32°C

இயற்கை உரம்

இயற்கை உரம்

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை….. இயற்கை உரம்

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை…..

பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர்.  நடராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே… ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.

September 15, 2018 editor news
நஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை இயற்கை உரம்

நஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை

மிளகுப் பயிரைத் தாக்கும் நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும். இது ஒரு வகை பூசண நோய். முதலில் இலையின் முனையிலிருந்து வாடத்தொடங்கும். நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும்.  இது ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவக் காற்று மழையினால் அதிகம் பரவுகின்றது. நோய் தாக்கிய 10 அல்லது 15 நாட்களுக்குள் மிளகுக்  கொடி இலை அனைத்தும் உதிர்ந்து இறந்துவிடும். தூர் பாகத்திற்கு மிக அருகில் இருக்கும் தளிர் […]

September 15, 2018 senthamil
நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை! இயற்கை உரம்

நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை!

இந்நோய் ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற பூஞ்சணத்தின் மூலம் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும் போது நோய் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான வறண்ட வெப்பநிலைக்கு பிறகு மழை பெய்யும்போது நோய் தாக்குதல் அதிகமாக காணப்படும். மண்ணில் அதிக படியான ஈரம் அல்லது தண்ணீர் தேங்கும் போது இந்நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் தாக்கிய செடியின் தண்டின் அடிப்பகுதி அழுகி காணப்படும். வெண்மையான பூசணவித்துக்கள் பாதிக்கப்பட்ட செடியின் மேல்புறத்தில் காணப்படுகின்றன. செடியின் […]

September 8, 2018 senthamil
நல்ல மகசூல் பெற, மண் வளம் அவசியம்! இயற்கை உரம்

நல்ல மகசூல் பெற, மண் வளம் அவசியம்!

திருவூர் வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயம் செய்யும் நிலங்களில் உள்ள மண்ணில், பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவிலும், குறிப்பிட்ட விகிதத்திலும் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.இதேபோல், அதிக கார, அமிலநிலை மற்றும் உவர்நிலை இல்லாமல், நல்ல வடிகால் வசதியோடு இருக்கும் மண்ணே வளமான மண்ணாகும். குறைய காரணம் , விளை நிலங்களில், உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்களைத் தொடர்ந்து சாகுபடி செய்வது, ரசாயன உரங்களை மட்டும் அதிக அளவில் […]

March 10, 2018 Editor
விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா? இயற்கை உரம்

விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா?

அக்ரிசக்தி யின் வாசகர் திரு.சரவணன் அவர்களுக்கு ஐயா வணக்கம், நாங்கள் மல்லிகை செடிகள் பராமரிக்க செலவு அதிகமாகிறது .. வாரம் ஒருமுறை பூச்சி மருந்து,துளுப்பு மருந்து என 400, 500 ஆகுது. இயற்கையான முறையில் மல்லிகை செடியை தாக்க கூடிய புழு, பூச்சிகளை அழிக்கவும், மொட்டுகள்,தூளிர்ந்து வரவும் ஏதேனும் வழி உள்ளதா? விசயமறிந்தவர்கள் பதில்களை இங்கயே அவர்கள் பெயருடன் பதிவு செய்யலாம், இது அனைவருக்கும் பயனுள்ளது. நன்றி திரு.சரவணன் விரைவில் விபரங்களுடன் உங்களை தொடர்பு கொள்கிறோம்

December 29, 2017 Editor
தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை! இயற்கை உரம்

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

திரு.மதுபாலன் காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும் இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது. ஒரு தென்னை மரத்துக்கு […]

December 27, 2017 Editor
பசுந்தாள் உரம் தக்கைப்பூண்டு! இயற்கை உரம்

பசுந்தாள் உரம் தக்கைப்பூண்டு!

தக்கைப்பூண்டு ஒரு பசுந்தாள் உரம்.தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. அதிகமான செலவும் இருக்காது. ஏனெனில் இதன் வேர்களில் முடுச்சிகள் இருப்பதால் அவற்றில் ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள் வாழ்வதற்க்கு ஏற்றதாக இருக்கிறது. இதன் வேர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் சேர்க்கிறது. 45 நாள்கள் முதல் 70 நாள்களுக்குள் பூப்பூத்தவுடன் அதனை அப்படியே அந்த நிலத்திலேயே மடக்கி உழுதுவிட வேண்டும். இப்பயிரானது 6 அடி […]

December 25, 2017 senthamil
இன்று உலக மண் வள தினம்(World Soil health Day) இயற்கை உரம்

இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)

நமக்கு தெரியுமா குளோபல் வார்மிங் போன்று சாயில் வார்மிங் பிரச்னையும் நமக்கு அதிகரிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலம் நமக்கு கிடைப்பதில்லை. மேலும் செயற்கை .உரங்களை பயன்படுத்தி நாம் செய்யும் விவசாயம் நம் மண்ணை மீண்டும் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்லும். வரும் 2050ம் ஆண்டிற்குள் உலகத்தின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போன்று உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இருக்கின்ற வளங்களையும் சேதாரமின்றிப் பாதுகாக்க […]

December 5, 2017 Editor
பசுந்தாள் உரமிடுதல் இயற்கை உரம்

பசுந்தாள் உரமிடுதல்

            நம் நாட்டில் அதிகளவு அங்கக உரங்களையே நிலத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் மண் வளம் குறைந்து மகசூலும் குறைந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது பசுந்தாள் உரமிடுதல், மட்கிய உரமிடுதல் போன்றவற்றின் பயன்பாட்டால் இந்தியாவானது உணவு பற்றாக்குறையிலிருந்து மீண்டும் உணவு சேமிப்பிற்கு மாற்றமடைந்துள்ளது. மேலும் பசுந்தாள் உரமானது குறைந்த விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால் நம் நிலத்திலேயே விதைத்தும் நிலத்தின் வளமையை பெருக்கலாம்.பசுந்தாள் உரமானது மண்ணின் அங்கக பொருட்களின் தன்மையை அதிகரிக்கிறது. […]

September 29, 2017 editor news
நார்க்கழிவு உரம் இயற்கை உரம்

நார்க்கழிவு உரம்

          தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல் பெறலாம்.            தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கப்படுகிறது.பிரித்தெடுக்கும் போது, நார் கழிவுகள் கிடைக்கின்றன.இவைகள் தென்னை நார்க் கழிவுகள் என்றழைக்கப்படுகின்றனர்.நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன. நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, […]

September 15, 2017 editor news