32°C

editor news

  நீரா பானம் மரங்கள்

  நீரா பானம்

    நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம்.     நீராவை பதநீர் இறக்குவது போல இறக்கமுடியாது. 5டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் அது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது சீவப்பட்ட தென்னம் பாளைகளில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டி களை பொருத்தி கட்டிவைக்கவேண்டும். ஐஸ் பானைகளில் சேகரமாகும் நீராவை இறக்கி, தயாராக உள்ள ப்ரீஸர் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி, கூலிங் சென்டர் எனப்படும் குளுகுளு சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு சென்று அங்குள்ள டேங்கரில் நிரப்ப […]

September 12, 2017 editor news
கொடுக்காய்ப்புளி மரங்கள்

கொடுக்காய்ப்புளி

              கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி,அவரைபோன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும், கிணற்று மேட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றன.                இது, கோணப் புளியங்காய், கோணக்காய், சீனிப்புளியங்காய்,கொரிக்கலிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.பழந்தமிழர்களால் […]

September 12, 2017 editor news
தென்னை மரம் விவசாய கட்டுரைகள்

தென்னை மரம்

முன்னுரை:             மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை. “பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு” என்று ஒரு பாடல் வரிகள் உண்டு. தென்னை மரத்தை பற்றி பார்ப்போம். வளர் இயல்பு: “ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்“ தாவரவியல் பெயர் :கோக்கஸ் நியூசிஃபெரா (Cocos […]

September 11, 2017 editor news
நுண்ணுயிரிகளின் நன்மைகள் பயிர் பாதுகாப்பு

நுண்ணுயிரிகளின் நன்மைகள்

இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, […]

September 11, 2017 editor news
நந்திவட்டம் மருத்துவ குணங்கள்

நந்திவட்டம்

   இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.    இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.     பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர்.     சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 […]

September 11, 2017 editor news
பசுமைப் பணியில் திண்டி மா வனம்! மரங்கள்

பசுமைப் பணியில் திண்டி மா வனம்!

‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுசனையே கடிக்கிறயா? எனக் கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மனிதந்தான் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து, இறுதியாகப் பூமிக்கு மழையைக் கொண்டுவரும் மழைத்தூதர்களான மரங்களையும் அழித்தொழித்து விட்டான். அதன் விளைவு, பருவம் தவறிய மழை; வாட்டி எடுக்கும் வெயில்; அடிக்கடி மிரட்டும் புயல்… எனத் தன் சீற்றத்தைப் பல வகைகளிலும் காட்டத் தொடங்கியுள்ளது இயற்கை. ஒரு பக்கம் இயற்கை வளங்களை அழித்துக் கொண்டே போனாலும் இன்னொரு பக்கம் இயற்கை வளங்களை […]

September 10, 2017 editor news
கடக்நாத் அல்லது கருங்கால கோழி கால்நடை

கடக்நாத் அல்லது கருங்கால கோழி

கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி,கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தது. இது “‘காளி மாசி“‘ எனவும் அழைக்கப்படுகிறது. அதிக வெப்பத்தையும் குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் பின்பகுதியில் கருப்புக் கோடுகளுடன் காணப்படும். பருவம் அடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும். தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும் இக்கோழி இறைச்சி, 25 […]

September 10, 2017 editor news
ஒட்டுச் செடிகள் பயிர் பாதுகாப்பு

ஒட்டுச் செடிகள்

வணிகமுறை இனப்பெருக்கமுறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு. செடியின் கிளையை வளைத்து மண்ணில் நுழைத்து அதன் மேல் மண்ணிட்டு பின் தொடந்து நீர்ப்பாய்ச்சினால், மண்ணில் நுழைக்கப்பெற்ற பகுதியின் அடியில் புத்தும் புதிய வேர்கள் உருவாகும்; அதன் விளைவாக புதியச்செடி துளிர்க்கும். துளிர்விட்ட புதிய செடி ஓரளவிற்கு வளர்ந்தவுடன் அச்செடி மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனிச்செடியாக வளர்க்கப்படும். ஒட்டுக்கட்டுதலின் போது தாய்ச்செடியிலும் வேர்ச்செடியிலும் ஒரே மாதிரியான காயங்கள் ஏற்படுத்தி இணைத்துப் பின்னர் துணியினால் அல்லது பாலீதீன் பேப்பர் மூலம் கட்டி விடுவர். […]

September 10, 2017 editor news
உடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்!!! தொழில்நுட்பம்

உடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்!!!

சந்தையில் தற்போது கிடைக்கும் தின்பண்டங்கள் மாவுச் சத்து மற்றும் சர்க்கரை நிறைந்தவைகளாகவும், உடல் நலத்தை பேணும் சத்துக்கள் குறைந்தவையாகவும் உள்ளது. குளிர்பானங்கள், பிஸ்கோத்துகள், மிட்டாய் வகைகள், சிப்ஸ்கள் ஆகியவை அதிக கலோரிகள் உடையதாகவும், பழம், காய்கறிகறிகள், தானியங்கள் மற்றும் விதைகளைவிட சத்து குறைந்ததாகவும் உள்ளது. இவ்வாறு மாவுச் சத்துக்கள் அல்லது சர்க்கரைச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தொடர்ந்து உண்பதால் உடலில் கொழுப்புச் சத்துகள் மற்றும் இரத்தத்தில் குளுகோஸ் (கிளைசெமிக் இண்டெக்ஸ் அட்டவணையை காணவும்.) அளவு […]

September 9, 2017 editor news
ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்! தொழில்நுட்பம்

ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!

‘உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் எண்ணெயும் ஒரு காரணி’ என மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் சொல்லிவருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் பாக்கெட் எண்ணெய்க்கு மாற்றாக இயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயைத்தான் பரிந்துரைக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். அதனால் சமீபகாலமாக மரச்செக்கு எண்ணெய் குறித்த விழிப்பு உணர்வும் அதன் பயன்பாடும் அதிகரித்துவருகின்றன. இதனால் முடங்கிக் கிடந்த மரச்செக்குகள் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை […]

September 9, 2017 editor news