Vivasayam | விவசாயம் ⚡ AMP

பாசுமதி அரிசி உற்பத்தியில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதை குறைக்க திட்டம் : பஞ்சாப் மாநில அரசு

By Editor | Sep 06, 2018

சண்டிகர்: பஞ்சாபில் விளையும் பாசுமதி அரிசியில் பூச்சிக்கொல்லி அதிகமாக இருந்த குற்றச்சாட்டால் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசசு dissuade, Acephate, Cabandazim, Thiamethoxam, Tricyclazole மற்றும் Triazophos ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துங்களை பயன்படுத்த பொதுக் கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட முயற்சி செய்துவருகிறது.

பஞ்சாப் மாநிலர அரசியின் இந்த முயற்சியினால் இந்த ஆண்டு உற்பத்தியாகும் பாசுமதி அரிசியில் இரசாயண அளவு குறைந்தே இருக்கும் என்று அம்மாநில உணவு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் இதுபோன்ற முயற்சிகள் பெருகவேண்டும். அதே சமயம் நஞ்சில்லா விவசாயத்தினை ஊக்கவிக்கு அரசும் விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்