள் வரை பெறலாம். […]

November 12, 2018 Editor
வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு ! இயற்கை உரம்

வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு !

10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா! விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, செடி வளர சிறந்த பயிர் ஊக்கியாகச் செயல்படும். வேறு எந்த இடுபொருளும் […]

October 7, 2016 Editor
வெண்டை சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

வெண்டை சாகுபடி செய்யும் முறை

வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 15 டன் தொழுவுரம், 400 கிலோ […]

October 5, 2016 Editor
அதிக மகசூல் கொடுக்கும் தீவன தட்டைப்பயறு, வெண்டை மற்றும் எலுமிச்சை செய்திகள்

அதிக மகசூல் கொடுக்கும் தீவன தட்டைப்பயறு, வெண்டை மற்றும் எலுமிச்சை

தீவன தட்டைப்பயறு [கோ-9] 50-55 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், கோ-5, புந்தெல்லோபியா-2 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. காரிஃப் (ஜூலை-அக்டோபர்), ரபி (அக்டோபர்-மார்ச்) மற்றும் கோடை பருவங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 22.82 டன் மகசூல் கிடைக்கும். கோ(எப்.சி)-8 ரகத்தை விட 18.42% கூடுதல் மகசூல் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்றது. அதிக பசுந்தீவனம் மற்றும் உலர் எடை மகசூல் கிடைக்கும். அகலமான இலைகள், அதிக கிளைகள் கொண்டது. அதிகப் புரதச்சத்து, குறைந்தளவு நார்ச்சத்து […]

August 14, 2016 Editor