32°C

இயற்கை உரம்

இயற்கை உரம்

அமுதக்கரைசல் தயாரிப்பு முறை! இயற்கை உரம்

அமுதக்கரைசல் தயாரிப்பு முறை!

அமுதக்கரைசல்.. இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். தயாரிப்பு முறை.. மாடு ஒரு தடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), ஒரு தடவை […]

November 14, 2016 Editor
நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள் இயற்கை உரம்

நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள்

கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்த அட்வைஸ் “நெல் நடவு செய்யும் விவசாயிகள், மண்ணில் மூலம் பரவும் பல வகையான நோய்களை கட்டுப்படுத்த, நெற்பயிரின் வேர்களை, சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து பின், வயலில் நடவு செய்ய வேண்டும்,” என, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுதா கூறினார். நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகள் குறித்து, அவர் கூறியதாவது: விவசாயிகள், நெல் சாகுபடிக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகிறனர். நெல் […]

November 7, 2016 Editor
வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு ! இயற்கை உரம்

வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு !

10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா! விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, செடி வளர சிறந்த பயிர் ஊக்கியாகச் செயல்படும். வேறு எந்த இடுபொருளும் […]

October 7, 2016 Editor
பஞ்சகவ்யாவில் பப்பாளி! இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் பப்பாளி!

பஞ்சகவ்யாவில் பப்பாளி சேர்ப்பது குறித்து, ’கொடுமுடி டாக்டர்’ நடராஜனிடம் கேட்டபோது, ”செலவைக் குறைக்க சர்க்கரைக்கு பதிலாக அவரோட தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சேர்க்க ஆரம்பித்தார் பழனிச்சாமி. இதில் தவறு ஏதும் இல்லை. கனிந்த பழங்களில் இருந்து இனிப்புத்தன்மை பஞ்சகவ்யாவுக்குக் கிடைத்து விடுகிறது. அதே மாதிரி அவர் நுண்ணுயிரிகளுக்கு தீனியாக சத்துமாவு கலப்பார். இதிலும் தவறு இல்லை. நாளுக்கு நாள் பஞ்சகவ்யா பரிணாம வளர்ச்சி அடைவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் இப்படி ஆராய்ச்சி செய்பவர்கள் பயிர்களுக்கு […]

September 21, 2016 Editor
பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு

பசு மாட்டுச்சாணம் – 5 கிலோ, மாட்டுச்சிறுநீர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், நெய் – 1 லிட்டர், நாட்டுச்சர்க்கரை – 1 கிலோ ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில் மருத்துவர் நடராஜன் பஞ்சகவ்யா தயாரித்துள்ளார். இருந்தாலும், பயிர்களைப் பொறுத்து மூலப்பொருட்களின் அளவுகளைக் கூட்டிக் குறைத்தும் சில பொருட்களை புதிதாகச் சேர்த்தும் ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுள்ளார், செல்லமுத்து. “சர்க்கரைக்கு பதிலாக 3 லிட்டர் கரும்புச்சாறு சேர்த்துக்கிட்டு இலைவழித் தெளிப்பாகக் கொடுக்கும்போது, நல்ல […]

September 17, 2016 Editor
பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல் இயற்கை உரம்

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்

பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும். நன்றி […]

September 6, 2016 Editor
பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள் இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்

பசுஞ்சாணம் கௌடில்யர், வராகமிக்கிரர், சுரபாலர், சோமேஸ்வரதேவர் ஆகியோரது காலங்களில் விவசாயத்தில் சாணம் உபயோகிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘கோமே’ என்று வடமொழியில் அழைக்கப்படும் பசுஞ்சாணத்தில், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தகம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றோடு பாக்டீரியா, பூஞ்சாணம் ஆகியவையும் உள்ளன. பசுஞ்சாணத்தில் 82 சதவிகிதம் நீரும், 18 சதவிகிதம் திடப்பொருளும் அடங்கியுள்ளன. சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி விதை பாதுகாப்புக்கான சிறந்த களம் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டு […]

August 27, 2016 Editor
மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு தயாரிப்பு முறை ! இயற்கை உரம்

மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு தயாரிப்பு முறை !

50-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்திருப்பவர்களுக்கு தினமும் முக்கால் டன் முதல் ஒரு டன் வரை சாணம் கிடைக்கும். 20 அடி நீளம் 15 அடி அகலம், 6 அடி ஆழம் கொண்ட இரண்டு குழிகளை அமைக்க வேண்டும். முதல் இரண்டு மாதத்திற்கு அதில் சாணம் மட்டும் இட வேண்டும். அதற்கு மேல் வேம்பு, எருக்கன், நொச்சி இலை, தென்னை ஓலை எல்லாம் கலந்து 2 டன் போட வேண்டும். அடுத்து 2 டன் வண்டல் மண் போட்டு […]

August 20, 2016 Editor
வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை! இயற்கை உரம்

வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை!

ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை எப்படி சாகுபடி செய்வது என்று பார்ப்போம். மண்ணை வளமாக்க தக்கைப்பூண்டு..! மண்வளம் குறைந்த நிலத்திலும் பாரம்பர்ய ரக நெல் வகைகள் வளரும் தன்மை கொண்டவை. வெள்ளைப் பொன்னிக்கு ஆடிப் பட்டமும், மாசிப் பட்டமும் ஏற்றவை. இதன் வயது 135 முதல் 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி மூன்று நாட்கள் காயவிட்டு.. 15 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைத்து, […]

August 18, 2016 Editor
சம்பங்கி சாகுபடி செய்யும் முறை ! இயற்கை உரம்

சம்பங்கி சாகுபடி செய்யும் முறை !

ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் முறை பற்றி காண்போம். ஒன்றே முக்கால் அடி இடைவெளி ! சம்பங்கி சாகுபடி செய்ய.. களர் மண்ணைத் தவிர்த்து வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. அதிகமான குளிர் இருக்கும் பனிக்காலத்தைத் தவிர, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை குறுக்கு நெடுக்காக நான்கு முதல் ஐந்து சால் புழுதி உழவு செய்து, மண்ணைப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு டன் […]

August 9, 2016 Editor