”அறுவடை செய்த சேனைக் கிழங்குலிருந்து தனியாக நீட்டிக் கொண்டிருக்கும் சின்னக் கிழங்குதான் விரலிக்கிழங்கு. இதைத் தனியே எடுத்துச் சேகரித்து வைத்து, விதைக்கிழங்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சேனைக்கிழங்கு ஊன்றும்போதும் தனியாகக் குறைந்த இடத்துல இந்த கிழங்கைச் சாகுபடி செய்துவந்தால், அடுத்த முறைக்கான விதைக்கிழங்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் விதைக்கிழங்குச் செலவு மிச்சமாகும். மேலும், நாமே விதைக்கிழங்கை உற்பத்தி செய்யும்போது தரமாகவும் மண்ணின் தன்மைக்கு ஏற்றதாகவும் இருக்கும். வெளியில் வாங்கி நடவு செய்தால், முளைப்புத்திறனைத் தெரிந்துகொள்ளவே பல நாள்கள் ஆகும்
விரலிக்கிழங்கே விதைக்கிழங்கு!
