Vivasayam | விவசாயம் ⚡ AMP

ஈயத்தால் ஆண்டிற்கு 1,00,000 பறவைகள் இறப்பு

By Editor | Nov 27, 2015

University of Oxford பல்கழைக்கழகத்தின் ஆராய்ச்சியில், தற்போது உலகில் 1,00,000 ஈர நில பறவைகள் அழிந்து வருகிறது என்று கூறுப்படுகிறது. ஏன் இத்தனை பறவைகள் இறக்கிறது என்று ஆய்வு செய்ததில் அந்த பறவைகள் Lead விஷத்தால் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு காரணம் Lead வெடி பொருட்கள் பயன்பாடு அதிகரித்தலே என்று கூறப்படுகிறது.

பிரிட்டனில் முன்னனி Lead  வெடிப்பொருட்களின் பயன்பாட்டால் காட்டுப் பறவைகள் மற்றும் ஈரநில பறவைகள் அழிந்து வருவதாக RSPB சுற்றுச் சூழல் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. Oxford  University ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ”லார்டு கிரேப்ஸ்” வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் அது மனிதனுக்கும், விலங்கிற்கும் அதிகமான பாதிப்பினை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

அதனால் இனி யாரும் ஈயம் கலந்த வெடிப்பொருட்களை வேட்டைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கூறி உள்ளார். ஈய வெடிப்பொருட்களை கொண்டு வேட்டையாடினால் அதில் உள்ள விஷத்தன்மை மனிதனுக்கு மிகுந்த பாதிப்பினை கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

http://www.bbc.com/news/science-environment-34861602

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli