Skip to content

அவரைச்சாறு

1. அவரைப்பிஞ்சுகள்
2. பனைவெல்லம்
3. வெண்ணெய்
4. தண்ணிய நீர்

தேவைக்கொப்ப இவற்றையெல்லாம் ஒன்றாய் அரைத்து வடிகட்டி, பிஞ்சுச்சாற்றினைப் பருகின பிஞ்சுகள் பள்ளிகளுக்குப் பறந்தன.

கங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும்
பொங்குதிரி தோடததோர் புண்சுரததோர் தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் காழிறையா
வெண் முதிரைப்பிஞ்சாம் விதி.

விதைமுதிராத அவரைப்பிஞ்சு விழிக்குள் முதிர்ந்த நீர்க்கட்டிகள், விரணமென்கிற தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, மிகுதியான உடல்வெப்பம் முதலானவற்றைக் கட்டுக்குள் இருத்துமென்றறிக!!

Leave a Reply