32°C

editor news

தேனீ வளர்ப்பு (பகுதி – 2) தொடர்

தேனீ வளர்ப்பு (பகுதி – 2)

தேனீ வளர்ப்பின் வரலாறு அன்று முதல் இன்று வரை…. பழங்காலங்களில் தேன் கூடானது விழுந்த மரங்களிலும் மரப் பொந்துகளிலும் கட்டப்பட்டது. இதை உணர்ந்த நமது விஞ்ஞானிகள் தேனீக்களை மர சட்டங்களில் அடைத்து வர்த்தக ரீதியில் வளர்க்கத் தொடங்கினர். தேனீ வளர்ப்பில் 16 ஆம் நூற்றாண்டு வரை எந்த வளர்ச்சியும் இல்லை. மனிதன் இயற்கையில் காணப்படும் தேன் கூடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தபோதுதான் முறையான தேனீ வளர்ப்பானது தொடங்கியது. நவீன தேனீ வளர்ப்பின் வளர்ச்சியானது 1500 முதல் 1851 […]

August 17, 2020 editor news
விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!!  (பகுதி – 4) தொடர்

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 4)

‘விலை – பாதுகாப்பு’: வேளாண்மை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்வது ஆகும். இன்று நாம் எந்த பொருளைக் கடையில் சென்று வாங்கினாலும், அதற்கு அதன் உற்பத்தியாளர் நிர்ணியித்த விலையை நாம் கொடுக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைபொருட்களுக்கு யாரால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது? ஒரே பட்டத்தில் பயிர் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் சந்தைக்கு வருவதால், விளைச்சலை விற்பதில் உழவர்களிடையே ஏற்படும் போட்டி – அதே நேரத்தில், வியாபாரிகளிடையே […]

August 17, 2020 editor news
அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி தொழில்நுட்பம்

அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி

உலக அழகி கிளியோபாட்ராவுக்கு மிகவும் விருப்பமான  பழம் – அத்திப்பழம் என்று நீங்கள் அறிவீரா ? ஆம் உண்மைதான் கிளியோபாட்ராவுக்கு விருப்பமான பழங்ககளுள் ஒன்று இந்த அத்திப் பழம். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழத்தை அப்படியேவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். அத்தி மரம் மிகவும் மருத்துவ குணம் பெற்றது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டது. தினசரி 2 பழங்களை […]

August 17, 2020 editor news
களை, களைக்கொல்லி, களைக்கொல்லி பரிந்துரை, களைக்கொல்லியின் எதிர்மறைகள் என்றால் என்ன? பயிர் பாதுகாப்பு

களை, களைக்கொல்லி, களைக்கொல்லி பரிந்துரை, களைக்கொல்லியின் எதிர்மறைகள் என்றால் என்ன?

களை என்றால் என்ன ? களைகள் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் விரும்பத்தகாத தாவரங்கள். பண்ணை வயல்கள், தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள்(புல்வெளிகள்) போன்ற மனித கட்டுப்பாட்டு அமைப்புகளில் தேவையற்ற தாவரங்கள். களைக்கொல்லி என்றால் என்ன ? வேதிப் பொருள்/ இயற்கையான பொருட்களைக் கொண்டு ஒரு தாவரத்தை கொல்வதே களைக்கொல்லியின் செயலாகும். இயற்கை களைக்கொல்லி, செயற்கை களைக்கொல்லி ? இயற்கை களைக்கொல்லி இயற்கையான பொருட்களைக் கொண்டு களைகளைக் கட்டுப்படுத்தும் முறையாகும். இதில் மாட்டு கோமியம் மற்றும் இதர […]

August 6, 2020 editor news
நெற்பயிரில் குலை நோய் தாக்குதலும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

நெற்பயிரில் குலை நோய் தாக்குதலும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து 2019-20 பயிர் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த  நெற்பயிர் சாகுபடிக்கு முக்கிய சவாலாக இருப்பது குலை நோய் ஆகும். நெல் பயிரிடும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் இந்நோய் […]

August 6, 2020 editor news
நிலக்கடலையைத் தாக்கும் சிவப்பு கம்பளிப்புழு மேலாண்மை பயிர் பாதுகாப்பு

