கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இடதுபுறக்கால்வாயின் கடைமடை ஏரியான, பாளேகுளி ஏரியில் இருந்து, கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட, 27 ஏரிகளுக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து, தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, கே.ஆர்.பி., அணை இடதுபுற நீட்டிப்பு பாளேகுளி-சந்தூர் பயனாளிகள் சங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, நேற்று, பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் நடராஜன் தண்ணீரைத் திறந்து வைத்தார். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்ப வேண்டும் என்பதற்காக, சுழற்சி முறையில் தண்ணீர் விடப்படுகிறது, என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Related Posts
விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி
இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 , 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதை… Read More »விவசாயிகள்தான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் : ராகுல்காந்தி
தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்
சிலி, அர்ஜென்டினா மற்றும் போல்க் லேண்ட் தீவுகளின் புற்கள் நிறைந்த பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மெகல்லன் வாத்துக்கள் வாழ்கின்றன. இவற்றிற்கு மேட்டு நில வாத்து (Upland Goose) என்றொரு பெயரும் உண்டு. இவற்றின்… Read More »தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்
அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள ஜமைக்காவின் தேசிய பழம் – அக்கி ஆப்பிள்
மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இம்மரங்கள் சோப் பெர்ரி குடும்பத்தைச் சார்ந்தவை. லிச்சி மற்றும் லொங்கன் பழங்களும் இக்குடும்பத்தைச் சார்ந்தவையே. அச்சி, அகீ, அயி, அக்கி ஆப்பிள் (Ackee Apple) என பல பெயர்களால்… Read More »அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள ஜமைக்காவின் தேசிய பழம் – அக்கி ஆப்பிள்
happiest news…. at the same time we also want water for our lake in vikkinampatti which is placed next to santhoor…