தொடர்
விவசாய நூல் – முதல் அதிகாரம்
முகவுரை. வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும் ஒதுவா ரெல்லாரு முழுவார் தந் தலைக்கடைக்கே கோதைவேன் மன்னவர்தங் குடைவளமுங் கொழுவளமே ஆதலால் இவர்பெருமை யார்உரைக்க வல்லாரே. (கம்பர்) கிருஷி(விவசாயம்) என்கிற பதத்திற்குப் பூமியைப் பண்படுத்திப் பயிரிடுதலென்பதே சரியான பொருள். ஆயினும், சாதாரணமாய் அப்பதம் பிராணி சம்பந்தமாயும், தாவர சம்பந்தமாயும், நிலத்திலிருந்து நேராகவோ வேறு எவ்விதமாகவோ நாம் அடையக்கூடிய பொருள்களை உண்டாக்குவதற்கு அவசியமான சாதனங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதாகவே வழங்கப்படுகிறது. நிலத்திலே வளரும் பயிர் வகைகளும் […]