நிலக்கடலையைத் தாக்கும் சிவப்பு கம்பளிப்புழு மேலாண்மை

இந்தியாவில் நிலக்கடலையானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். நிலக்கடலையில், சிவப்பு கம்பளிப்புழுவானது 25 முதல் 90 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும் மிகவும் மோசமாக பூச்சியாகும். விலங்கியல் பெயர்: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா (Amsacta albistrica) பொதுப்பெயர்: சிவப்பு கம்பளிப்புழு மற்றும் ரோமப்புழு   தாக்குதலின் அறிகுறிகள்: முட்டையில் இருந்து வெளியே வந்த இளம் ரோமப்புழு, இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும். நன்கு முதிர்ந்த‌ புழுவானது, இலையின் நரம்புப் பகுதியை விட்டு இடைப்பட்ட இலைப்பகுதியை உண்டு சேதப்படுத்தும். […]

August 6, 2020 editor news
வறட்சியை எதிர்த்து போராடும் திறன் பெற்ற  இளஞ்சிவப்பு மெத்திலோட்ரோப் பாக்டீரியா (பிபிஎப்எம்) – பயன்கள் தொழில்நுட்பம்

வறட்சியை எதிர்த்து போராடும் திறன் பெற்ற இளஞ்சிவப்பு மெத்திலோட்ரோப் பாக்டீரியா (பிபிஎப்எம்) – பயன்கள்

வறட்சியின் தீவிரம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு விவசாயிகளையும் பயிர்களையும் காலநிலை மாற்றத்தின் கொடூரத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது. பாக்டீரியா பெரும்பாலும் பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட சூழலில் வாழ்கிறது. இத்தகைய வசிப்பிடங்களில் ஒன்று ஃபைலோஸ்ஸ்பியர் ஆகும், அங்கு படிமுறை மெத்திலொட்ரோபிக் பாக்டீரியா எங்கும் நிறைந்ததாகவும், ஏராளமாகவும் காணப்படுகிறது. பாக்டீரியாக்கள் பல்வேறு சூழலில் வாழ்கின்றன. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா  ஏராளமாக இலைகளைச் சுற்றி மற்றும் மேற்புறத்தில்  காணப்படும். மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா மெத்தைலோ பாக்டீரியா பேரினத்தைச் சேர்ந்தவை. […]

August 6, 2020 editor news
தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-2) தொடர்

தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-2)

  திருச்சி 1: (TRY 1) இதன் வயது 130-140 நாட்கள். சாயாத இரகம். அரிசி குட்டையாக, பருமனாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.3 டன் விளைச்சல் கிடைக்கும். இது களர் மற்றும் உவர் நிலத் தன்மையை தாங்கி வளரக்கூடிய நெல் இரகமாகும். திருச்சி 3: (TRY 3) இது 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகமாகும். ஏடிடீ 43 மற்றும் சீரகச் சம்பாவை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். சாய்வதில்லை. அரிசி நடுத்தரப் பருமனாக, […]

August 6, 2020 editor news
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-5) தொடர்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-5)

மாப்பிள்ளை சம்பா இட்லி: தேவையான பொருட்கள்: மாப்பிள்ளை சம்பா அரிசி 3 கப் இட்லி அரிசி 1 கப் உளுந்து 1 கப் வெந்தயம் 1/2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை: மாப்பிள்ளை சம்பா, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும். மாப்பிள்ளை சம்பா மற்றும் இட்லி அரிசியையும் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும். இப்போது […]

August 5, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-4) ஆறு மிரண்டால் நாடு கொள்ளாது! தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-4) ஆறு மிரண்டால் நாடு கொள்ளாது!

இயல்பு என்பது இன்பம் மட்டுமல்ல துன்பமும் தான்; காற்றுக்கு இயல்பு தென்றல் மட்டுமல்ல புயலும் தான்; தீபம் மட்டுமல்ல பெரும் பிளம்பும் நெருப்பின் வடிவம்தான். அதுபோல்தான் நீரும் வெறும் கட்டுக்குள் மட்டும் ஓடிய ஒரு ஆறு, உலகில் இல்லை எல்லாம் கரை உடைத்து வெள்ளம் கண்டவை தான்.  இவர்கள் இவ்வளவு தான் இயற்கையை எளிதில் அடக்கிவிடலாம் என்று மனிதன் எண்ணிய போதெல்லாம் மீண்டும் தன் கட்டற்ற பலத்தால் இயற்கை அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. காலத்தால் […]

August 5, 2020 editor news