32°C

நீர்

உன்னத உழவனும் உழவும் விவசாய கட்டுரைகள்

உன்னத உழவனும் உழவும்

உலகம் உன்னதமான உயிரோட்டமான உருண்டையானது உயிரோட்டமான உலகில் உடலை உழித்து, உயிரை உருக்கி உழுபவன் உழவன் உழவன் உழவில்லையெனில் உணவில்லை உலகில் உணவில்லா உலகில் உயிர் உள்ள உயிர்களெல்லாம், உடலில் ஊற்றென உதித்த உதிரம் உதிர்த்து உணவு உட்கொள்ளும் உபத்திரம் உருவாகும் உலகில்! உழவனை உயர்த்தி உயிர்களுக்கு உயிர் ஊட்டுவோம் உலகில் உயர்ந்தது உழவனும் உழவுமென உலகிற்கு உணர்த்தி உயர்த்துவோம். கவிதையாக்கம்: செ. நந்தகுமார், வேளாண் பட்டதாரி, சேலம் சட்டூர். மின்னஞ்சல்: nandhaselvam27762@gmail.com

November 12, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)

அமில மழையில் அழியும் கலை! 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது அது என்னவென்றால் “ஒன்று தாஜ்மஹாலை காப்பாற்றுங்கள் இல்லையேல் அதனை அழித்து விடுங்கள்” என்பதுதான். இதற்கு என்ன காரணமாக இருக்கும் வேறு ஒன்றுமல்ல அமில மழை. 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 1990களில் சல்பர் டைஆக்ஸைடு அளவு காற்றில் 4400 கிலோ டன்கள் இருந்ததாகவும் இவை 10 ஆண்டுகளில் அதிகரித்த வண்ணத்தில் (2000ஆம் ஆண்டு) […]

September 17, 2020 editor news
நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி பயிர் வகைகள்

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி (எஸ்.எஸ்.ஐ) என்பது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய முறை,” குறைவான முதலீட்டில் அதிக லாபம் ” என்பது இதன் முக்கிய கருதுகோள். குறைந்த அளவிலான விதைகள்,   நீர் மற்றும் உரங்களை உகந்த முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற இந்த முறை வழிவகை செய்கிறது. எஸ்.எஸ்.ஐ வழக்கமான விதை, நீர் மற்றும் அடர் கரும்பு சாகுபடிக்கு மாற்றாகும். எஸ் எஸ் ஐ இன் முக்கிய கொள்கைகள் ஒரு பரு சீவலை கொண்டு […]

September 16, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)

அமிலமா! அமிர்தமா! 2015இல் படித்து அதிர்ந்த செய்தி, தாய்ப்பாலில் விஷம் என்பது தான் அதன் தலைப்பு. அதாவது நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி நம் உணவில் கலந்து, கடந்து தாய்ப்பால் வரை சென்றடைவதாக இருந்தது அந்தக் கட்டுரை. எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான் இப்படி நமக்கு மூலமான ஒன்று நிர்மூலம் ஆனால், இது தான் பிரதானம் என்று எண்ணிய ஒன்று நாம் எடுக்க முடியாமல் போனால்… அப்படித்தான் நாம் அமிர்தமாய் கருதுகின்ற மழையும் இன்று பெரும் […]

September 16, 2020 editor news
விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ? விவசாய கட்டுரைகள்

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் http://agrisakthi.com, http://vivasayam.org அவரின் பிறந்தநாளில் இன்றைய விவசாயம் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம் கொரோனோக்கு முன்பு விவசாயம் எப்படி இருந்தது என்று என்பது நமக்குத் தெரியும். ஆனால் இன்றோ கொரோனா பெருந்தொற்றால் வீட்டில் முடங்கியபடி அடுத்த வேளை சாப்பாட்டிற்குப் பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் […]

April 6, 2020 Editor
மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன? கருத்துக்களம்

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன?

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகளின் மின்கட்டணம், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருள்களுக்கு தகுந்த விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 விவசாயிகள் ஒன்றுதிரண்டு பிரம்மாண்ட பேரணி நாசிக்கில் கடந்த 6ம் தேதி துவங்கிய பேரணி, 180 கி.மீ தூரம் நடைப்பயணத்திற்கு பின் நேற்று மும்பையை வந்தடைந்தது. மும்பையில் மக்கள் உணவுப் பொருட்கள், தண்ணீர் கொடுத்து விவசாயிகளை அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. சாலைகளில் விவசாயிகளுக்கு மலர்கொத்து கொடுத்து நகரவாசிகள் வரவேற்றது […]

March 13, 2018 Editor