செய்திகள்
முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தென்மேற்கு பருவ மழை, அந்தமான் நிகோபார் தீவுகளில் துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ மழைக் காலங்கள் உண்டு. இவற்றில், தென்மேற்கு பருவ மழை தான், நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரங்களை நிரப்பும் மழையாக கருதப்படுகிறது. தமிழகத்தில், இந்த மழை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே பெய்யும். ஆனால், கேரளா மற்றும் கர்நாடகாவில், தென்மேற்கு பருவ மழை […]