Vivasayam | விவசாயம் ⚡ AMP

இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது

By Editor | Dec 05, 2015

தற்போது ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளார். தற்போது தாவரங்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான பாதிப்பினை தருகிறது.

தற்போது Bio-organic மற்றும் மருத்துவ வேதியியல் கழகம் வேதியியல் பொருட்களை உபயோகிப்பதால் வெள்ளை Planthopper, Sogatella Furcifera பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்கிறது. ஆனால் தற்போது 5 பொருட்களை கொண்ட Phenoxyalkanoic அமிலத்தை ரசாயனத்தில் கலந்து நெற்பயிருக்கு தெளிப்பதால் பூச்சிகள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூச்சிகொல்லிகள் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் உலகம் குழுவதும் பயன்படுத்துகின்றனர்.

நெற்பயிரினை அழிக்கும் பூச்சிக்கொல்லிகளில் மிகப்பெரிய பூச்சிகள் வெள்ளை Planthopper, Segathella இவை மஞ்சள் செடி, தாவரங்கள் மற்றும் தானியங்களில் அதிக சேதத்தினை கொடுக்கிறது. இந்த பூச்சி கொல்லிகள் ”Hopper burn” மூலம் அரிசியினை தாக்குகிறது. இது தாவரங்கள் மகரந்த சேர்க்கை ஏற்படுத்தும்போது பாதிப்பினை ஏற்படுத்தும். இது அரிசியில் கருப்பு குள்ள வைரஸை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து தாவரங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால் இந்த வைரஸ்கள் அதிக அளவில் பெருகி தானியங்களுக்கு அதிக பாதிப்பினை அளிக்கிறது. இதனை தவிர்க்க Zhejiang University சீனா ஆராய்ச்சியாளர்கள் புதிய வழியினை கண்டறிந்துளனர்.

விசேஷமாக வடிவமைக்கப்பட்ட திரையில் கணினியை பயன்படுத்தி எந்த அளவிற்கு ரசாயனங்கள் தாவரத்திற்கு பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர். அவர்கள் மேற்கண்ட ஆராய்ச்சிப்படி 29 Phenoxyalcanoic அமிலத்தை ஒன்றினைத்து புதிய இரசாயனத்தை உருவாக்கி நெற்பயிரை பாதுகாக்க திட்டமிட்டுள்ளனர்.

Phenoxyalkanoic அமிலத்தை Planthopper கொண்டு நெற்பயிருக்கு உபயோகித்தபோது அது நெற்பயிரினை அதிக அளவில் பாதுகாக்கிறது என்று டாக்டர் யாங்கூன் லூ கூறினார். இந்த முறை கண்டிப்பாக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் என்று கூறினார்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151202084505.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli