32°C

இயற்கை உரம்

இயற்கை உரம்

முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை! இயற்கை உரம்

முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!

தோலுரித்த ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை, ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி.. லேசான சணல் சாக்கு அல்லது வெள்ளைத்துணியில் வைத்து நன்கு முறுக்கினால், சாறு கிடைக்கும். 10 முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து, அதில் வெங்காயச் சாற்றைச் சேர்த்துக் கலக்கினால்… கரைசல் தயார். இது ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கும். இதை ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 50 மில்லி […]

July 5, 2016 Editor
மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் ! இயற்கை உரம்

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி பல இடங்களில் காய்ந்து காணப்படும். ஒற்றை நாற்று நடவு செய்த நிலங்களில், போதுமான அளவுக்குக் காற்று, சூரிய ஒளி கிடைப்பதால், புகையான் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால், […]

July 4, 2016 Editor
சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்! இயற்கை உரம்

சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்!

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும் இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். தயாரிப்பு முறை : ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் […]

July 2, 2016 Editor
பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை இயற்கை உரம்

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை

பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…. ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம். 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் : பச்சைப்பசுஞ்சாணம் – 5 கிலோ பசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர் காய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர் […]

June 27, 2016 Editor
வீட்டுத்தோட்டத்திற்கான உரங்கள்..! இயற்கை உரம்

வீட்டுத்தோட்டத்திற்கான உரங்கள்..!

புறக்கடைத் தோட்டத்தில் செடிகள் நடுவதற்கு முன்பாக, மண்கலவையை உருவாக்க வேண்டும். நல்ல வளமான மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து, செடி வளரப்போகும் பிளாஸ்டிக் பையில் முக்கால் பங்கு நிரப்பி வைக்க வேண்டும். பைகளில் விதை அல்லது நாற்றுகள் என எது நடுவதாக இருந்தாலும், பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, விதைநேர்த்தி செய்த பிறகுதான் நடவேண்டும். வேர் சம்பந்தமான நோய்களைத் தடுத்து, தண்டு ஊக்கமாக வளர இது அவசியம். கொடி வகை மற்றும் […]

June 25, 2016 Editor
வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் ! இயற்கை உரம்

வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் !

கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி […]

June 24, 2016 Editor
கீரை பற்றிய ஆய்வு! இயற்கை உரம்

கீரை பற்றிய ஆய்வு!

UC Davis Seed Biotechnology Center  மற்றும் சீன ஆய்வாளர்கள் கீரை செடிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வுப்படி மூன்று செயல் முறைகளில், கீரை செடிகளில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது. அதனை ஈடு செய்ய புதிய மரபணு மாற்றங்களை கீரை விதைகளில் பயன்படுத்த உள்ளனர். சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் விதைகளை உருவாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பூக்கும் கீரை விதைகளை பற்றி விரிவான முறையில் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய இந்த […]

April 5, 2016 Editor
விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது இயற்கை உரம்

விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

டென்மார்க்கில் உள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மண்ணின் வளத்தினை பற்றி ஆய்வு செய்ததில் விலங்குகளின் எருவில் மிக அதிக எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எருமைகளின் சாணத்தில் அதிக ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக எதிர்ப்பு ஆற்றல் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளது. இதனை பற்றி அறிந்துகொள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் Askov சோதனை நிலையத்தில் 122 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1923-லிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை விஞ்ஞானிகள் சோதித்து அறிவியல் இதழில் வெளியிட்டனர். இந்த எரு […]

March 9, 2016 Editor
மண்ணுக்கு மரியாதை! இயற்கை உரம்

மண்ணுக்கு மரியாதை!

மணற்பாங்கான மண்னை வளமாக்கும் சூத்திரம்! ஆரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லம் விளைச்சளை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை விளக்குவதும், ’காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை, ஆச்சர்யங்களை, லட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பற்றிய அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவதுமே இந்த தொடரின் நோக்கம். ‘மண்ணில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா’ என விழிகளை விரிய வைக்கிறது, இந்தத் தொடர். […]

February 13, 2016 Editor
ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது இயற்கை உரம்

ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது

சீன ஆராய்ச்சியாளர்கள் தாவரம் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஆர்கானிக் நைட்ரஜன் உரம் தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். நைட்ரஜன் தான் தாவர வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை அதிக அளவு அளிக்கிறது. தற்போது உலக அளவில் இது விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நைட்ரஜன் மண்ணை வளமுள்ளதாகவும் மற்றும் நிலத்தடிநீரை தூய்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் மண்ணின் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் பசுமை குடிலை தூய்மையாக […]

January 11, 2016 Editor